Sunday, October 14, 2012

பண்டிகைகள் புகுத்தப்பட்டதின் சூழ்ச்சி


தோழர்களே, தாய்மார்களே!
இன்று உங்கள் மத்தியில்  இருக்க நேர்ந்ததற்காக மிகவும் மகிழ்ச்சியடை கிறேன். சில தாய்மார்கள்  என்னைப்பற்றி அதிகமாகப் புகழ்ந்து பேசினார்கள். அதற்கு நன்றி செலுத்துகிறேன். பெண் களுக்காக இதுவரை நான் ஒன்றும் அதிக மாகச் செய்துவிட்டதாக நான் ஒப்புக் கொள்ள முடியாது. ஆனால் பெண்கள் விஷயத்தில் அநேக சீர்திருத்தக் காரி யங்கள் செய்ய வேண்டுமென்ற ஆசை வெகு பேரைப் பார்க்கிலும் எனக்கு அதிக மிருக்கிறது என்பதை ஒப்புக் கொள் கிறேன். நான் பல நாடகங்களுக்குத் தலைமை வகிக்கும் பெருமையைப் பெற் றிருக்கிறேன்.  என்றாலும் அவை அநேகமாக சீர்திருத்த நாடகங்களாகவே இருந்தன.
சென்னையில் மூடநம்பிக்கை அதிகம்
புராண நாடகங்களுக்கு என்னை அழைப்பதில்லை என்பது மாத்திரமல் லாமல் நானும் அதிகமாகப் போவதில்லை. ஆனால் இந்த நாடகத்திற்கு அழைத்த வர்கள் என்னிடம் இக்கூட்டத்திற்கு இன்று வெகு பெண்கள் இங்கு வரு வார்கள் என்றும், இந்த சமயத்தில் பகுத்தறிவு, சீர்திருத்த விஷயங்கள்பற்றிப் பேசலாம் என்றும் சொல்லி என்னை அழைத்தார்கள். அதனாலேயே நான் மிக ஆசையோடு ஒப்புக் கொண்டேன். சென்னை போன்ற நகரங்களில் பெண்மக்களிடம் சீர்திருத்தத்தைப் பற்றிப் பேசுவதென்றால் மிகவும் பயப்படவேண்டியிருக்கிறது. மற்ற ஊர்களைவிடவும் சில கிராமங்களை விடவும்கூட சென்னையில் மூடநம் பிக்கை அதிகமாய் இருக்கிறதைக் காண்கிறேன்.
சாதாரணமாக ஒரு கிழவி, அதுவும் வாலிப காலத்தில் மிக்க ஒழுக்க ஈனமாக நடந்து நைந்து போன ஒருத்தி, கழுத்தில் மஞ்சள் நூலை கத்தையாகக் கட்டி மாலைபோல் போட்டுக்கொண்டு, தலையை விரித்துப்போட்டு, நெற்றியில் ரூபாய் அகலம் மஞ்சளையும் குங்கு மத்தையும் அப்பிக்கொண்டு, கையில் ஒரு நெருப்புச் சட்டியை வைத்துக்கொண்டு ஆ... ஊ.... மாரியாயி காளியாயி என்று கத்தினால் எலக்ஷனில் மஞ்சள் பெட்டிக்கு ஓட்டுப் போட்டவர்கள்போல் அநேக பெண்கள் ஓடி வந்து அவள் காலில் தண்ணீரை ஊற்றி, அரிசி பருப்பு காய்கறி முறத்தில் வைத்து தேங்காய் பழம் உடைத்து, கற்பூரம் பற்ற வைத்து, விழுந்து கும்பிட்டு வாக்கு கேட்பதையும் ஆசி கூறக் கெஞ்சுவதையும் பார்க்கிறேன். இந்தக் காரியங்கள் மந்திரிகள் வீட்டுப் பெண்கள் கூட செய்கிறார்கள் இந்த மாதிரி மக்களிடம் என்ன சீர்திருத்தம் பேச நான் துணிவு கொள்ள முடியும்?
