Saturday, December 17, 2011

பகுத்தறிவு வளர்ச்சியாலேயே உலகம் முன்னேறியது!


தந்தை பெரியார் அவர்கள் அறிஞர் அண்ணா அவர்களின் உருவப் படத்தினை திறந்து வைத்து, அண்ணா பேரவையினைத் துவக்கி வைத்து ஆற்றிய அறிவுரையாவது:-
இன்றைய தினம் அண்ணா பேரவையினைத் துவக்கி வைக்கும் இந்நிகழ்ச்சியில் அண்ணாவின் படத்தினை திறந்து வைக்கும் வாய்ப்பினை எனக்களித் திருக்கிறார்கள். நமது நாட்டில் அண்ணா பேரவை என்னும் பெயரால் பகுத்தறிவுக் கொள்கையோடு இப்படிப்பட்ட ஒரு அமைப்பு அமைவது குறித்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
அண்ணா நமக்கெல்லாம் சாதாரண மான நண்பராக, மனிதராக இருந்தாலும் அவர் ஆற்றிய தொண்டுகளைப் பார்க்கும் போது அவரை ஒரு மகாபுருஷர் என்றே சொல்ல வேண்டும். அண்ணா பகுத்தறிவு வாதி, நாத்திகர், திராவிடர் கழகத்திலிருந் தவர்; புராண - இதிகாச கடவுள் புரட்டுக்களைப் பற்றியெல்லாம் எழுதியவர்; இராமாயணத்தைக் கொளுத்தியவர்.
பகுத்தறிவைப் பரப்புவது சாதாரண காரியமல்ல; பகுத்தறிவு என்றால் நாத்திகம். அதைப் பரப்பி ஒரு ஆட்சியை நிறுவுவது என்றால் அது சாதாரணமான காரியமல்ல. அண்ணா ஒருவர் தான் எந்த புரட்சியும் - கொலையும் இல்லாமல் பகுத்தறிவு ஆட்சியை நிறுவியவராவார். லெனின் பகுத்தறிவு ஆட்சியை உண்டாக்கினார் என்றால் பாதிரிகள், பணக்காரர்கள், மதவாதிகளைக் கொன்று உண்டாக்கினார். ஆனால், அண்ணா ஒருவர்தான் ஒரு சொட்டு இரத்தம் சிந்தாமல் பார்ப்பானை - பணக்காரனைக் கொல்லாமல் பகுத்தறிவு ஆட்சியை அதுவும் மக்களின் ஆதரவைப் பெற்று நிறுவியவராவார். இதுவரை இருந்த ஆட்சியாளர்கள் யாவரும் காந்தி சொன்னார், கடவுள் சொன்னார் என்று சொல்லிக் கொண்டு போனார்களே ஒழிய, அறிவு என்ன சொல்கிறது என்று சொல்ல வில்லை. அதன்படி நடக்கவில்லை. அண்ணா ஒருவர்தான் அறிவுப்படி நடக்கிறேன் என்று துணி வாகச் சொல்லி நடந்து காட்டினார். அண்ணா அவர்கள் இருந்தால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் இந்தக் கருத்துகளை பரப்பி இருப்பார். இங்கு அண்ணா படத்தை திறந்து வைக்கிறோம் என்றால் அவர் கொள்கைகளைப் பின்பற்றி பரப்ப வேண்டுமே ஒழிய, படத்தை வைத்துக் கும்பிடுவதால் பலன் இல்லை.
உலகமெல்லாம் முன்னேறியதற்குக் காரணம் பகுத்தறிவு வளர்ச்சியாலேயேயாகும். உலகமெங்கும் 100 வருஷ காலமாக பகுத்தறிவு ஸ்தாபனங்கள் வளர்ந்து வந்திருக்கின்றன. நமது நாட்டில் இந்த ஒரு ஸ்தாபனம் தான் 50 ஆண்டு காலமாக தொண்டாற்றிக் கொண்டு வருகிறது. வேறு ஸ்தாபனங்கள் தோன்ற வில்லை. ஒரு சில ஸ்தாபனங்கள் இக்கொள்கையை பரப்ப முன்வந்து அழித்து ஒழிக்கப்பட்டு விட்டன. நம் நாட்டைத் தவிர, உலகின் மற்ற நாடுகளில் இக்கொள்கையையுடைய ஸ்தாபனங்கள் நிறைய பல பெயர்களில் தொண்டாற்றிக் கொண்டு வருகின்றன.
இன்றைய தினம் இந்த ஸ்தாபனங்கள் வளர்ந்ததன் காரணமாக உலகில் சுமார் 120 கோடிக்கு மேலான மக்கள் கடவுள் நம்பிக்கையற்ற பகுத்தறிவுவாதிகளாக இருக்கிறார்கள். புத்தன் இந்தக் கொள்கையுடை யவன்தான். புத்தன் என்றால் புத்தியுடையவன். புத்தியைக் கொண்டு ஆராய்பவன் என்றுதான் பொருள். இப்படி தங்கள் புத்தியைக் கொண்டு ஆராய் கின்ற மக்கள் இன்று உலகின் பல பாகங்களிலும் இருக் கின்றார்கள். இவர்கள் அத்தனை பேரும் நாத்திகர் களேயா வார்கள். சிந்தனையாளராக இல்லாத நாத்தி கர்கள் 200 கோடி பேர்கள் உலகத்தில் இருக்கிறார்கள். சிந்தனையாளராக இல்லாத நாத்திகர்கள் என்றால் கடவுள் நம்பிக்கைக்காரர் களாகத் தங்களைக் காட்டிக் கொள்பவர்களாவார்கள்.
தங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்று காட்டிக் கொள்கிற எவரும் கடவுள் நம்பிக்கை யாளர்கள் என்கின்ற எவரும் கடவுளை நம்பி எந்தக் காரியத்தையும் கடவுளிடம் விடுவது கிடையாது. தலைவலி வந்தால்கூட டாக்டரிடம்தான் செல் கிறார்கள். இவர்கள் எப்படி உண்மையான கடவுள் நம்பிக்கைக்காரர்களாக இருக்க முடியும்? எனவே தான், இவர்களை சிந்தனையாளராக இல்லாத நாத்திகர்கள் என்கின்றேன். பார்லிமெண்டிலே நேற்று பேசி விட்டானே, வேதத்தையும் - சாஸ்திரத்தையும் குப்பையிலே எறிந்து விட்டு இன்றைய அறிவுப்படி நடக்க வேண்டும் என்று இந்தக் கடவுள் - மதம் - சாஸ்திரம் - வேதம் இவை யாவும் ஒழிக்கப்பட்டால் தான் நமது மக்கள் மற்ற உலக மக்களைப் போல முன் னேற்ற மடைய முடியும். அதன் பேராலே உழைக் கிறதற்கு ஒரு ஜாதி. அதன் பேராலே பிழைக்கிறதற்கு ஒரு கூட்டம் இருப்பதால் இதை தடுத்துக் கொண்டு வருகிறது. இந்தக் கூட்டம் மக்கள் அறிவு பெற்றால் தானாகவே  அழிந்துவிடும்; அல்லது இந்த நாட்டை விட்டு வெளியேறிவிடும்; அதுவும் இல்லாவிட்டால் தங்களையே நம்மோடு சேர்ந்து விடும். மக்கள் அறிவற்றவர் களாக இருக்கிற வரை இது வளர்ந்து கொண்டுதானிருக்கும்.
இப்போது நம் மக்களுக்கு தேவையானது பகுத்தறிவேயாகும். இந்தப் பேரவை பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டு அதற்காக அமைக்கப் பட்டதானால் பகுத்தறிவு என்பது வெளியே தெரிகிற மாதிரி இதன் பெயர் இருக்க வேண்டும். அண்ணா பகுத்தறிவுப் பேரவை என்றிருக் கலாம். நாங்கள் முதலில் உண்மை நாடுவோர் சங்கம்  என்பதாக ஈரோட்டில் ஒரு நாத்திக சங்கத்தைத் துவக்கினோம். அதில் 500-க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து உறுப் பினர்களாகி இருந்தார்கள். அதன் பெயரால்தான் முதன் முதலில் குடிஅரசு என்று ஒரு பத்திரிகை நடத்தினேன். அது பலரை வளர்த்தது. இந்த கரு ணாநிதி, அண்ணாதுரை, நெடுஞ்செழியன், நடராசன் எல்லாம் அதில் பணியாற்றியவர்கள்தான். அதிலிருந்து வெளியே பிரச்சாரத்திற்குச் செல்ல வேண்டியிருந்த தால் அதை கவனிக்க முடியவில்லை. அதன் பின் அரசியலில் ஈடுபட்டதால் அதை நிறுத்த வேண்டிய தாயிற்று.  அதன்பின் விடுதலையை ஏற்படுத்தினேன். அது சமுதாயத்திற்குப் பயன்படாமல் போனதோடு அரசியலிலும் அவ்வளவாக செயல்பட முடியாமல் போய்விட்டது என்றாலும், விடுதலையில் வெளி வருகிறது என்றால், உத்தியோகஸ்தர்கள் பயப்படுகிற அளவிற்கு இருக்கிறது. அரசாங்கமும் யோசிக்கும் படியாக இருக்கிறது என்றாலும் அது மாதம் இதுவரை ரூ. 3,000 நஷ்டத்தில் நடந்தது. இப்போது ரூ. 4,000 நஷ்டத்தில் நடக்கிறது. ஏன் இப்போது ரூ. 4,000 நஷ்டம் என்கிறேன் என்றால், ஒரு இலட்ச ரூபாய்க்கு அதற்காக மெஷினை வாங்கி இருக்கிறது.  அதற்கு வட்டி பார்த்தால் ரூ. 1,000த்துக்கு மேலாகும். விடுதலை ஆபீஸ் இருக்கிற கட்டிடத்தை வாடகைக்கு விட்டால் குறைந்தது ரூ. 2,000 வாடகை வரும். இப்படி நஷ்டத்தில் ஏன் நடத்த வேண்டி இருக்கிறதென்றால், இந்த வேலையைச் செய்ய வேறு பத்திரிகைகள் இல்லாததாலேயேயாகும். மற்ற எந்த பேப்பரும்  செய்யாத வேலையை அது செய்கிறது. விடுதலையில் வந்தால் அதிகாரி பயப்படுகிறான். அய்கோர்ட் ஜட்ஜே பயப்படுகிறான். இப்போது பகுத்தறிவு பிரச்சாரத் திற்காக உண்மை என்று ஒரு பத்திரிகை ஆரம்பிக்கிறேன். அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பகுத்தறிவு கருத்து கொண்ட சுமார் 100 புத்தகங்கள் இருக்கின்றன.  அதையெல்லாம் படிக்கச் செய்ய வேண்டும். புத்தகம் போட வேண்டும். கொஞ்சம் வளர்ந்த பின்னர் பத்திரிகைப் போட வேண்டும். இன்னும் அதிகமான உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதோடு அண்ணா பேரவை வளர்ச்சிக்காக ரூ. 100 அன்பளிப்பாக அளித்தார்கள்.
(13.2.1969 அன்று மதுரையில் அண்ணா பேரவையைத் துவக்கி வைத்து தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை - விடுதலை 23.12.1969)

Sunday, December 11, 2011

எது கடவுள்? எது மதம்?