இன்று நம்முடைய சமுதாயத்திற்கு இருக்கும் குறைகளுக்கும் அவமானத்திற் கும் நம்மூடநம்பிக்கைகளே பெரிதும் காரணமாகும். அதுவும் நம் தாய்மார்களி டம் இவ்வளவு இருக்குமானால் பிறகு அவர்கள் வயிற்றில் பிறந்த பிள்ளைகளின் நிலை என்னவாகும்? எந்தச் சீர்திருத்த மும் பெண்களிடம் இருந்து வந்தால் அதற்குப் பலம் அதிகம்.
இன்று இங்கு நடித்த சகுந்தலை நாடகம் ஒரு மூடநம்பிக்கைக் கதை அல் லாமல் பெண் அடிமைக் கதை அல்லாமல் அதில் படிப்பினையோ, பகுத்தறிவோ என்ன இருக்கிறது? கொஞ்ச நாளைக்கு முன் இப்படித்தான் எங்கள் ஊரில் ஒரு பள்ளிக்கூடப் பெண்கள், மாணவர்கள் சாவித்திரி சத்தியவான் நாடகம் நடித் தார்கள். அக்கதையில் மூடநம்பிக்கை, பகுத்தறிவுக்கு முரண்பாடு ஏராளமாய் இருந்ததோடு, உலகில் உள்ள விதவைகள் என்பவர்களை எல்லாம் கற்பில்லாதவர் களாக ஆக்கிவிட்டது. இப்படி புராணக் கதைகள் அவ்வளவும் ஒரு படிப்பினையும் இல்லாமல் ஒழுக்க ஈனத்தையும் கற்பித்து விட்டு நம்மை இழிவுபடுத்தியும் விடு கின்றன.
கதை விவரம்
சகுந்தலை கதை ஒரு புராணக் கதை என்பது மாத்திரமல்லாமல் ஆரியர் தன்மையை விளக்கிக் காட்டக் கூடிய ஒழுக்கமற்ற வஞ்சகத்தில் இருந்து புறப்படுகிறது. அதாவது ஆரியர்கள் தேவனான இந்திரன் தன் பதவிக்குப் போட்டி போடும் ஆரியரல்லாத ஒருவனை ஏமாற்ற ஒரு ஆரியப் பெண்ணை அனுப்பி, அவள் மூலம் அவனுக்கு காம உணர்ச்சி யுண்டாக்கி வஞ்சிக்கிறான். அந்த ஆரியனல்லாதவன் அந்தப் பெண்ணால் ஏமாந்து போகிறான். இந்த ஏமாற்றத்தில் பிறந்த குழந்தைதான் சகுந்தலை. இந்தச் சகுந்தலை ஒரு ஆரியனல்லாதவன் ஏமாந்து போனதற்கு அறிகுறியாய் இருக்கிறாள். இந்த லட்சணத்தில் அந்த ஆணும் பெண்ணும் சேர்க்கையான உடனே ஒரு குழந்தை பிறந்து விடுகிறது. அது காட்டில் எறியப்பட்டு ஒரு பட்சியால் வளர்க்கப்படுகிறது. பிறகு ஒரு ரிஷியால் வளர்க்கப்படுகிறது. இதுவரை பார்த்தோ மானால் இதில் அறிவோ, ஒழுக்கமோ, படிப்பினையோ ஏதாவது இருக்கிறதா? ஏதாவது இருக்குமானால் ஆரியர்கள் ஒழுக்கம் எப்படிப்பட்டது என்பதையும், அவர்கள் ஒருவனை ஏமாற்றவோ ஒரு காரியத்தைச் சாதிக்கவோ என்ன என்ன முறைகள் கையாளுவார்கள் என்பதையும் அறிந்து கொள்ள இதில் ஒரு படிப்பினை இருக்கலாம். அதைத் தெரிந்து கொள்வ தற்கும் எத்தனை மூடநம்பிக்கைக்கு ஆளாக வேண்டி இருக்கிறது பாருங்கள்.
இனி சகுந்தலை கலியாணத்தைக் கவனியுங்கள். ராசகுமாரன் என்கிற காரணத்தால் கண்டதும் காதல் - உடனே கர்ப்பம் - பிறகு வலிய அவனிடம் போய் கெஞ்சுதல், பிறகு என்ன என்னமோ மூடநம்பிக்கை கற்பனைகள்.
இந்த நாடகத்தில் ஆண் பெண் காதலாடின சில வேடிக்கை தவிர வேறு என்ன லாபம்? அதுவும் வெகு சிறு பச்சிளங் குழந்தைகளை காதலாடச் செய்தோம்.
குற்றம் சொல்லவில்லை
இதை நான் குற்றம் சொல்வதாக யாரும் கருதக் கூடாது. இதன் ஆசிரியர் கள் மிகக் கஷ்டப்பட்டு இச்சிறு குழந் தைகளை இவ்வளவு அருமையாய் நடத்தும்படி கற்பித்த திறத்தை நான் பாராட்டுகிறேன். ஆனால் பயனில்லாத காரியம் என்றுதான் சொல்லுகிறேன். நமது நாடகக் கதைகள் 100-க்கு 90 இப்படியே இருக்கின்றன. வயிற்றுப் பிழைப்புக்கு நடிப்பவர்கள் எதையோ நடித்து வயிறு வளர்க்கட்டும். இந்த முறை நாடகத்தில் மாத்திரமல்ல; வேறு அனேக காரியங்களில் அரசியல், சமுதாய இயல், பகுத்தறிவு இயல், சுயமரியாதை இயல் என்பவற்றிலும்கூட வயிற்றுச் சோற்றுக் காகவும் சுயநலத்துக்காகவும் எந்த வேஷமும் போடுகின்ற மக்கள் இருக் கிறார்கள். ஆதலால் இன்றைய உலக சராசரி ஒழுக்கத்தில் இதை கெட்டதென்று சொல்ல வரவில்லை. ஆனால் யாதொரு சுயநல உணர்ச்சி இல்லாமல் உற்சாகத் திற்காகவும், கலை உணர்ச்சிக்காகவும் செய்யப்படுகிற காரியத்தில் இக்கேடு களைப் புகுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. நம் எதிரிகளாகிய ஆரியர்கள் ஆதியில் தாங்கள் நம்மீது வெற்றி பெற்று நம்மை அடிமை கொண் டவுடன் மறுபடியும் அதிலிருந்து மீளா திருக்கவும், மீளுவதற்கு நினைக்காமல் இருக்கவும் செய்து கொண்ட சூழ்ச்சி பிரசாரங்களில் இக்காரியமும் அதாவது புராணக் கதைகள் நடிப்பதும் ஒன்றாகும்.
இன்று மக்கள் பெயர்கள் எல்லாம் திராவிட எதிரிகளான ஆரிய தெய்வங்கள், ஆரிய முனிகள், ஆரிய ரிஷிகள், ஆரிய அரசர்கள் ஆகியவைகளின் பெயர்களா கவே ஆகிவிட்டன.
எல்லாம் ஆரிய மயம்
சங்கீதம் என்னும் இசையும் வெறும் ஆரியக் கடவுள்கள் பிரார்த்தனைகள் பாட்டாக வந்துவிட்டது. மிக்க ஆபாச மாகவும் விகாரமாகவும் பாடப்படும் பாட் டுகள்கூட ஆரியக் கடவுள்கள் செய்ததாக வும் அவர்கள்மீது பாடினதாகவும் கற்பிக்கப்பட்டு விட்டன. வீட்டில் அழகுக் காக தொங்கவிடும் சித்திரப் படங்கள் முழுமையும் ஆரியக் கடவுள்களாக ஆகி விட்டன. வீட்டில் புழங்கும் துடைப்பக் கட்டை முதல் ஆரியக் கடவுள்களின் பிரதிரூபமாக ஆக்கப்பட்டு விட்டன. பரதம் என்கின்ற நாட்டியக் கலையும் ஆரியக் கடவுள், அக்கடவுள் செய்கை ஆகியவை களையே கொண்டவைகளாகி விட்டன. பண்டிகைகளும், உற்சவங்களும், உல்லா சங்களும் எல்லாம் ஆரிய பிரசாரமாகவே ஆகிவிட்டன - நமது கலைகள் முழு வதும் ஆரியக் கலப்பாகிவிட்டதுடன் இலக்கியங்கள், இலக்கணங்கள்கூட ஆரியக் கலப்பாகவே ஆகிவிட்டன. தொல்காப்பியம், குறள் முதலியவை களில்கூட ஆரிய செல்வாக்கும் கலப்பும் ஏற்பட்டு விட்டது என்பது சில ஆராய்ச்சி நிபுணர்களின் கூற்றாக ஆகிவிட்டது. சில நடவடிக்கைகளுக்கு தமிழில் பெயர் சொல்ல வார்த்தைகளே கிடைப்பது கஷ்டமாகி விட்டது. சிலவற்றைத் தமிழில் சொன்னால் கெட்ட வார்த்தைகள், உச்சரிக்கக் கூடாதவைகள் ஆகிவிடுகின்றன. அவற்றையே வட மொழியில் சொன்னால் மதிக்கப்பட்ட வார்த்தைகளாக ஆகிவிடுகின்றன. இப்படியாக தமிழர்களுக்கு இன்று எதுவும் சொந்தம் இல்லாமல், ஆதாரம் இல்லாமல் ஆரியத்தையே கொண்டு வாழும் படியான நிலைமை ஏற்படுத் தப்பட்டு அதிலிருந்து வேறுபடுவது என்றால் மிக்க வேதனைப்படும்படி ஆகிவிட்டது.