தேவர்கள் என்றும், பல தெய்வங்கள் என்றும், அவற்றின் அவதாரமென்றும், உருவமென்றும், அதற்காக மதமென்றும், சமயமென்றும், மதாச்சாரியார்கள் என்றும், சமயாச்சாரியார்கள் என்றும் கட்டியழு பவர்கள் ஒன்று பகுத்தறிவில்லாதவர் களாக இருக்க வேண்டும்; அல்லது வயிற்றுப் பிழைப்புக்குப் புறப்பட்ட புரட்டர்களாயிருக்க வேண்டும் என்பதை அபிப்பிராயமாகக் கொண்டு, வெகு கால முதலே பல தடவைகளில் பல பெரியார்கள் வெளிப்படுத்தி இருக்கின்றார்கள்.
அதுபோலவே சிவன் என்றோ, விஷ்ணு என்றோ, பிரம்மா என்றோ, அல்லது ஒரு ஆசாமி என்றோ, அல்லது ஒரு உருவமென்றோ கொள்ளுவதும் உண்மை ஞானமற்றவர்களின் கொள்கை என்றும் பலர் சொல்லிவந்திருக்கிறார்கள். இதைத்தான் சுயமரியாதைக்காரர்கள் எடுத்துக்காட்டி வருகிறார்கள். ஆதலால் உலகத் தோற்றமும், அதில் நடைபெறும் உற்பத்தி, வாழ்விப்பு, அழிவிப்பு என்பவையான மூவகைத் தன்மைகளை யும், மேற்படி சாமிகளோ, ஆசாமிகளோ ஒவ்வொரு தன்மையை ஒவ்வொரு ஆசாமி நடத்துகிறான் என்றோ, அல்லது ஒவ் வொரு தன்மைக்கு ஒவ்வொரு ஆசாமி பொறுப்பாளியாய் இருக்கின்றான் என்றோ நினைத்துக் கொண்டிருப்பவர்கள் விசார ஞானமற்றவர்கள் என்றே சொல்லுவோம்.
மற்றபடி மேல்கண்ட ஒவ்வொரு தன்மைக்கும் மேல்கண்ட ஒவ்வொரு பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது என்றும், அது ஒரு உருவமல்ல, ஒரு உருப்படி அல்ல என்றும், உற்பத்தி, வாழ்வு, அழிவு என்னும் தன்மையையும், அத்தன்மைக்கு ஆதார மான தோற்றங்களைத்தான் கடவுள் என்றோ, தெய்வம் என்றோ, சாமி என்றோ, ஆண்டவன் என்றோ கருதுகிறோம் என்பதாகவும், தானாகத் தோன்றிற்று, தானாக வாழ்ந்தது, தானாக அழிகின்றது என்கின்ற யாவும் இயற்கைதான் என்றும் அவ்வியற்கைக்குத்தான் கடவுள், ஆண்ட வன், சாமி, தெய்வம் என்று சொல்லுகின் றோம் என்பதாகவும், மற்றும் இவ்வி யற்கைத் தோற்றங்களுக்கு ஏதாவது ஒரு காரணமோ அல்லது ஒரு சக்தியோ இருக்கவேண்டுமே என்றும், அந்தக் காரணத்திற்கோ, சக்திக்கோதான் கடவுள், சாமி, ஆண்டவன், தெய்வம் என் கின்ற பெயர் கொடுக்கபட்டிருக் கின்றது என்பதாகவும் சொல்லிக்கொண்டு மாத் திரம் இருப்பவர்களிடத்தில் நமக்கு இப்போது பெரியதொரு தகராறு இல்லை.
ஆனால் அந்தக் கடவுள் என்பவை களுக்கு கண்,மூக்கு, வாய், கை, கால், தலை, பெயர், ஆண் பெண் தன்மை, பெண்ஜாதி, புருஷன், வைப்பாட்டி, தாசி, குழந்தை குட்டி, தாய், தகப்பன் முதலிய வைகளைக் கற்பித்து, அவைகளினிடத்தில் பக்தி செய்ய வேண்டும் என்றும், அவற் றிற்குக் கோவில் கட்டிக் கும்பாபிஷேகம் செய்து தினம் பல வேளை பாலாபிஷேகம், படைப்பு, பூஜை முதலியன செய்யவேண்டும் என்றும், அச்சாமிகளுக்குக் கல்யாணம் முதலியவை செய்வதோடு அந்தக் கடவுள் அப்படிச் செய்தார், இந்தக் கடவுள் இப்படிச் செய்தார் என்பதான திருவிளை யாடல்கள் முதலியவை செய்து காட்ட வருஷா வருஷம் உற்சவம் செய்யவேண்டும் என்றும், அக்கடவுள்களின் பெருமையைப் பற்றியும் திருவிளையாடல்களைப் பற்றியும் பாடவேண்டும் என்றும், அப்பாடல்களை வேதமாக திருமுறையாக பிரபந்தமாக அப்படிப்பட்ட கடவுள்கள் உண்டு என்பதற்கு ஆதாரமாகக் கொள்ள வேண்டும் என்றும், அப்பாடல்களைப் பாடினவர்களை சமயாச்சாரியார்களாக ஆழ்வார்களாக, சமயகுரவர்களாக, நாயன்மார்களாக அற்புதங்கள் பல செய்த அவதாரங் களாகக் கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற இன்னும் பல செய்தால் அக்கடவுள்கள் நமது இச்சைகளை நிறைவேற்றுவார்கள் என்றும், மற்றும் நாம் செய்த - செய்கின்ற - செய்யப்போகின்ற எவ்வித அக்கிரமங்களையும், அயோக்கி யத்தனங்களையும், கொடுமைகளையும் மன்னிப்பார் என்றும் சொல்லப்படுபவை களான மூடநம்பிக்கையும் வயிற்றுப் பிழைப்பும் சுயநலப்பிரசாரமும் ஒழிய வேண்டுமென்பதுதான் நமது கவலை. ஏனெனில், இந்நாட்டில் பார்ப்பன ஆதிக்கத்திற்கும், மக்களை மக்கள் ஏமாற்றிக் கொடுமைப்படுத்துவதற்கும், மற்ற நாட்டார்கள்போல நம் நாட்டு மக்களுக்குப் பகுத்தறிவு விசாலப்படாமல் மற்ற நாட்டார்களைப்போல விஞ்ஞான (சையன்ஸ்) சாஸ்திரத்திலே முன்னேற்ற மடையாமல் இருப்பதற்கும், அந்நிய ஆட்சிக் கொடுமையிலிருந்து தப்பமுடியா மல் வைத்த பளுவைச் சுமக்க முதுகைக் குனிந்து கொடுத்துக் கொண்டிருப்பதற் கும் இம்மூடநம்பிக்கைகளும், சில சுயநலமிகளின் வயிற்றுச் சோற்றுப் பிரசாரமும், இவைகளினால் ஏற்பட்ட கண்மூடி வழக்கங்களும், செலவுகளுமே தான் காரணங்கள் என்பதாக நாம் முடிவு செய்து கொண்டிருக்கின்றோம்.
நாமும் நமது நாடும் அடிமைப்பட்டுக் கிடப்பதற்கும், ஒருவரையொருவர் உயர்வு தாழ்வு கற்பித்துக் கொடுமைப்படுத்தி ஒற்றுமையில்லாமல் செய்திருப்பதற்கும், மக்கள் பாடுபட்டுச் சம்பாதிக்கும் பொருள் கள் எல்லாம் நாட்டின் முன்னேற்றத் திற்கும் பயன்படாமல் பாழாவதற்கும், மக்களின் அறிவு வளர்ச்சி கட்டுப்பட்டுக் கிடப்பதற்கும், சிறப்பாக மக்களின் ஒழுக் கங்கள் குன்றி மக்களிடத்தில் மக்களுக்கு அன்பும் உபகாரமும் இல்லாமல் இருப்ப தற்கும் மேற்கண்ட கொள்கைகள் கொண்ட கடவுள் என்பதும், அதன் சமயமும், சமயாச்சாரியார்கள் என்பவர் களும் அவர்களது பாடல்களும் நெறி களுமே முக்கிய காரணம் என்பதை வலியுறுத்திக் கூறுகிறோம். சொல்லத் தயாராயிருக்கின்றோம்.
நிற்க, இக்கடவுள்களின் பொருட்டாக நம் நாட்டில் பூஜைக்கும், அபிஷேகத் திற்கும், அவற்றின் கல்யாணம் முதலிய உற்சவத்திற்கும், பஜனை முதலிய காலட்சேபத்திற்கும், இக்கடவுள்களைப் பற்றிய சமயங்களுக்காக மடங்களுக்கும், மடாதிபதிகளுக்கும், மூர்த்தி ஸ்தலம், தீர்த்த ஸ்தலம் முதலிய யாத்திரைகளுக் கும், இக்கடவுள் அவதார மகிமைகளையும், திருவிளையாடல்களையும், இக்கடவுள் களைப்பற்றிப் பாடின பாட்டுகளையும் அச்சடித்து விற்கும் புத்தகங்களையும் வாங்குவதற்கும், மற்றும் இவைகளுக் காகச் செலவாகும் பொருள்களாலும் நேரங்களாலும் ஏற்படும் செலவும் நம் ஒரு நாட்டில் மாத்திரம் சுமார் இருபது கோடி ரூபாய்களுக்குக் குறைவில்லாமல் வருஷா வருஷம் பாழாகிக்கொண்டு வருகின்றன என்று சொல்லுவது மிகையாகாது.
இவ்விருபது கோடி ரூபாய்கள் இம்மாதிரியாக பாழுக்கிறைக்காமல், மக்களின் கல்விக்கோ, அறிவு வளர்ச்சிக்கோ விஞ்ஞான (சையன்ஸ்) வளர்ச்சிக்கோ, தொழில் வளர்ச்சிக்கோ செலவாக்கப்பட்டு வருமானால் நம்நாட்டில் மாத்திரம் வாரம் லட்சக்கணக்கான மக்களை நாட்டை விட்டு அந்நிய நாட்டிற்குக் கூலிகளாக ஏற்றுமதி செய்ய முடியுமா? அன்றியும் தொழிலாளர்கள் கஷ்டங்கள் என்பதும் ஏற்படுமா? தீண்டக் கூடாத - நெருங்கக்கூடாத - பார்க்கக் கூடாத - மக்கள் என்போர்கள் கோடிக் கணக்காய் புழு, பூச்சி, மிருகங்களுக்கும் கேவலமாயிருந்து கொண்டிருக்க முடி யுமா? 100-க்கு மூன்று பேர்களாயிருக்கும் பார்ப்பனர்கள் மற்ற 100-க்கு 97 பேர்களைச் சண்டாளர், மிலேச்சர், சூத்திரர், வேசி மக்கள், தாசி மக்கள், அடிமைப்பிறப்பு என்று சொல்லிக்கொண்டு அட்டை இரத்தத்தை உறிஞ்சுவதுபோல் உறிஞ்சிக்கொண்டும், நம்மையும் நம் நாட்டையும், அந்நியனுக்குக் காட்டிக் கொடுத்து நிரந்தர அடிமைகளாக இருக்கும்படி செய்து கொண்டும் இருக்க முடியுமா? என்று கேட்கின்றோம்.
நமக்குக் கல்வி இல்லாததற்குச் சர்க்கார் மீது குற்றம் செலுத்துவதில் கவலை கொள்ளுகின்றோமேயல்லாமல் நம் சாமியும், பூதமும், சமயமும் நம் செல்வத்தையும் அறிவையும் கொள்ளை கொண்டிருப்பதைப் பற்றி யாராவது கவலை கொள்ளுகின்றோமா என்று கேட்கின்றோம்.
நிற்க, அன்பையோ, அருளையோ, ஒழுக்கத்தையோ, உபசாரத்தையோ மாறு பெயரால் கடவுள் என்று கூப்பிடுகின்றேன் அதனால் உனக்கு என்ன தடை? என்று யாராவது சொல்ல வருவார்களானால், அதையும் (அதாவது அக்குணங்கள் என்று சொல்லப்பட்ட கடவுள் என்பதையும்) பின்பற்றும்படியான குணங்களாகவோ, கடவுள்களாகவோதான் இருக்க வேண் டும் என்று சொல்லுகின்றோமே ஒழியக் குணங்களைப் பின்பற்றாமல் வெறும் வணங்கும்படியான கடவுளாக இருக்க நியாயம் இல்லை என்றே சொல்லுவோம்.
மதம்
இதுபோலவேதான் மதம் என்பதும், சமயம் என்பதும், சமயநெறி என்பதும் மற்ற ஜீவன்களிடத்தில் மனிதன் நடந்து கொள்ளவேண்டிய நடையைபற்றிய கொள்கைகளைக் கொண்டது என்பவர்களிடத்தில் நமக்குத் தகராறு இல்லை! அன்பே சிவம் என்பதான சிவனிடத்தில் நமக்குச் சண்டையில்லை! அன்பு என்னும் குணம்தான் சிவம்; அந்த அன்பைக்கொண்டு ஜீவன்களிடத்தில் அன்பு செலுத்துவதுதான் சைவம் என்பதானால் நாமும் சைவன் என்று சொல்லிக் கொள்ளவே ஆசைப்படுகின் றோம். அதுபோலவே ஜீவன்களிடத்தில் இரக்கம் காட்டுவது, ஜீவன்களுக்கு உதவி செய்வது ஆகிய குணங்கள்தான் விஷ்ணு, அக்குணங்களைக் கைக்கொண்டு ஒழுகு வதுதான் வைணவம் என்பதான விஷ்ணுவிடத்திலும் வைணவனிடத்திலும் நமக்குத் தகராறில்லை என்று சொல் லுவதோடு நாமும் நம்மை ஒரு வைண வன் என்று சொல்லிக் கொள்ளும் நிலைமை ஏற்பட வேண்டும் என்றே ஆசைப்படுகின்றோம். நமக்கும் மற்றும் உள்ள மக்களுக்கும் அச்சைவத் தன்மையும் வைணவத் தன்மையும் ஏற்பட வேண்டும் என்றும் வேண்டுகின்றோம்.
அப்படிக்கில்லாமல், இன்னமாதிரி உருவம் கொண்ட அல்லது குணம் கொண்டதுதான் கடவுள் என்றும், அதை வணங்குகின்றவன்தான் சைவனென்றும், அப்படி வணங்குகிறவன் இன்ன மாதிரி யான உடை பாவனை கொண்டவனாகவும் இன்னமாதிரி குறி இடுகிறவனாகவும் இருப்பதுதான் சைவம் என்றும், இன்ன பேருள்ள இன்ன காரியம் செய்த கடவுள் களைப் பற்றிப் பாடின, எழுதின ஆசாமி களையும் புஸ்தகத்தையும் வணங்குவதும் மரியாதை செய்வதும்தான் சைவம் என்றும், மற்றபடி வேறு இன்ன உருவமோ, பேரோ உள்ள கடவுள் என்பதை வணங்குகிறவர் களையும் வேறு குறி இடுகின்றவர் களையும் யாதொரு குறியும் இடாதவர் களையும் சைவரல்லாதவர் என்று சொல்வதுமான கொள்கைக்காரரி டமே நமக்குப் பெரிதும் தகராறு இருக்கின்றது என்று சொல்வதுடன் அக்கொள்கை களையும், அச்சமயங்களை யும், அக்கடவுள் களையும் பாமர மக்களிடம் பரவவிடக் கூடாது என்றும் சொல்லு கின்றோம்.
அன்றியும், பல சமயப் புரட்டர்கள் இம்மாதிரி விவகாரம் வரும்போது நான் கடவுள் என்பதாக ஒரு தனி வஸ்துவோ, ஒரு குணமோ இருப்பதாகச் சொல்ல வில்லை என்றும், மலைதான் கடவுள், ஆறுதான் கடவுள், சமுத்திரம்தான் கடவுள், மரம் செடிதான் கடவுள், புஷ்பம்தான் கடவுள், அதன் மணம்தான் கடவுள், அழகுதான் கடவுள், பெண்தான் கடவுள், அதன் இன்பம்தான் கடவுள், இயற்கைதான் கடவுள், அத்தோற்றம்தான் கடவுள், என்பதாக தமக்கே புரியாமல் உளறுவதும், மறுபடியும் சிவன்தான் முழுமுதற் கடவுள், மற்றபடி விஷ்ணுவும் பிரம்மாவும் அவரது பரிகார தேவதைகள், சைவ சமயம்தான் உண்மைச்சமயம் அது தான் முக்தி அளிக்கவல்லது என்பதும் அல்லது விஷ்ணுதான் முழுமுதற்கடவுள் என்பதும், அதுதான் பரத்துவம் கொண் டது. மற்றவை விஷ்ணுவின் பரிவார தேவதைகள் என்பதும், வைஷ்ணவ சமயம்தான் உண்மை சமயம் அதில்தான் பரத்திற்கு மார்க்கம் உண்டு என்பதும் அச் சிவனையோ, விஷ்ணுவையோ முழுமுதற் கடவுளாகக் கொண்டு அக்கடவுள்களை யும், அச்சமயங்களையும் பாடினவர்கள் தான் கடவுள் நெறியையும் நிலைமையையும் உணர்த்திய பெரியார்கள் - சமயாச் சாரியார்கள் என்பதுமாக மக்கள் முன் உளறிக் கொட்டி அவர்களது மனதை குழப்பச் சேற்றில் அழுத்துகின்றவர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்களது புரட்டையும் பித்தலாட்டங்களையும் வெளி யாக்கி மக்களைக் குழப்பச் சேற்றிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று தான் சொல்லுகின்றோம்.
உலகத்தில் கடவுள் என்பது இன்னது என்பதாக மனதில் விளம்பரப்படுத்திக் கொள்ளாமலே கடவுளைப் பற்றிய தர்க்கங்களும் தகராறுகளும் தினமும் நடைபெற்று வருகின்றன. இது இன்று நேற்று ஏற்பட்ட விவகாரம் அல்ல என்றுங்கூடச் சொல்லுவோம்.
எனவே, மக்களின் பாரம்பரியமானதும் எங்கும் பரவியிருக்கும் படியானதுமான மடமைக்கு இதைவிட வேறு உதாரணம் கிடையாது என்பது நமது அபிப்பிராயம். ஏனெனில், இந்த விவகாரம் பாமர மக்களிடையில் மாத்திரம் நடைபெற்று வருகின்றது என்று சொல்லுவதற்கில்லை. இது பெரும்பாலும் படித்தவன், ஆராய்ச் சிக்காரன், பண்டிதன், பக்திமான் என்கின்ற கூட்டத்தாரிடையேதான் பெரிதும் (இவ்வறியாமை) இடம்பெற்று உரம் பெற்றிருக்கின்றது. இவைகள் ஒழியச் செய்யும் காரியத்தை நாஸ்திகமென்றும், பாபச் செயல் என்றும் யார் சொன்னாலும் சுயமரியாதைக்காரர்கள் பயப்படக்கூடாது.
(தந்தை பெரியார் அவர்கள் 17 வருஷத்திற்கு முன்பேசியது)
குடிஅரசு - சொற்பொழிவு - 09.06.1945