நமது இலக்கியம் அழிந்த விதம்
ராமாயணம், பாரதம், பாகவதம், கந்தபுராணம், பெரிய புராணம், திரு விளையாடல் புராணம் இவை தமிழில் செய்யப்பட்டிருக்கின்றன என்பதல்லாமல் இவற்றுள் ஒழுக்கமோ, தமிழர் உணர்ச் சியோ ஏதாவது இருக்கிறதாக சொல்ல முடியுமா? நமது சமயம் பண்டிகை உற்சவம், கடவுள், வாழ்வு நாள், கோள் எல்லாம் இவைகளில் அடங்கியவை அல்லாமல் வேறு ஏதாவது ஆதாரம் வைத்திருக் கிறோமா? ஒரு நண்பர் சொன்னார் இந்த நவராத்திரி பண்டிகையும், ஆடிப்பெருக்கு பண்டிகையும் பழைய இலக்கண இலக் கியங்களையும் கலைகளையும் ஒழிப்ப தற்கும் பயன்பட்டு வந்திருக்கின்றன என்று, நம் வீட்டில் உள்ள பழைய ஆதாரங்கள் எல்லாம் ஆடிப்பெருக்கில் வெள்ளத்தில் கிணற்றில் கொண்டு போய் போடுவதையும், நவராத்திரியில் வீடு சுத்தம் செய்வது என்னும் பேரால் பழைய வைகளை குப்பையில் எறிந்து விடு வதையும் ஒரு காரியமாகக் கையாண்டு வந்திருக்கிறோம்.
புத்தகங்கள், அச்சுகள் இல்லாத பழங்காலத்தில் நம் கலைகளுக்கு, இலக் கியங்களுக்கு ஏதோ சிலரிடம்தான் ஏட்டு ஓலை ரூபமாக சில ஆதாரங்கள் இருந் திருக்கும். அவை அவர்கள் பிள்ளை களுக்கு முக்கியமானவைகளாக இருந் திருக்காது இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும். அல்லது கேட்கும் வேறு ஒருவனுக்கு சுலபமாய் எடுத்துக் கொடுத்து விடுவான். அல்லது கரையான், பூச்சி, புழு அரித்துவிடும். கடைசியாக ஆடிப்பெருக்கத்தின்போது வெள்ளத் திற்கும், நவராத்திரியின்போது குப்பை மேட்டுக்கும் போய் சேர்ந்துவிடும். இப்படியேதான் நம் இலக்கியங்கள் ஒழிந்து போய்விட்டன. இன்று நாம் காண நம் கண்ணெதிரிலேயே ஒன்று நடந்து இருக்கிறது. தமிழ்நாட்டில் ஏட்டுப் பிரதியில் உள்ள தமிழ் இலக் கியங்கள் அவ்வளவும் அச்சுப் போடுவ தாக தோழர் உ.வே. சாமிநாதய்யர் அரித்து எடுத்துக் கொண்டு வந்து விட்டார். அச்சாகி வெளி வந்தவைகள் அவ்வளவும் அய்யர் இஷ்டப்படியாயும் அய்யர் இஷ்டப்பட்டதுமாகத்தான் வெளியாயிருக்குமே ஒழிய இயற்கை ரூபத்தில் வெளியாயிருக்க முடிந்திருக் குமா என்று பாருங்கள். இதுபோலவே நம் பழைய சமய, ஒழுக்க, வழக்க ஆதா ரங்கள் ஒழிந்தே போய் விட்டன. பண்டிதர் வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் எழுதியுள்ள ஒரு ஆராய்ச்சிப் புத்தகத்தில் ஆரியர்கள் வந்தவுடன் திராவிடர்களை வெற்றி பெற்று அடக்கி திராவிட ஆதாரங்களையெல்லாம் கைப்பற்றி, தங்களுக்கு ஏற்றபடி ஆரியத்தில் மொழி பெயர்த்து தங்களுடையது போல் வெளியிட்டார்கள். தங்கள் சமயங்களை யும், கடவுள்களையும், பழக்க வழக்கங் களையும், தங்கள் உயர்வுக்கு ஏற்றபடி கற்பித்துக் கொண்ட கற்பனைகளையும் புகுத்தினார்கள். இவற்றை அறிஞர்கள் சிலர் மறுத்தாரென்றாலும் பாமர மக் களுக்குள் புகுத்தப்பட்டுவிட்டன என்று பொருள்பட துணிவுடன் எழுதி இருக் கிறார்.
மற்றும், இன்றைய பலஆராய்ச்சியாள ரும், இன்று தமிழரிடையுள்ள சமயம் இலக்கியம் இதிகாசம் என்பவை ஆரியர் களுடையன என்றும், ஆரியர்களால் புகுத்தப்பட்டவை என்றும் விளக்கி இருக்கிறார்கள். அப்படி இருக்க நாம் இவை தெரிந்த பின்பும் சமுதாயத்தில் இழிவாக்கப்பட்டு தீண்டாத மக்களாய் கருதப்பட்ட பின்பும் அவைகளைக் கொண்டாடலாமா என்று கேட்கிறேன்.
பண்டிகைகள்
தோழர்களே! நாம் கொண்டாடும் பண்டிகைகள் எல்லாம்கூட ஆரிய பிரசாரத்திற்காகவே ஏற்பட்டவைகளாகும். அதுவும் பல நமது இழிவுக்காகவே பயன்படுவதாகவும் இருக்கின்றன. ஆரிய மதத்தையும் ஆரியக் கொள்கைகளையும் பின்பற்றும்படியும் வலியுறுத்துகின்றன.
நாம் ஆரிய வர்க்கம் அல்ல என்றும், ஆரிய சமயம் ஆரிய வர்ணாசிரமக் கொள்கை, ஆரியப் பழக்க வழக்கம் முதலியவைகளுக்கு நாம் கட்டுப் பட்டவர்கள் அல்ல என்றும், நாம் திராவி டர்கள், தமிழர்கள் என்றும், நமக்கும் ஆரியர்களுக்கும் சமுதாயத் துறையில் ஒரு ஆட்சியின்கீழ் இருக்கும் குடிகள் என்பதைத் தவிர வேறு சம்பந்தம் ஒன்றும் இல்லையென்றும், நமது லட்சியம் வேறு அவர்களது லட்சியம் வேறு என்றும் கருதி முடிவு பெற்றால்தான் நமக்கு இந்த நாட்டில் சமுதாயத் தொண்டுக்கும் அரசியல் தொண்டுக்கும் தனிப்பட்ட வேலை இருக் கின்றதே ஒழிய மற்றபடி நாம் ஆரியத் திற்குக் கட்டுப்பட்டவர்கள் என்றால் நமக்கு எவ்வித பொறுப்பும் வேலையும் முயற்சியும் இல்லை என்பதுதான் எனது தாழ்மையான அபிப்பிராயம். இதில் நமது நிலை மிகத் தெளிவாய் இருக்க வேண்டும். வழவழ கொழ கொழா வெண்டைக்காய்த் தன்மை கண்டிப்பாய் உதவவே உதவாது. ஒரு தெளிவான முடிவுக்கு திராவிடர்கள் வராததாலேயே இந்த இருபதாவது நூற்றாண்டில் அய்ரோப்பியர் ஆட்சியில் கூட திராவிடன் ஆரியருக்கு இழி பிறப்பாக இருக்கிறான்.