Tuesday, December 6, 2011

டாக்டர் அம்பேத்கர் மறைவு : பின்னணி என்ன?


இந்தியாவின் சிறந்த அறிஞர் களின் முன்னணியிலுள்ள அறிஞ ரும் ஏராளமான விஷயங்களைக் கற்றுத் தேர்ந்த கலாநிதியுமான அம்பேத்கர் அவர்கள் முடிவெய்தி விட்டார் என்ற செய்தி கேட்டவுடன் திடுக்கிட்டுப் பதறிவிட்டேன். உண்மையில் சொல்ல வேண்டுமா னால், டாக்டர் அம்பேத்கருடைய மறைவு என்னும் ஒரு குறை பாடானது எந்த விதத்திலும் சரிச் செய்ய முடியாத ஒரு மாபெரும் நஷ்டமேயாகும். அவர் சிறப்பாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்குத் தலைவர் என்றுச் சொல்லப்பட்டாலும், பகுத்தறிவுக்கு எடுத்துக்காட்டாகவுள்ள ஒரு பேரறி ஞராக விளங்கினார். எப்படிப்பட்ட வரும் - எடுத்துச் சொல்லப் பயப்படும்படியான புரட்சிகரமான விஷயங்களையெல்லாம் வெகு சாதாரணத் தன்மையில் எடுத்துச் சொல்லும்படியான வீரராகவும் விளங் கினார்.
உலகத்தாரால் மதிக்கப்படும் மாபெரும் தலைவரான காந்தியாரை வெகு சாதாரணமாக மதித்ததோடு, அவருடைய பல கருத்துக்களைச் சின்னா பின்னமாகும்படி மக்களிடையில் விளக்கும் மேதாவியாக இருந்தார். இந்து மதம் என்பதான ஆரிய ஆஸ்திக மதக் கோட்பாடுகளை வெகு அலட்சிய மாகவும், ஆபாசமாகவும் அர்த்தமற்ற தாகவும் மக்கள் கருதும்படியாகப் பேசியும் எழுதியும் வந்தார். உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், காந்தியாரையே ஒரு பத்தாம் பசலி பிற்போக்குவாதியென்றும், அவரால் பிரமாதமாக நடிக்கப்பட்டு வந்த கீதையை முட்டாள்களின் உளறல்கள் என்றும் சொன்னதோடு, காந்தியாரின் கடவுளான ராமனை மகா கொடியவன் என்றும், ராமாயண காவியம் எரிக்கத் தகுந்தது என்றும் சொல்லி, பல்லாயிரக் கணக்கான மக்களிடையில் ராமா யணத்தை சுட்டு எரித்து சாம்பலாக்கிக் காட்டினார்.
இந்துமதம் உள்ள வரையிலும் தீண்டாமையும், ஜாதிப் பிரிவும், அவற்றால் ஏற்பட்ட கொடுமையும் ஒழியவே ஒழியாது என்றும் ஓங்கி அறைந்தார். மேற்கண்ட இந்தக் கருத்யதுக்கள் தவழும்படியாக ஏராள மான புத்தகங்களை எழுதி வெளி யிட்டார். இப்படியாக அநேக அரிய காரியங்களைச் செய்த ஒரு மாபெரும் பகுத்தறிவுவாதியும், ஆராய்ச்சி நிபுணரும் சீர்திருத்த புரட்சி வீரருமான டாக்டர் அம்பேத்கர் முடிவு எய்தினது இந்தியாவுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக் கும், பகுத்தறிவு வளர்ச்சிக்கும் எளிதில் பரிகரிக்க முடியாத பெரியதொரு குறைவே ஆகும்.
அம்பேத்கரின் மறைவு என்னும் செய்தி திடீரென்று மொட்டையாக வெளியானதி லிருந்து அவருடைய மரணத்துக்குப் பின்னால் சில இரகசியங்கள் இருக்கலா மென்று கருதுகிறேன். அதாவது காந்தி யார் மரணத்துக்கு உண்டான காரணங் களும், அதற்கு ஆதாரமான பல சங்கதி களும்  டாக்டர் அம்பேத்கர் மரணத்துக் கும் இருக்கக் கூடும் என்பதே ஆகும்.
- ஈ.வெ.ரா.
(விடுதலை 8.12.1956)

Sunday, December 4, 2011

கடவுள் சங்கதி


கடவுள் சங்கதி என்று இவ்வியாசத்துக்குத் தலைப்புக் கொடுத்ததின் காரணம் என்னவென்றால், கடவுள் உண்டா, இல்லையா என்பதல்ல இவ்வியாசத்தின் கருத்து என்பதை விளக்கவேயாகும். கடவுள் என்பதாக ஒன்று இருக்கட்டும்; அல்லது கடவுள் என்பதாக ஒன்று இல்லாமலே போகட்டும். இருந்தால் உயர் குணங்களும் நற்பண்புகளுமே கடவுளாக இருக்கட்டும்; அல்லது கடவுள் என்பதாக ஒரு வஸ்து அய்ம்புலன்களோடு இருந்து கொண்டு நினைத்துக் கொண்டும், செய்துகொண்டும், கவனமாய் கவனித்துக் கொண்டும், பலாபலன்களை அளித்துக் கொண்டும் இருக்கட்டும், அல்லது குணமில்லாமல், உருவமில்லாமல், விளக்கிச் சொல்ல வகையும் ஆதாரமும் இல்லாமல் ஒரு அரூபி வஸ்துவாக இருந்தாலும் இருக்கட்டும். அது மனத்துக்கும் எட்டினதாகவோ அல்லது அறிவுக்கும் மனத்துக்கும் எட்டாததாகவோ இருக்கட்டும். புத்த பகவானுக்கு அறிவு வழிகாட்டிய கடவுளாக இருந்தாலும் இருக்கட்டும் அல்லது கிறிஸ்துநாதருக்கு அருள் சுரந்த கடவுளாக இருந்தாலும் இருக்கட்டும் அல்லது மகம்மது நபியை உலகுக்கு அனுப்பி மக்க ளுக்குத் தனது நீதியை எடுத்துச் சொல்லும்படி செய்த கடவுளாக இருந் தாலும் இருக்கட்டும். மற்றும் ஆகாயமாய், நீராய், நெருப் பாய், காற்றாய், நிலப் பொருளாய் இருந்தாலும் இருக்கட்டும். அல்லது எப் படியோ ஏதோ ஒருவித மாய்க் கருத்தாய்க் கற்பனை யாய் இருந்தாலும் இருக்கட்டும். அதைப் பற்றியெல்லாம் கூட உண்டு, இல்லை என்பது இக்கட்டுரையின் நோக்கமல்ல. மற்றபடி கடவுள் விஷயமாய் இக்கட்டுரையின் நோக்கம் என்ன வென்றால், கடவுள் என்பதைப் பற்றி, கடவுள் என்பதற்கு ஆக, மனிதர்கள் இன்று நடந்து கொள்ளும் தன்மை, பான்மை சரியா? அவை அவசியமா? என்பதேயாகும்.
முதலாவது இக்கட்டுரையின் நோக்கம்:  கடவுளைக் காப்பாற்ற கடவுள் ஒருவரோ பலரோ உருவமாகவோ அருவமாகவோ, மற்றெப்படியாகவோ கடவுள் இருக்கிறார் என்பதாக மக்களுக்கு மக்கள் எடுத்துச் சொல்ல வேண்டி யதும் பிரசாரம் செய்யவேண்டியதும் அவசியம் தானா?
இரண்டாவதாகக் கடவுள் எண்ணம் மக்களுக்கு மறைந்து போய் விட்டது. அதை ஞாபகப்படுத்தப் பிரசாரகர் களைச் சம்பளத்துக்கு வைத்துப் பாதிரிகளை, குருமார் களை ஏற்படுத்திக் கடவுள் தத்துவத்தைப் போதிக்க ஸ்தாபனங்கள் ஏற்படுத்த வேண்டியது அவசியம் தானா? மற்றும் நாஸ்திகர்கள் பலர் தோன்றிக் கடவுள் இல்லை என்று நாஸ்திகப் பிரசாரம் செய்துவருவதால் கடவுள் கரைந்து வருகிறார். ஆதலால் கடவுளைக் காப்பாற்ற வேண்டியது மிகமிக அவசியம் என்று பலர் கருதி, ஆஸ்திகப் பிரசாரம் செய்து கடவுளைக் காப்பாற்ற வேண்டியது அவசியம் தானா? மற்றும் கடவுளுக்குக் கோவில் வேண்டுமா? கடவுளுக்குப் பெண்டாட்டி வேண்டுமா? கடவுளுக்குக் காமவிகாரம் உண்டா? கடவுளுக்குக் குழந்தைகள் வேண்டுமா? கடவுளுக்குத் தாசி, போக மாதர் வேண்டுமா? கடவுளுக்குப் படைப்பு, சாப்பாடு, நகை, துணி, மணி, கல்யாணம், உற்சவம், ஊர்வலம் வேண்டுமா? இவை ஒருபுறமிருக்கக் கடவுள் சக்திக்கு - செய்கைக்கு ஏதாவது அளவுண்டா? அல்லது அவர் எல்லாம் வல்லவரும் எல்லாவற்றிற்கும் பொறுப்பானவருமா? அவருடைய சக்திக்கும் செயலுக்கும் எல்லை உண்டா? இல்லையா? கடவுள் சக்தியை உணர்ந்தவன் கடவுளைக் காப்பாற்றக் கவலை கொள்ளுவானா? உண்மையிலேயே சர்வ சக்தியுள்ள கடவுள் ஒருவர் இருக்கிறார். அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்று மனப்பூர்வமாய் நம்பி இருக்கும் ஒருவன் கடவுளைக் காப்பாற்ற முற்படுவானா? கடவுள் இல்லை என்று ஒருவன் சொன்னால் அவன் மீது பாய்ந்து கோபிப்பானா?
இந்தப்படி கடவுளைப் பற்றிக் கவலைப்படுகிறவர், கடவுள் பிரசாரம் செய்கிறவர்களில் யாராவது தம் எண்ணத்தில் - நடத்தையில் கடவுள் சித்தப்படி நடப்பவர் களாகவோ, கடவுளுக்குப் பயந்து நடப்பவர்களாகவோ அல்லது கடவுள் தன்மையில் மதிப்பும், நம்பிக்கையும், பயமும் கொண்டவர்களாகவோ எங்காவது காணப்படு கிறார்களா?
கடவுள் நம்பிக்கை உடையவன் எவனாக இருந்தாலும், அவன் கடவுளைத் தொழ வேண்டுமா? பூசிக்க வேண்டுமா? தொழுதாலும், பூசித்தாலும், அதற்கு ஒரு நேரம், ஒரு இடம், ஒரு உருவம், ஒரு வாக்கியம் - பாட்டு வேண்டுமா?  மற்றும் அதற்குப் பண்டம், படைப்பு வேண்டுமா? உண்மையாகக் கடவுள் இருப்பதானாலும், இருப்பதாக நம்புவதானாலும் பலமதக்காரர்களும் இன்று கடவுள் சம்பந்தமாய் நடந்து கொள்ளும் நடத்தைகள் அவசியமா? என்பனவாகி யவைகள் ஒருபுறமிருக்க, தம்மைப் பெருத்த அறிவாளிகள் என்றும், எல்லாம் அறிந்த மேதாவிகள் என்றும் கருதிக் கொண்டிருக்கும் சிலர்  கூறுகிறபடி அதாவது, கடவுள் இருக்கிறதோ இல்லையோ அது வேறு விஷயம், கடவுள் என்பதாக ஒரு சர்வ சக்தியுள்ளவர் ஒருவர் இருக்கிறார் என்று மக்கள் நம்பும்படி செய்தால்தான் மக்கள் யோக்கியமாய் - பிறருக்குத் தீங்கிழைக்காமல் நடந்து கொள்ளுவார்கள். ஆதலால் கடவுள் பயம் மக்களுக்கு இருக்க வேண்டும், அந்தப் பயத்தைத் தெளியவைக்கக் கூடாது என்று சொல்லுகிறார்களே அதைப்பற்றிச் சிறிது சிந்தித்தால், அவர்கள் கருதுவதுபோல், கடவுள் உணர்ச்சியையும், கடவுள் தன்மைகளையும், நியாயத் தீர்ப்புகளையும், பயப்படத்தக்க கொடூர ரூபம் உள்ள நரக வேதனைகள், செக்கில் போட்டு ஆட்டுதல் முதலிய பலமான தண்டனை களையும் பின் ஜென்மத்தில் பல கஷ்டமான இழிவுகளையும், துன்பங்களையும் தரத்தக்க தலைவிதிகளையும், மற்றும் பலவித மோட்ச சுகங்களையும், உயர் பிறவிகளையும், சுகபோகங்களையும் தரத்தக்க முன்ஜென்ம புண்ணிய கர்மங்களையும், அவைகளுக்கேற்ற கடவுள்வாக்கு, வேதம், சாஸ்திரம், புராணம் முதலிய கற்பனைகளையும், எவ்வளவோ கெட்டிக்காரத்தனமாய் கற்பனை செய்து மக்களுக்குள் பல ஆயிரம் ஆண்டுகளாகப் புகுத்தி வந்தும்கூட, இன்றுவரையில் மக்களில் பெரும்பா லோர் - ஏறக்குறைய எல்லா மக்களும் யோக்கியமாய் மனிதனை மனிதன் ஆட்கொள்ளாமல், சராசரி மனிதனுக்கு மேம்பட்ட பொருளை அனுபவியாமல் இருக்க முடியவில்லையே அது ஏன்? என்றும், கடவுள் உணர்ச்சியை இவ்விதமாக எல்லாம் மக்களுக்குள் ஊட்டியதால் ஏதாவது பயன் ஏற்பட்டிருக்கிறதா? என்றும் பார்த்தால், மனிதன் ஒழுக் கத்திற்குக் கடவுள் உணர்ச்சி வேண்டும் என்கிற விதமும் அடிபட்டுப் போகிறதே.