வைகுண்ட ஏகாதசி பூசம்-கிராம தேவதை


வைகுண்ட ஏகாதசி பூசம்
இனி அதற்கு அடுத்த மார்கழி மாதம் வந்தால் வைகுண்ட ஏகாதசி என்று கூட்டம் கூட்டமாய் சீரங்கம் முதலிய ஊர்களுக்குப் பணம் செலவு செய்து கொண்டு போவதும் தை மாதம் வந்தால் பூசம் என்று காவடிகளைத் தூக்கிக் கொண்டு பழனி முதலிய மலைகளுக்கு போவதும், பொய்யையும் புளுகையும் காவடிக் கதையாய்ச் சொல்வதும், அறுத்து சமைத்த பாம்பும் மீனும் கோழியும் உயிர் பெற்றுவிட்டன என்பதும், மண்ணும் சர்க்கரையாகி விட்டது என்பதும், வெட் டித் துண்டாக்கப்பட்ட குழந்தை உயிர் பெற்று எழுந்துவிட்டதென்பதும், இன்னும் இதுபோல பல பொய்களை வெட்கமில் லாமல் சொல்வதும், அழுக்குக் குளங் களில் குளித்து அழுக்குத் தண்ணீரை சாப்பிட பஞ்சாமிர்தம் என்னும் ஒரு அசிங்கமான வஸ்துவை கண்டபடி சாப் பிட்டு வயிற்றுப் போக்கெடுத்து காலரா ஏற்பட்டு திரும்பிப் போகும் போது வழியில் சாவதும் சிலர் அந்த காலராவைத் தங்கள் தங்கள் ஊருக்குக் கொண்டுபோய் பரவவிட்டு அங்குள்ளவர்களைக் கொல் லுவதும் அவர்கள் நதி வாய்க்கால் ஓரங்களில் குடி இருந்தால் அந்த காலரா அசிங்கம் வாய்க்கால்களில் கலந்து கரை ஓரங்களில் இருக்கும் ஊர்களிலெல்லாம் பரவி மக்கள் நூற்றுக்கணக்காக சாவது மான காரியங்கள் வருஷந்தோறும் நடை பெறுகின்றன. சாதாரணமாக சீரங்கம் வைகுண்ட ஏகாதசி உற்சவத்திலும் பழனி தைப்பூச உற்சவத்திலுமே ஏற்பட்ட சுகா தாரக் கெடுதியால் ஒவ்வொரு வருஷமும் முதல் முதல் அங்கு காலரா உற்பத்தியாகி பிறகு இரண்டு மூன்று மாதம் தென்னா டெல்லாம் பரவி மாதம் 1க்கு இரண்டு, மூன்று ஆயிரம் பேருக்குக் குறைவில் லாமல் கொள்ளை கொண்டு போகின் றது. இதன் உண்மையை ஒருவரும் அறியாமல் பேதியாயி மாரியாயி ஓங் காளியாயி ஊருக்கு ஒருகுடம் எண் ணெய் கொண்டு வந்து ஆளுக்கு அரை கரண்டி கொடுத்துவிட்டாள் என்று சொல்லி ஊரிலுள்ள மக்களில் சில பாகம் செத்து காலரா தானாக ஒடுங்கியபின் ஓங்காளியின் பொங்கலும் காளி பூஜையும் செய்து பேதியை நிறுத்திவிட்டதாக வெட் கமில்லாமல் பேசிக் கொள்வதும் அன்றியும்,
கிராம தேவதை
கிராமங்களிலெல்லாம் மார்கழி, தை மாதங்களிலேயே மாரியம்மன் பண்டிகை கொண்டாடி வெந்தும் வேகாத பொங் கலும், பச்சைமாவும், சரியாய் சுத்தம் செய்யாத வேகாத மாமிசமும் கண்டபடி புசிப்பதால் அஜீரணம் காலரா முதலிய வியாதிகள் உண்டாவதையும் பார்க்கின் றோம். பொதுவாகவே நமது நாட்டில் கூட்டம் சேர்ந்தாலே அசுத்தம் உண் டாக்கி வியாதிகள் ஏற்படுவதை அனு பவத்தில் பார்த்து வருகின்றோம்.