ஏன் எனில், உலகில் அறிவில்லாத பாமர ஏழை மக்கள் மாத்திரம்தான், ஒழுக்கமற்று நாணயமற்று உண்மையற்று நடந்து கொள்ளுகிறார்கள் என்பது அல்லாமல், கற்ற மக்கள், செல்வவான்கள், பெரும் பதவியில் உள்ளவர்கள், மிக மிகப் பக்திமான்கள், குருமார்கள் உள்பட எல்லோருமே பெரிதும் விதிவிலக்கு இல்லாமல், கீழ்மக்கள் தன்மையாய் நடந்து கொள்ளுகிறதைப் பார்க்கிறோமே. ஆகவே கடவுள் உணர்ச்சிக்கும், ஒழுக்கத்துக்கும் உயர்குணத்துக்கும் சிறிதும் சம்பந்தமில்லை என்று  தெளிவாகிவிட வில்லையா? கடவுளுக்கு உருவம் எதற்கு என்றால் அதற்கு ஒரு சமாதானம் கூறப்படுகிறது. அதென்னவென்றால்,
பாமர முட்டாள் ஜனங்களுக்குக் கடவுளின் அருவ - (உருவமற்ற)த் தன்மை விளங்காது ஆதலால், கடவுளை ஒரு உருவமாகக்காட்டி அந்த உருவம் மக்கள் உள்ளத்தில் பயரூபமாய் அடிமைரூபமாய் விளங்க, கடவுள் உருவங்களுக்குப் பல கோர கொடூரச் செயல்களைக் கற்பித்து, அதோடு கடவுளை மேல் ஜாதியாகக் கற்பித்து, அவைகளிடத்தில் பக்தி உண்டாகும்படி செய்வதற்கு ஆக உருவம் கடவுளுக்கு அறிவாளிகளால் கற்பிக்கப்பட்ட தாகும். என்று சொல்லப் படுகிறது. இதையும் சிறிது சிந்தித் தால் இதன் பயனற்ற தன்மையும், அறியாமையும், சூழ்ச்சியும் விளங்காமல் போகாது. சாதாரணமாக, நம் நாட்டில் கடவுளுக்கு உருவங்கள் ஏற்படுத்தி வழிபாடு செய்யத்துவங்கிய காலம் 2000, 3000 ஆண்டு களுக்கு மேற்பட்டதாகவே இருக்கலாம். அதாவது ஆரியர் நம் நாட்டிற்கு வந்து, அவர்களது (ஆரிய) மதத்தைப் புகுத்தி, அதன் மூலம் கடவுள்களைக் கற் பித்து, அவற்றிற்கு உரு வங்கள் ஏற்படுத்தின காலத் தில் இருந்தே, நம்நாட்டில் உருவக் கடவுள்கள் காட்சி அளித்து வருகின்றதென்ன லாம். அதற்கு ஆதாரம் என்னவெனின், எந்தக் கடவுள்களது உருவத்தை எடுத்துக் கொண்டாலும், ஆரிய மதக்கதை சம்பந்த மும், ஆரியத்தோற்ற சம்பந்தமும் இல்லாமல் காண்பது அரிதாகவே இருக்கிறது. ஆகவே, இந்தப்படி 3000, 4000 ஆண்டுகளாகக் கடவுளை உருவமாக்கி, மக்களுக்குக் காட்டி, கடவுள் தன்மையை ஊட்டி வந்தும், இன்றைக்கும் பாமர மூட ஜனங்கள் மாத்திரம் அல்லாமல் பண்டிதர்கள், ஞானிகள் என்பவர்கள் முதல் பெரும் மேதாவிகள் என்பவர்களுக்குக் கூட, உண்மையான கடவுள் பக்தி அவரவர் நடப்பில் கடவுள் தன்மை, பகுத்தறிவு ஆகியவை ஏற்படவில்லை என்றால்,  மூடர்களுக்குக் கடவுள் பக்தி ஏற்படுவதற்கு ஆக உருவம் (விக்கிரகம்) கற்பிக்கப்பட்டது என்பதில் ஏதாவது உண்மையோ பலனோ அறிவுடைமையே உண்டு என்று யாராவது கொள்ள முடியுமா?
மற்றும் நித்தியமான சர்வசக்தியும், சர்வ வியாபகமும் உள்ள கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றால், கடவுள் என்பதாக ஒன்று உண்டா இல்லையா? என்பதாக மக்களுக்குச் சந்தேகம் ஏற்படுவானேன்? சிலருக்குக் கடவுள் இல்லை என்றும் இருக்க முடியாதென்றும் தோன்றுவானேன்? ஏதோ அறிவிலிகளுக்கு இப்படித் தோன்றுகிறது என்று கொள்ளுவதானாலும் அறிவாளி களுக்கு கடவுளைக்காப்பாற்ற வேண்டும், கடவுள் பிரசாரம் செய்ய வேண்டும் என்கின்ற எண்ணம் தோன்றுவானேன்? கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று குழந்தைகளுக்கும் பள்ளிப் பிள்ளைகளுக்கும் கற்பிக்க முயற்சி செய்வானேன்?
அவைதான் போகட்டும் என்றாலும், கடவுள் அவதாரம் என்றும், கடவுள் தன்மை அடையப் பெற்ற பெரியார்கள் என்றும், கடவுள் மனித ரூபமாய் - பன்றி ரூபமாய் மற்றும் ஏதேதோ ஆபாசரூபமாய்க் காணப்படுவானேன்? கடவுளுக்குக் குமாரரும், தூதுவரும், அசரீரியும், மக்கள் மீது மருளும், அதாவது சாமியாடுதலும் ஏன்?
இப்படிப்பட்ட நடவடிக்கைகள் மெய்யாய் இருந்தாலும் பொய்யாய் இருந்தாலும், இவைகள் கடவுள் இருப்பதை ஊர்ஜிதம் செய்யவோ அல்லது மக்களுக்குக் கடவுளால் பயன் ஏற்படவோ அல்லது உலக நடப்புக்காவது மனித சமுதாய நல்வாழ்வுக்காவது ஏதாவது பயன் ஏற்படுமா என்பது மிகவும் சிந்திக்க வேண்டியதாகும். இதுவரையில் காலம் எப்படிக் கழிந்திருந்தாலும், இனி மேலாவது மனித சமுதாயம் பயமும் கவலையுமற்றுச் சாந்தியாய் திருப்தியாய் நல்வாழ்வு வாழவேண்டியது அவசியமாகும். அதற்கு ஏற்ற வண்ணம் இனிச் சமுதாய ஒழுங்குகள், ஒழுக்கங்கள் அமைக்கப்பட வேண்டும். வருங்காலம் பயங்கரமான ஆபத்துக்குள்ளாகும் காலம். எப்படி எனில், மக்கள் இனிச் சுலபத்தில் சாகமாட்டார்கள். இதுவரை நம்மக்களுக்கு சராசரி ஆயுள் 25 என்றால், இனி மக்கள் சராசரி ஆயுள் 50க்கு மேற்பட்டுத்தான் இருக்க முடியும். சுகாதாரம் அதிகம், வைத்தியம் வசதி அதிகம், மனிதன் நோய் களையும் துன்பங்களையும் கடவுள் மீது பாரத்தைப் போட்டு விட்டு அற்பா யுளாகப் போய்க் கொண் டிருந்தவன் தன் முயற்சியில் நம்பிக்கை வைத்துப் பரி காரம் தேடி மீளுகிறான். மனிதனுக்குப் பல துறை களில் அறிவு உணர்ச்சி ஏற்பட்டு  வாழ்வை நீட்டிக் கொள்ள வசதி பெற்று விட்டான்.
அதுபோலவே மக்கள் பிறப்பும் அதிகமாகிவிட்டது. கர்ப்பச் சிதைவு, சிசு மரணம், பிரசவ மரணம் இனி சுலபத்தில் ஏற்படாத மாதிரிப் பாதுகாப்புகள், பரிகாரங்கள் ஏற்பட்டுவிட்டன. இனி மலடும் இருப்பதற்கில்லாமல் நிவர்த்தி மார்க்கங்கள் ஏற்பட்டுவிட்டன. இனி விதவைகளாகவும் எவரும் காலங்கழிக்க முடியாமல் விதவை மணம், சுதந்திரக் காதல் முதலியன செல்வாக்குப் பெற்று, தாராளமாய் நடப்பில் வருவதன் மூலம் அவற்றாலும் பிறப்பு அதிகமாகின்றன.
பொதுவாகப் பிறப்பு விகிதமும், பலவிதச் சவுகரியங்களால் நபர் 1-க்கு 2, 3, 4 என்பதாக குழந்தைகள் இருந்து வந்தது மாறி, இப்பொழுது நபர் ஒன்றுக்கு 6, 8, 10, 12 என்பதாகக் குழந்தைகள் பிறப்பதும், அவைகளும் நீண்ட நாள் வாழ்வதுமாக இருக்கின்றன.
இவர்களுக்கு எல்லாம் உணவு, போக போக்கியப் பொருள், பிழைப்பு, நல்வாழ்வு ஆகியவை தேவைப்படுவதுடன் உணவுப்பஞ்சம் ஏற்பட்டே தீரும். இவைகளில் பெரும் போட்டியும் அதன் பயனாய் வெறுப்பு, வஞ்சம், துரோகம், கொள்ளை, கொலை முதலியவைகள் மலிந்துவிடும். சாதுவும் யோக்கியமுமான மக்கள் மிகமிகத் துன்பமடைய நேரிடும். அயோக்கியர்களும் காலிகளுமே நல்வாழ்வு வாழ்வார்கள் அதற்கேற்ற அரசாங்கம்தான் ஏற்படமுடியும்.
- குடிஅரசு - கட்டுரை - 07.05.1949

Sunday, November 27, 2011

பகுத்தறிவை வளர்க்கப் படிப்பகங்கள் தேவை


இன்றைய தினம் நடை பெற்ற பாரம் தூக்குதல் மிகவும் பிரமாதமாக நடந் தது. இதை எல்லாம் சாதாரணமாக எல்லோரும் காண்பிக்க முடியாது. இதற்கு ரொம்பவும் பழக்கம் இருந் தால்தான் ஒரு சிலருக்கு முடியும். 120 பவுண்டு முதல் 246 பவுண்டு வரை தூக்கிக் காண்பித்தது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் இதைக் கண்டு பகுத்தறிவு வாதிகள்தான் மிகவும் ஆச்சரியப்பட முடியும். ஆனால், புராண, இதிகாசங்களிலே, வைதீகத்திலே முழுகி இருக்கிற மக்களுக்கு இது ஆச்சரியமாகத் தோன்றாது. காரணமென்னவென்றால் அனுமான் சஞ்சீவி மலையைத் தூக்கியது அவர்களுக்குத் தெரியும். இன்னும் எத்தனையோ வகையான செய்கைகளை யெல்லாம் அவர்கள் புராணங்களில் கண்டிருப்பார்கள். அவற்றை அப்படியே நம்பக் கூடியவர்களுமாவார்கள். ஆனால், நாம் அதையெல்லாம் நம் பகுத்தறிவுக்குத் தப்பெனப்படுவதால் நம்பாமல் இருக்கிறோம். ஆகவே, இது நம் போன்றவர்களுக்கு மிகவும் ஆச்சரிய மானதுதான். 246 பவுண்டு என்றால் ஏறக்குறைய 100 கிலோவுக்கு குறையாத பாரம். அதாவது இரண்டு மனிதர்களைப் பொறுத்த பாரம். ஆகவே, இந்த பெரும் பாரத்தை ஒரு மனிதன் சர்வ சாதாரணமாகத் தூக்கிக் காண்பிப்பதென்றால் அது மிகவும் ஆச்சரியம்தான். இந்த பிரமாண்டமான பளுவைத் தூக்குவதற்கு இசையும்படியாக தங்களது உடலை வலுப் படுத்திப் பழக்கி வைத்திருக்கிறார்கள்.
மேலும், நமது நாட்டிலே இம்மாதிரியான காரியங்களிலே ஈடுபடுகிற மக்கள் மிகவும் குறைவு. அப்படியே ஒரு சிலர் ஈடுபட்டிருந்தாலும்கூட மற்றவர்கள் ஆதரவு கொடுப்பது கிடையாது. ஆனால், மேல்நாடு களிலே இந்த முறையை மிகவும் கூடுதலாகக் கையாண்டு வருகிறார்கள். இதை எவ்வளவோ சாதனையாகப் பழகி நான் மேல் நாடு சென்றிருந்தபோது ஒரு கூட்டத்திலே பலவிதமான வேடிக்கை செய்து காட்டினார்கள். அவற்றில் எல்லாம் இந்த மாதிரியான வேடிக்கைதான் முதலிடம் பெற்றது. தனது உடலை பலவிதமாக வளையும்படியாக பழக்கி வைத்திருக்கிறார்கள். உடலின் எந்த அவயவத்தையும் தன்னால் அசைத்துக் காட்ட முடியும். அந்த மாதிரியான வேலைகளில் அவர்கள் ரொம்பவும் சிரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நம் நாட்டிலே அதிகமாக அதைப் பற்றிய கவலை கிடையாது.
ஆகவே, இந்த மாதிரியான வேலைகளைச் செய்வ தனால் அவர்களது உடல் மிகவும் வலிவு பெறு கிறது. அதனால் அவர்களுக்கு ஒரு சிறு நோய் கூட வருவது கிடையாது. மற்றும் மனோதிடமும் ஏற்பட ஏதுவாகும். மக் களுக்கு மனவலிவு மிகவும் அவசியம். இந்த மாதிரியான காரியங்களினாலும், பழக்க வழக்கங்களினாலுமே மனிதனுக்கு மனோ திடம் ஏற்பட ஏதுவாகிறது. மனவலிவு குறைவாக உள்ள மனிதர்கள் யாரும் ஒழுங்காக நடந்து கொள்வது மிகவும் கஷ்டமான காரியம். ஆனால், மனவலிவு எவனொருவனுக்கு இருக்கிறதோ, அவன் ஒழுக்கத்துடன் நடந்து கொள்கிறான். ஆகவே, ஆங்கிலத்திலே கூட சொல்லு வார்கள் வீக்னஸ் என்று. அதாவது, உடல் பலம் இன்றி இருக்கிற ஒருவனைப் பார்த்தும் வீக்னஸ் என்றுதான் கூறுவார்கள். அதே மாதிரி கெட்ட செய்கைகளைக் கைக்கொள்ளு கிறவனைப் பார்த்தும் வீக்னஸ் உள்ளவன் என்று தான் கூறுவார்கள். ஒருவன் திருடினால் கூட அவனைப் பார்த்து வீக்னஸ் உள்ளவன், இல்லாமலிருந்தால் அவன் அப்படி செய்திருக்கமாட்டான் என்று தான் கூறுவார்கள்.
ஆகவே, மனிதனுக்கு மனவலிவு எவ்வளவு அவசியமோ, அதைப் போல் உடல் வலிவும் மிகவும் அவசியம்.
இவற்றை எல்லாம் நாம் பழகிக் கொள்கிற முறையிலே இயற்கையாக வந்து சேருகிறதுதான். நினைத்ததை எல்லாம் செய்ய ஆசைப்படுகிறவர்கள், நினைத்ததை எல்லாம் எடுத்துக் கொள்ள ஆசைப்படுகிறவர்கள், சில காரியங்களிலே தவறி விடுகிறவர்கள் பெரும் பணக் காரர்கள் முதல் ஏழைகள் வரை சர்வசாதாரணமாக நடக் கிறது. இதன் காரணமென்ன வென்றால் தங்களுடை யதைச் சரியாகப் பக்குவப்படுத்தி வலிவுபெற வைக்காத தனால்தான் இந்தவிதமான சம்பவங்கள் ஏற்படுகின்றன. நம் நாட்டிலே மக்களிடையே தப்புத்தவறான கதைகளையும், புராணங்களையும் கூறி மக்களின் மனதை வலிவு பெறாமல் செய்து விட்டனர். ஆகவே, இதெல்லாம்தான் பழகி கொள் ளும் பழக்கத்தின்மூலம் ஏற்பட வேண்டியவை. ஆகவே, இந்த மாதிரியான மனோதிடமும், உடல் வலிமையும் உள்ளவர்களை நாம் மிகவும் பாராட்ட வேண்டியதுதான்.
மக்கள் எல்லோரும் படித்திருப்பார்களானால் மிகவும் அறிவு விருத்தி ஏற்பட முடியும். ஆனால், இன்றைய தினம் அரசாங்கத்தாராலே அளிக்கப்படும் கல்வியானது மிகவும் மோசமான முறையிலே தான் இருந்து வருகிறது. ஒரு சில காரியங்களை மக்களிடையே பிரச்சாரம் செய்யவே இன்றைய கல்வி முறை பயன்படுகிறது.
மேல்நாடுகளில் விஞ்ஞானத் துறைகளிலேயும் மற்றும் பூகோள முறையிலேயும் கல்வி விருத்தி அடைந்து கொண்டு வருகிறது. அவர்கள் புதுப்புது இயந்திரங்களையும், புதுப் புது சாதனங்களையும் செய்து காண்பிக்கும் போது நமது நாட்டுக் கல்வி முறை, படித்து மார்க் எடுப்பதற்கே அன்றி அறிவிற்கும் அதற்கும் சம்பந்தமில்லாமல்தான் அமைக்கப் பட்டிருக்கிறது.
நமது மக்களுக்கு அந்த மாதிரியான விஞ்ஞான அறிவு ஒன்றும் இல்லை என்று நான் கூறவில்லை. நமது பெரிய நிபுணர்கள் பொதுவாகக் கூறினால், உலகத்தில் எந்த பாகத்திலும் இருக்கிறார்கள் எனக் கூறலாம். ஆனால், இவர்களுக்கு 100-க்கு அய்ந்து பேருக்குக் கூட பகுத்தறிவு இருக்கிறதாக மட்டும் காண முடியாது. பொதுவான எல்லோருக்கும் தெரியும் முறையிலே கூறுவதாக இருந்தால், கிரகணம் வரும் கதையை எடுத்துக் கொள்வோம்.
விஞ்ஞானத்திலேயும், படிப்பிலேயும் உயர்வு பெற்ற உபாத்தியாயருக்குக் கிரகணம் எப்படி ஏற்படுகிறது என்று நன்றாகத் தெரியும். தனது பூகோள பாட சமயத்திலும் மாணவர் களுக்கும், குளோப்பை வைத்துக் கொண்டு, பூமி, சந்திரன், சூரியன் இவற்றின் சுற்றுதலால் ஏற்படுகிறதுதான் கிரகணம் என்று நன்றாகக் கூறுவார். ஆனால், அதே உபாத்தியாயர் புராணக் கதையை நம்பிக் கொண்டு தனது வீட்டில், கிரகணம் ஏற்படுகிற அன்றைய தினத்தில், உணவுகளில் அறுகம்புல்லைப் போடுவதும், குளித்துக் கொண்டு வருவதும், கர்ப்பப் பெண்களை வெளியே போகாமல் தடை செய்து வீட்டினுள் அடைத்து வைப்பதும் வழக்கமாக இருக்கிறது. காரணம், ராகு, கேது என்ற பாம்புகள் சூரியனையும், சந்திரனையும் கடிப்ப தால்தான் இந்த இரு கிரகணங்களும் ஏற்படுவதாகக் கூறும் கதையை நம்பிக் கொண்டு, அந்த விஷம் தனது உணவுகளையும், மற்ற காரியங்களையும் பாதிக்கக் கூடுமென நினைத்துக் கொண்டு அறுகம்புல்லைப் போடுவதும், குளித்து வருவதுமாக இருக்கின்றனர். ஆகவே, இவர்கள் எவ்வளவு தூரம் அறிவு பெற்றிருந்தும், படித்து இருந்தும், பட்டங்கள் பெற்றிருந்தும் பயன் இல்லை. பகுத்தறிவு என்பது சிறிதுகூட இல்லாத காரணத் தினால்தான் இது போன்ற பழைய கொள்கைகளைக் கூட நம்ப வேண்டியது ஏற்படுகிறது. மேலும் இதற்காகப் பள்ளிக்கூடங்களில் சென்று படிக்கும் மாணவர்களும்கூட தங்களது பகுத்தறிவைப் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் போய் விடுகிறது.
அதே மாதிரி டாக்டராக இருப்பவர்கள் என்ன என்ன நோய் எப்படி எப்படி வருகிறது என்று நன்றாகத் தெரிந்தும்கூட சில காரியங்களில் தங்களது பகுத்தறிவைப் பயன்படுத்திக் கொள்வது கிடையாது. தங்களது உயர்ந்த படிப்பினாலும் பயனடையாமல் போகிறார்கள். உதாரணமாக, பெண்களுக்கு 30 நாட்களுக்கு ஒரு தடவை வீட்டுக்கு விலக்கு ஏற்படுவது சகஜமாக நடக்கிறது. இது எதனால் ஏற்படுகிறது என்பது எல்லாம் படித்த டாக்டர்களுக்கு நன்றாகத் தெரியும். அப்படி இருந்தும் கூட தன் வீட்டுப் பெண்களுக்கு வீட்டுக்கு விலக்கு ஏற்பட்டால் அவர்களைத் தொடாதே எனவும் வீட்டை விட்டு ஒரு மூலையிலே ஒதுக்கி வைப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது. அதிலும் அவர்கள் அருகிலே நடந்து வந்தால் எதிரே ஒரு ஆண் மகன் வந்து விட்டால், அவனுக்கு வருகிற கோபம் சொல்லி முடியாது. இதைவிடக் கடின கொடூரமான செய்கை, சங்கராச் சாரியார், மடாதிபதிகள் போன்றவர்களின் நேருக்கு இந்த மாதிரியான பெண்கள் 10 மைல் தூரத்திற்கு அப்பால் கூட வர யோக்கியதை அற்றவர்களாக கருதப்படுகிறார்கள். ஆகவே, இவை எல்லாம் புராணக் கதைகளால் மக்களை மதி கெட்டு குட்டிச் சுவராய், காட்டு மிராண்டிகளாய்ப் போகும்படி செய்து வைத்து இருக்கிறது. ஆகையால், அவன் எவ்வளவு தூரம் படித்தும் பட்டம் பெற்று டாக்டராக வந்திருந்தும்கூட பயன் இல்லை என்ற நிலைமை ஏற்பட்டு விட்டது. ஆகவே, மனிதன் எத்தனைத் தூரம் படித்து இருப்பினும் கூட அவனுக்குப் பகுத்தறிவு மிகவும் அவசியம்.
ஆகவே மக்களுக்கு வ.உ.சி. படிப்பகம் போன்ற படிப்பகங்கள் மிகவும் தேவை. அதன் மூலமாகத் தான் அறிவை வளரச் செய்து பகுத்தறிவைப் பயன்படுத்திக் கொள்ள வசதி கிடைக்கும். மென்மேலும் பகுத்தறிவை வளர்த்துக் கொள்ள வசதியும் ஏற்படும். மேலும் தந்தை பெரியார் அவர்கள் திராவிடர் கழகத்தினுடைய கொள் கைகளை விளக்கி, அதனின்றும் பகுத்தறிவைப் பயன்படுத்த வேண்டிய விதங்களையும் எடுத்துக் கூறினார்கள்.
(27.10.1951 அன்று இராங்கியம் வ.உ.சி. உடற்பயிற்சி மன்ற ஆண்டு விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய தலைமை உரை விடுதலை 1.11.1951.)

Sunday, November 20, 2011

பொது உடைமையா, பொது உரிமையா? எது முதலில் வேண்டும்?


இன்று நம்நாட்டில் காங்கிரஸ் பிரசாரம் அடக்கப்பட்டதும், பல காங்கிரஸ் வாலிபர் கள் பொது உடைமைப் போர்வையைப் போர்த்திக் கொண்டு காங்கிரஸ் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இந்தப் பொது உடைமை வேடக்காரர் சர்க்காருக்குத் தாங்கள் யுத்த ஆதரவுப் பிரசாரம் செய்வதாகச் சொல்லி வாக்குக் கொடுத்திருக்கிறபடியால், சர்க்கார் மற்றப் பொது உடைமைப் பிரசாரர்களைப் போல் இவர்களைக் கருதாமல் இருக் கிறார்கள். ஆனால் இந்தக் காங்கிரஸ் வாலிபர்கள் பொது உடைமைக்காரர் என்று பெயர் வைத்துக்கொண்டு, மேடைகளில் உலக சண்டைக்கு ஆக சர்க்காருக்கு உதவி செய்ய வேண்டும் என்று இரண் டொரு வார்த்தைகளைச் சொல்லிவிட்டு காங்கிரஸையும், காந்தியாரையும் பற்றிப் புகழ்ந்துவிட்டு கடைசியாக ஜஸ்டிஸ், சுயமரியாதைக் கட்சிகளை வைவதையே முக்கிய வேலையாய்க் கொண்டு பிரசாரம் செய்து வருகிறார்கள். சில இடங்களில் பொது உடைமைக்காரர்கள் பிரசாரங் களில் ஜஸ்டிஸ், சுயமரியாதைக் கட்சி களைப் பற்றிக் குறை கூறிப் பேசியதைக் கூட்டத்திலிருந்தவர்கள் கண்டித்ததோடு, பேசிய பேச்சுக்களையும் வாபீசு வாங்கிக் கொள்ளும்படி செய்திருப்பதாகவும் தெரி கிறது. அப்படி இருந்தும், பொதுஉடைமைப் பிரசாரக்காரர்கள் தட்டிப் பேச ஆளில்லாத கூட்டங்களில் தங்கள் இஷ்டப்படி பேசி ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றித் தாறுமாறாகப் பேசி இருப்பதாகவும் தெரிகிறது. தமிழ் நாட்டில் பொது உடைமைப் பிரசாரக் காரர்கள் பெரிதும் பார்ப்பனர்களாய் இருப்பதால் நாம் அவர்களிடம் இம்மாதிரி நடத்தையை விட வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? காங்கிரஸ் என்றாலும், பொது உடைமை என்றாலும், இந்து மதம் என்றாலும், வேறு எந்தப் பொதுநலப் பேரை வைத்துக் கொண்டாலும் பார்ப்பனர்கள் செய்யும் பிரசாரம் எல்லாம் ஜஸ்டிஸ் கட்சியையும் சுயமரியாதைக் கட்சியையும் பற்றி விஷமப் பிரசாரம் செய்வதல்லாமல், அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்?
லண்டன் பார்லிமெண்டில் சென்ற மாதம் ஒரு மெம்பர் இந்திய மந்திரியை ஒரு கேள்வி அதாவது: உலகத்திலேயே எல்லா மக்களையும்விட தங்களை உயர்ந்த பிறவிகள் என்று சொல்லிக் கொண்டு மற்றவர்களை விட்டு விலகி தனித்து இருந்து கொண்டும் பாடுபடாமல் இராஜ போகம் அனுபவிக்கும் இந்தியப் பார்ப் பனர்கள் இந்த நாட்டுப் பொது உடைமைக் காரர்களுடன் சேர்ந்து இருக்கிறார்களே, இதன் அர்த்தமென்ன? என்று ஒரு கேள்வி கேட்டார். அதற்கு இந்திய மந்திரி சிரித்தாராம்.
அது போல் பார்ப்பனர்கள் பாடுபடா மலும், எவ்விதக் குறைபாடில்லாமலும் வாழ்ந்து கொண்டும் மற்ற மக்களுக்கும் மேலானவர்களாக இருந்து கொண்டும் பொது உடைமைப் பிரசாரத்தில் காங்கி ரசையும் பார்ப்பனியத்தையும் கண்டிக் காமல், அவற்றைக் கண்டிக் கும் ஜஸ்டிஸ் கட்சியையும் சுயமரியாதைக் கட்சியையும் ஏன் குறை கூறுகிறார்கள் என்றால் இந்த இரண்டு கட்சிகளும் வருணாசிரமக் காங்கிரசுக்கும் பார்ப்பனி யத்திற்கும் விரோதமாக இருப்பதால் தானே ஒழிய வேறில்லை.
பார்ப்பனர்களுக்கு நன் றாய் தெரியும். என்னவென் றால் வருணாசிரமத்தையும், பார்ப்பனியத்தையும் பத்திரப் படுத்திவிட்டு எப்படிப்பட்ட பொது உடை மையை ஏற்படுத்திவிட்டாலும் திரும்பவும் அந்த உடைமைகள் வருணாசிரமப்படி பார்ப்பனரிடம் தானாகவே வந்து விடும் என்றும், ஜாதி இருக்கிற வரையில் எப்படிப்பட்ட பொதுவுடைமைத் திட்டம் ஏற்பட்டாலும், பார்ப்பனருக்கு ஒரு கடு களவு மாறுதலும் ஏற்படாமல் அவர்கள் வாழ்வு முன் போலவே நடைபெறுமென்றும் தைரியம் கொள்ளத் தெரியும்.
ஆதலால், பார்ப்பனர் பேசும் பொது வுடைமை, கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளை யாருக்கு உடைப்பதால் அவர்களுக்கு நட்டம் ஒன்றும் இல்லை என்பதோடு, உடைபட்ட தேங்காயும் அவர்களுக்கே போய்தான் சேரும். அத னால்தான் பார்ப்பனர்களுக்குப் பொது வுடைமைப் பிரசாரத்தில் அவ்வளவு உற்சாக மேற்படக் காரணமாகும்.
நம் தொழிலாளி மக்களும், ஏழை மக்களும், பொறுப்பற்ற வாலிபர்களும், யோசனை அற்றவர்களாதலால் இதில் சுலபத்தில் ஏமாந்து மயங்கி விடுகிறார்கள்.
பொதுவுடைமை வேறு பொது உரிமை வேறு. பொதுவுடைமை என்பது சமபங்கு என்பதாகும், பொதுவுரிமை என்பது சம அனுபவம் என்பதாகும்.
இந்நாட்டில் பார்ப்பனியத்தால், ஜாதியால் கீழ்ப்படுத்தப்பட்ட மக்களுக்கு சம உரிமை இருந்தாலும், சம உடைமை (அனுபவம்) இல்லை என்பது குருடனுக்கும் தெரிந்த சங்கதியாகும். அதனாலேயே அவர்கள் உடைமை கரைந்துகொண்டே போகிறதுடன் உடைமைக்கு ஏற்ற அனுபவமும் இல்லாமல் இருக்கிறார்கள்.
உதாரணமாக ராஜா சர். அண்ணாமலை செட்டியார் கோடீஸ்வரர், சர். ஆர். கே. சண்முகம் செட்டியார் பல லட்சாதிபதி. இருவரும் பெரும் தனிவுடைமைக்காரர்கள். இவர்களுக்கு ஒரு சாதாரண பிச்சைக் காரப் பார்ப்பானுக்கு இருக்கும் பொது உரிமை இல்லை என்பதை அவர்களே ஒப்புக்கொள்வார்கள். ஆனால் தனி உரிமை உள்ள ஒரு கீழ்த்தர பிச் சைக்காரப் பார்ப்பானுக்கு உடைமையே அடியோடு இல்லாவிட்டாலும் அவனு டைய போக போக்கியம் குறைபடுவதே இல்லை. அன்றியும் பாடுபடாமல், கை முதல் இல்லாமல் தனக்குள்ள தனி உரிமை காரணமாகவே தன் மகனை அய்.சி.எஸ். படிக்க வைத்து ஜில்லா கலெக்டர் ஜில்லா ஜட்ஜ், ஏன் அய்கோர்ட் ஜட்ஜாகவும் சங் கராச்சாரி, ஜீயர் ஆகவும் ஆக்க முடிகிறது.
இந்த நிலையில் தனி உரிமையை முதலில் ஒழித்து விட்டோமேயா னால் தனி உடைமையை மாற்ற அதிகப் பாடுபடா மலே இந்த நாட்டில் பொதுவுடைமை ஏற்பட வசதி உண்டாகும். உண்மையான பொதுவுடைமையும் நிலைத்து நிற்கும். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் ஜாதி காரணமாகத்தான் பலர் மேன் மக்களாய், பணக்காரர்களாய் இருக்கிறார் கள்; இருக்கவும் முடிகிறது. ஜாதி காரண மாகத்தான் எல்லோரும் கீழ் மக்களாய் ஏழைகளாக இருக்கிறார்கள்; இருக்கவும் வேண்டி இருக்கிறது. இது இன்றைய பிரத்தியட்ச காட்சியாகும்.
ஆங்கிலத்தில் கேஸ்ட், கிளாஸ் (ஊயளவந, ஊடயளள) என்று இரண்டு வார்த்தைகள் உண்டு. அதாவது தமிழில் ஜாதி - வகுப்பு என்று சொல்வதாகும். ஜாதி பிறப்பினால் உள்ளது; வகுப்பு தொழில் அல்லது தன்மையினால் ஏற்படுவது. தொழிலும் தன்மையும் யாருக்கும் எதுவும் ஏற்படலாம். ஜாதி நிலை, அந்த ஜாதியில் பிறந்த வனுக்குத் தான் உண்டு; பிறக்காத வனுக்குக் கிடைக்கவே கிடைக்காது. மேல் நாட்டில் ஜாதி (ஊயளவந) இல்லாததால், அங்கு பொது உடைமைக்கு முதலில் வகுப்புச் சண்டை (ஊடயளள கபைவ) துவக்க வேண்டியதாயிற்று. இங்கு ஜாதி (ஊயளவந) இருப்பதால் பொது உடைமைக்கு முதலில் ஜாதிச் சண்டை (ஊயளவந கபைவ) துவக்க வேண்டியதாகும். பார்ப்பானும், பார்ப்பன சம்பந்தமும், பார்ப்பனிய உணர்ச்சியும் உள்ள மக்கள் பொது உடைமை வேஷம் போடுவதால் ஜாதி சங்கதியை மூடிவிட்டு ஆகாத காரியமான - ஆனாலும் தங்களுக்குக் கேடில்லாததான வகுப்பு (ஊடயளள) உணர்ச்சியைப் பற்றிப் பேசி ஜாதியை ஒழிக்கப் பாடுபடும் கட்சிகளோடு ஏழைகளை மோத விடுகிறார்கள். ஜாதியை ஒழிக்கச் செய்யப்படும் முயற்சியையும் அழிக்கப் பார்க்கிறார்கள். பார்ப்பனர் களுக்கும் மற்றும் மேல் ஜாதிக்காரர் களுக்கும் இருக்கும் உயர்வை முதலில் ஒழித்தாக வேண்டும். இதிலேயே அரை பாகம் பொது உடைமை நமக்கு ஏற்பட்டு விடும். அதாவது ஜாதியினால் அனுபவிக்கும் ஏழ்மைத் தன்மையும் ஜாதியி னால் சுரண்டப்படுகிறவர்களாக இருக்கும் கொடுமையும் நம் பெரும்பான்மை மக்களி டமிருந்து மறைந்து விடும்.
பொது உரிமை இல்லாத நாட்டில் ஏற்படும் பொதுவுடைமை மறுபடியும் அதிக உரிமை இருக்கிறவனிடம்தான் போய்ச் சேர்ந்துகொண்டே இருக்கும் என்பது பொதுவுடைமைத் தத்துவத்துக் குப் பாலபாடம் என்பதை மக்கள் உணரவேண்டும். இன்றுள்ள கோவில், குளம், உற்சவம், சடங்கு, பண்டிகை, சுபகாரியம், அசுப காரியம் என்பவை எல்லாம் பிறவி காரணமாகவே சிலருக்கு அதிக உரிமை இருப்பதாலும் சிலர் சுரண்டுபவர்களாய் இருப்பதாலும் ஏற்பட்டு இருந்து வருபவைகளே ஒழிய, அவர்களுக் காகவே இருந்து வருபவைகளே ஒழிய, இவற்றிற்கு வேறு காரணம் சுரண்டப்படும் ஜாதியாரிடத்தில் உள்ள ஜாதி இழிவை, மடமையை ஒழிக்க முயற்சிப்பார்களா? அல்லது ஒழியத்தான் சம்மதிப்பார்களா? என்று யோசித்துப் பாருங்கள்.
திராவிட நாடு பிரிந்து கிடைத்து, சுரண்டும் ஜாதி ஒழிக்கப்பட்டு, சம உரிமை எல்லோருக்கும் ஏற்படும்படியான உணர்ச்சி வந்துவிட்டால், பிறகு நாம் சுலபத்தில் எதுவும் செய்து கொள்ள முடியும். அந்தக் காரியத்திற்கு ஆகத்தான் ஜஸ்டிஸ், சுயமரியாதைக் கட்சிகள் முயலுகின்றன. இந்தக் கட்சிகளில் இன்று மேல் ஜாதி யானுக்கோ அல்லது ஜாதிப் பேய், பார்ப்பனியப் பேய் பிடித்த பெரிய மனிதர் கள் என்பவர்களுக்கோ எவ்வித அதிகப் படியான செல்வாக்கோ, ஆதிக்கமோ இல்லை என்பதையும், இவ்விரண்டு கட்சி களும் ஜாதியிலேயே தொழிலாளர்களாக வும் உண்மைத் தொழிலாளர்களாகவும் ஏழைக் கூலி மக்களாகவும் உள்ள பெரும் பான்மையான மக்களுடைய கட்சி என்ப தாக பாமர மக்கள் உணர வேண்டுமாய் வேண்டுகிறோம். ஆகவே நம் பாமர மக்கள் இக்கட்சிகள் தோல்வியுறும் படியாகவோ தங்கள் கையிலிருந்து போய்விடும்படியாகவோ அல்லது எதிரிகள் விஷமப் பிரசாரத்தால் அழியும்படியாகவோ விட்டுவிடுவார்களேயானால் பிறகு ஜாதியில், கல்வி யில், தொழிலில், செல்வத்தில் கீழ்நிலை யில் இருக்கும் சுயமரியாதையோடு வாழ்வதற்கு இடமில்லாத மக்களுக்கு விமோசனமே இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
- குடிஅரசு - தலையங்கம் - 25.03.1944

Sunday, November 13, 2011

நம் திருமணமுறை எது?


மணமக்களே! தாய்மார்களே!! தோழர்களே!!!
இத்திருமணத்திற்கு நான் வர வேண்டும் என்று 2 மாதமாக தோழர் ஆதி நாராயணன் விரும்பினார். நான் சென்ற வாரம் முழுவதும் தஞ்சை ஜில்லாவில் சுற்றுப் பிரயாணம் செய்த அலுப்பாலும், சிறிது காய்ச்சல் இருந்ததாலும் வாராமல் நின்று விடலாம் என்று கருதினேன். ஆனால் சேலம் மாநாட்டின் தீர்மானத்தின் படி இராமநாதபுரம் ஜில்லாவின் விகிதமான குறைந்த அளவு 1000 மெம்பர்கூட திராவிட கழகத்திற்கு அதாவது ஜஸ்டிஸ் கட்சிக்கு சேர்க்கப்படாமல் இருப்பதால் இதைப்பற்றி கவனித்துப்போக இதை சந்தர்ப்பமாகக் கொண்டு இவ்வளவு அசவுகரியத்தில் இங்கு வந்தேன்.
நீங்கள் அது தெரிந்து நான் இங்கு வந்ததுமே 216 அங்கத்தினர்கள் இரசீதும், இதற்கு சந்தா ரூ. 27-4-0 கொடுத்து இந்த ஜில்லாவிற்கு கோட்டா சேர்க்கப்பட வேண்டிய (விகிதம்) 1000க்கும் மேலாகவே ஆக்கப்பட்டு வெளியிடும்படியாக செய்து விட்டதால், என்னுடைய சுற்றுப் பிரயாண அலுப்பும், காய்ச்சலும், பலவீனமும் எங் கேயோ போய்விட்டது. அதற்காக உங் களுக்கு நன்றி செலுத்துகிறேன். ஆனால் இவ்வளவோடு நின்றுவிடாமல் இதை ஜில்லாவுக்கு 5000 மெம்பர்களாவது சேர்க்கப்பட வேண்டும். செட்டி நாட்டிலும் விருதுநகரிலும் தீவிரமாக அங்கத்தினர் சேர்க்கப்படுவது கேட்டு நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்.
மற்றும், நாம் எந்த தேர்தலில் வெற்றி பெற நினைத்தாலும், ஏன்? அபேட்சகராய் நிற்க நினைப்பதானாலும் அத்தொகுதி ஓட்டர்கள் எல்லோரும் அங்கத்தினர் களாகச் சேர்க்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதுதான் நமது கட்சியின் உண்மையான பலத்திற்கு ஆதாரமாகும். மற்றபடி பொது உடைமையும், போலி சுயராஜ்ஜியத்தையும், மதமூட நம்பிக்கை யையும் பாமர மக்களிடம் சொல்லி ஏமாற்றி ஓட்டு வாங்குவதோ அல்லது சர்க்காரைக் கெஞ்சி பதவி பெறுவதோ இனி ஆபத் தாகவும், தற்கொலையாகவும், பயனற்ற தாகவும், பரிகசிக்கத்தக்கதாகவும்தான் முடியும். அன்றியும் அதனால் சில தனிப்பட்டவர்கள் சுயநலம் அடையலாமே ஒழிய, ஓட்டுக் கொடுத்த ஓட்டர்களுக்கு ஒன்றும் செய்ய முடியாது, ஆதலால் கூடு மானவரை வயது வந்தவர்களையெல்லாம் அங்கத்தினர்கள் ஆக்க முயற்சி செய் யுங்கள்.
திருமணம்
இத்திருமணத்தில் நான் என்ன புதிதாகப் பேசப் போகிறேன். இந்த முறை திருமணம் இப்போது நாட்டில் சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. அதிலும் இந்த நாடார் சமுதாயத்தில் இதுவே முறையும் உரிமையுமாக ஆகிவிட்டது. ஆதலால் இந்தத் திருமண முறையைப் பற்றி என்ன பேசுவது என்பது தோன்ற வில்லை. பொதுவாகவே திருமணம் என்ப தற்கு எந்த முறை தகுதியானது என்று சொல்லுவதற்கு ஒரு முறையுமே கிடை யாது. ஏதோ பழக்க வழக்கம் பெரியோர் நடத்திய என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்ல முடியாது! அதிலும் திராவிடர் களாகிய நமக்கு எந்தமுறை இருந்தது, எது சரி என்று எடுத்துக்காட்ட ஒன்றுமே யில்லை. புலவர்கள் ஏதாவது பிதற்றலாம், ஆனால் அது அவர்களுக்கே புரியாத தாகத்தான் இருக்கும்.
திருமணத்தின் அவசியம்
இந்த உலகத்தில் சொத்தைப் பற்றியும், மேல் உலகம் என்பதில் மோட்சம் என்பதைப் பற்றியும் லட்சியம் இல்லாவிட்டால் திருமணம் என்பதாக, வாழ்க்கை ஒப்பந்தம் என்பதாகக்கூட எதுவும் தேவையில்லை. நாம் தேடிய சொத்துக்கு நாம் பெற்ற பிள்ளை இருக்க வேண்டும் என்பதே திருமணத்தின் முக்கிய நோக்கமாகும். அதற்கும் அந்தந்த சமுதாயப்படி சொத்தை அனுபவிக்க சிலருக்கு ஆண் பிள்ளை வேண்டும், சிலருக்கு பெண்பிள்ளை வேண்டும். தேவதாசிகளும், மருமக்கட் தாயம் உள்ளவர்களும், தங்கள் சொத் துக்குப் பின் சந்ததியாக உரிமைக்கு பெண் குழந்தைகள் பெறவும், இல்லாவிட்டால் பெண்குழந்தையை தத்துக்கு எடுக்கவும் ஆசைப்படுகிறார்கள்; மற்றவர்கள் நம் போன்றவர்கள் ஆண் குழந்தை பெறவும், பிறக்காவிட்டால் ஆண்குழந்தைகளைத் தத்து எடுத்துக் கொள்ளவும் செய்கிறோம். இதற்காகவேதான், திருமணம் பெரிதும் சடங்காக, ஒப்பந்தமாக, பதிவாக சட்டத் திற்குள் அடங்கியதாகச் செய்ய வேண்டி யிருக்கிறது. இந்த நிலை மாறிவிட்டால் திருமணம் என்கின்ற வார்த்தையே மறைந்துபோகும்.
அதனால்தான் நான் இந்த முறைகூட முடிந்த முடிவல்ல என்று அடிக்கடி சொல்லி வருகிறேன். இனி 40, 50 வருஷங்கழிந்த பின்பு  அதாவது இந்த சொத்து முறைகள் மாறி பொது உடைமைமுறை வந்து தாண்டவமாடும்போது இந்த முறைகூட இருக்காது என்பதோடு இதை ஒரு மூட நம்பிக்கை; காட்டுமிராண்டிக் காலமுறை என்று சொல்ல வேண்டி வரும் என்ப தோடல்லாமல் இன்று உங்களில் பலரால் புரட்சிக்காரன் என்று கூறப்படுகிற என்னை ஒரு மூட நம்பிக்கைக்காரனான வைதிகப்பிடுங்கல் ராமசாமி என்று ஒருவன் இருந்தான் என்று என்னை உங்கள்  பிள்ளைகள் பேரன்மார்கள் சொல்லும் படியான  நிலைகூட வந்துவிடும் என்று நான் சொல்லுவதுண்டு.
நம் திருமண முறை ஏது?
ஆகையால் திருமணத்திற்கு ஒரு கட்டுப்பாடுதான் வேண்டியிருக்கிறதே ஒழிய, முறை ஒன்றும் இன்று தேவை யில்லை இங்கு கட்டுப்பாடே வேண்டாத காலம் வருமென்றால் முறை வேண்டிய காலம் எதற்காக வேண்டியிருக்கும்? ஒரு சமயம் கட்டுப்பாடு வேண்டியதில்லை என்கின்ற தன்மை நடைபெற, கட்டுப்பாடும் முறையும் வேண்டியதாக இருக்கலாம். இன்று நாமாகிய திராவிடர்களுக்கு நம்மைப் பற்றிய சரித்திரமும், நம் நாட்டைப் பற்றிய தன்மைகளும்கூடத் தெரியவில்லை யானால், நம் திருமணத்திற்கு என்ன முறை சிறந்தது என்று எப்படிக் கண்டுபிடிக்க முடியும்? அப்படித்தான் ஒன்று இருந் திருந்தாலும் அதைப் பற்றி இன்று பேசுவது எப்படி அறிவுடைமையும், பொருத்த முடையதுமாகும்? இன்று நாம் எலக்ட்டிரிக் (மின்சார) விளக்கு வெளிச்சத்தில் இருந்துகொண்டு, திராவிடர்களுக்கு முன்காலத்தில் விளக்கு எப்படி இருந்தது என்று ஆராய்ச்சி செய்தால், அது பழங் காலத்து மக்களுக்கு இருந்த அறிவைப் பற்றி குறிக்க உதவுமே தவிர அதைப் பயன்படுத்த முடியுமா? நாம் ஆகாயக் கப்பலில் பறந்து கொண்டு பழங்கால திராவிடர் எப்படிப் பிரயாணம் செய்தார்கள் என்று கண்டுபிடிக்க ஆராய்ச்சி நடத்தி னால் அது பழங்கால மக்கள் தன்மையை அறிந்து கொள்ள முடியுமே தவிர, அந்தக் காலத்து வாகனத்துக்குப் போக முடியுமா?
காலப்போக்கு
இதுபோல்தான் நம்முடைய ஒவ்வொரு பழங்கால சொந்தமும் ஆகும். நம் கடவுள், மதம், ஒழுக்கம், கடவுள், மத, ஒழுக்க நூல்கள் ஆகியவைகூட அப்படித் தானே இருக்கமுடியும்? மற்ற துறைகளில் அக்கால மக்களுக்கு என்ன அறிவு அனுபவமும் இருந்ததோ அதுதானே இந்தத் துறை களிலும் இருந்திருக்கும்? உதாரணமாக அந்தக் காலத்தில் பொய் பேசுகிற மனிதன் இருப்பது அதிசயிக்கத் தக்கதாக இருந் திருக்கும். ஆனால் இந்தக் காலத்தில் பொய் பேசாத மனிதன் இருப்பது அதிசயமாக இருக்கிறது. ஏனென்றால் காலம் மக்களை அப்படித் தள்ளிக்கொண்டு போகிறது. காலப் போக்குக்கு மனிதன் கட்டுப்பட்டாக வேண்டும். இல்லாவிட்டால் காட்டுக்குப் போய்விடவேண்டும். அங்கும் கூட காலம் அவனை தொடர்ந்து கொண்டுதான் போகும். பள்ளத்தை நோக்கித் தண்ணீர் ஓடுவது போல் காலத்தை நோக்கி மனிதன் போய்த்தான் தீருவான். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டியதில்லை. என் பேச்சும் இந்தக் கூட்டமும் உங்கள் இருக்கையும், காலப்போக்கைப் பொறுத்ததே தவிர, என்னையோ உங்களையோ பொறுத்த தல்ல. காலப்போக்கை அறியாத பட்டிக் காட்டார், பாமரத்தனம் கொண்டவர்கள் ஆகியவர்கள்தான் மாறுதல், என்னாலும் உங்களாலும் ஆனதாகக் கருதுவார்கள். ஆனால் அவர்களும் அறிவு அனுபவம்  பெற்றவுடன் காலப்போக்கு தான் காரணம் என்பதை உணர்ந்து கொள்ளுவார்கள். ஆனால் அதற்கு கொஞ்ச நாள் பிடிக்கும். உதாரணமாக அந்தக் கொஞ்ச நாள் பிடிக்கும் என்பதுதான் புரட்சிக்காரர்கள் என்பவர்களுக்கும், வைதிகர்கள் மாறுதல் வேண்டாதவர்கள், பழமை விரும்பிகள் என்பதற்கும் உள்ள பேதமாகும். அதுவே தான் வாலிபர்கள் என்பவர்களுக்கும், வயோதிகர்கள் என்பவர்களுக்கும் உள்ள பேதமாகும். அதாவது வாலிபர்களுக்கு புதுமை சீக்கிரம் தோன்றும், சீக்கிரம் பிடிக்கும். காரணம் அவர்கள் உள்ளம் எழுதாத வெறும் சிலேட்டு போன்றது. வயதானவர்கள்  உள்ளம் பல சங்கதிகள் எழுதப் பெற்றது. புதிய தன்மைகள் பதியப் பட வேண்டுமானால் முன்னால் பதிந்தவை கள் அழிக்கப்படவேண்டும். அவை சுலபத் தில் அழிக்க முடியாத மாதிரி ஆழப்பதிந்து போயுமிருக்கும்.
காந்தி - சங்கராச்சாரி
இதைத்தான் வைதிகம் என்றும், பிடிவாதம் என்றும், காலத்திற்குத் தகுந்த படி, மாற்றிக் கொள்ள முடியாமை என்றும் பெரிதும் சொல்லுகிறோம். உதாரணமாக காந்தியாரையோ, சங்கராச்சாரியாரையோ பகுத்தறிவுக்கும், பிரத்தியட்ச அனுபவத் திற்கும், இயற்கைக்கும் இணங்கும்படி செய்துவிட எப்போதாவது யாராலாவது ஆர்குமெண்ட் (எடுத்துச் சொல்லுவது) மூலம் முடியுமா என்று பாருங்கள். ஒரு நாளும் முடியாது. ஏன் அந்த உள்ளங்கள் பழமையினால் நிறைந்து போய்விட்டன. ஆழப் பதிப்பிக்கப்பட்டும் போய்விட்டன. அதோடு அவர்களுக்கு ஒரு அளவுக்கு அவசியமும் ஏற்பட்டு விட்டது. ஆதலால் நிர்ப்பந்தமில்லாமல் அவர்கள் பகுத்தறிவுக் கும், காலப் போக்குக்கும், முற்போக்குக்கும் சுலபத்தில் இணங்கமாட்டார்கள். அது போல்தான் அந்தத் தன்மையுள்ள மற்றவர் களும் ஆவார்கள், எனவே இந்தத் திரு மணம் இன்றைய காலப் போக்குக்கு என்பதோடு சரி.
இதுவே போதும்
இங்கு இன்று திருமணத்தில் தாலி கட்டினாலும்கூட இது பெரிதும் சுயமரி யாதைத் திருமணம் தான் என்கின்றேன். ஏன் என்றால் இத்திருமணத்திற்கு பார்ப் பான் இல்லை. குறைந்த அளவு சுயமரி யாதைத் திருமணத்திற்கு அதுவே போதும். ஏனெனில் நம்மை இழிவுபடுத்துபவனை நாம் மதிக்கவில்லை. அதோடு அவனை இன்று பகிஷ்கரித்திருக்கிறோம். நெருப்பு, விளக்கு, சட்டிபானை பொருளற்ற சடங்கு, சப்பையான காரியம் முதலியவை இல்லை. இதனால் இது பெரிதும் பகுத்தறிவு திருமணமாகும். இன்றோடு, ஒரு சிறு விருந்தோடு இத்திருமணம் தீர்ந்துவிடுவதால், இது சிக்கனத் திருமணமுமாகும். புராணக் கதை, புராணப் பாட்டு, பஜனைக் கச்சேரி முதலியவை இல்லாமல் இந்த மாதிரி பகுத்தறிவுச் சொற்பொழிவு வைத்ததால் இதை சீர்திருத்தத் திருமணம் என்றும் சொல்லலாம். மற்றும் சில காரியங்கள் அதாவது தாலி கட்டுவது, அதிக பணம் போட்டு சேலை துணி வாங்குவது முதலி யவை இன்று தவறானதாக இருந்தாலும் அவை காலப்போக்கில் அதாவது பெண் களுக்கு பகுத்தறிவும், சுயமரியாதையும், மான உணர்ச்சியும் ஏற்பட்ட உடன் தானாகவே நின்றுவிடும்.
ஆதலால் வாலிபர்களே, தாய்மார்களே, காலப்போக்கில் கலந்து உங்கள் இழிவு, ஏழ்மை (குறைபாடு), அறியாமை ஆகியவை  நீங்கும்படியாக அதைப் பயன்படுத்திப் புதிய உலகை சித்தரியுங்கள் என்று உங்களை வேண்டிக்கொள்கிறேன்.
(6.12.1944 அன்று இராமநாதபுரம் ஜில்லா ராஜபாளையத்தில் நடந்த தோழர்கள் பாலராஜு - சிவபாக்கியம் வாழ்க்கை ஒப்பந்ததிற்கு தலைமை வகித்த பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு)
- குடிஅரசு - சொற்பொழிவு - 16.12.1944