சிவராத்திரி
இனி அதற்கடுத்த மாசி மாதம் வந் தால் சிவராத்திரி என்று கண்டபடி கிழங்கு வகைகளையும் தானியவகை களையும் பலகார வகைகளையும் ஒரே நாளில் செய்து அளவுக்கு மேல் தின்று குழந்தைகளையும் தின்னச் செய்து அஜீரணத்தை யும் வயிற்று வலியையும் உண்டாக்கிக் கொள்வதோடு இதனால் ஏற்படும் செலவு எவ்வளவு என்பதை யாராவது யோசித்துப் பார்க்கின்றார்களா? என்று கேட்கின்றோம். இப்படியே ஒவ் வொரு மாதமும் உற்சவமும், பண்டிகை களும், விரதங்களும், சடங்குகளும் ஏற் பட்டு மொத்தத்தில் வருஷத்தில் எவ்வளவு கோடி ரூபாய்கள் செலவு, எவ்வளவு வியாதிகள் வரவு, எவ்வளவு உயிர்கள் போக்கு என்பவைகளை யார் கவனிக்கின் றார்கள்? இந்தப் பணம் எல்லாம் தேசிய பணமல்லவா? ஏழைத் தேசம், தரித்திர தேசம், அடிக்கடி பஞ்சம் வரும் தேசம், வேலையில்லாமல் தொழி லில்லாமல் கூலிக்காரர்கள் கும்பல் கும்ப லாய் பட்டினி கிடந்து மடிவதுடன் பெண்டு பிள்ளை குழந்தைகளுடன் வெளிநாட்டிற் குக் கூலியாக கப்பலேறும் தேசம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற நாம் எத் தனை நாட்களை, எத்தனை ரூபாய்களை எத்தனை ஊக்கங்களை இந்த பாழும் அர்த்தமற்ற பொய்யான ஒரு காசுக்கும் உதவாததான நமக்கு இழிவையும் அவ மானத்தையும் தருவதான பண்டிகைக்கும் உற்சவத்திற்கும் பூஜைக்கும் சடங்குக் குமாக ஒவ்வொரு வரும் செலவு செய்கின் றோம் என்பதை கவனித்தால் இந்த நாடு பணமில்லாத நாடா அல்லது புத்தி இல் லாத நாடா என்பது நன்றாய் விளங்கும்.
இது யார் சூழ்ச்சி?
எனவே, இப்படிக்கெல்லாம் சொல் வதைப்பார்த்தால் இந்த பண்டிகை களையும் உற்சவம் முதலியவைகளையும் ஏற்படுத்தியவர்கள் எல்லோரும் அறிவில் லாதவர்களா என்கின்ற கேள்வி பிறக்க லாம். நான் அவர்களை அறிவில்லாதவர் என்று சொல்ல இஷ்டப்படமாட்டேன். மற்ற படியோ, என்றால் பெரும்பாலும் அவர் களைச் சுயநலக்காரர்களும், தந்திரக் காரர்களும் அதிகார ஆசை உடையவர் களுமாயிருக்க வேண்டுமென்றே சொல் வேன்.  என்புத்திக்குட்பட்ட வரையில் இந்த பண்டிகை உற்சவம் முதலியவை எல்லாம் புரோகிதர்களான பார்ப்பனர் களும் ஆட்சிக்காரர்களான அரசர்களும் கலந்து கண்டுபிடித்து செய்த தந்திர மென்பதே எனது அபிப்பிராயம். உலகத் தில் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அறி யாமைக்கும் கொடுமைக்கும் புரோகிதர் களும் அரசர்களுமே சேர்ந்து கூட்டுப் பொறுப்பாளர்களாவார்கள். சாதாரண மாக உலக சரித்திரத்தில் கொடுமைக் காரர்களும் சூழ்ச்சிகாரர்களாய் இருந்த வர்களே புரோகிதர்கள் என்கின்ற உயர்ந்த ஜாதிக்காரர்களாகவும் கொள்ளைக் காரர்களும் மூர்க்கர்களுமாயிருந்தவர் களே அரசர்களாகவும் ஏற்பட்டு இருக் கிறார்கள். இவ்விருவரும் ஜனங்களை ஏய்த்து ஆதிக்கம் செலுத்த வகை கண்டு பிடிக்க வேண்டிய அவசியமுடையவர்கள்.
அந்தப்படி மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி வாழ வேண்டுமானால் அந்த மக்களை அறிவினாலும் செல்வத்தினா லும் தாழ்மைப்படுத்தி வைத்திருந்தால் தான் முடியும். ஒரு மனிதன் அறிவுடை யவனா யிருப்பானானால் புரோகிதர் களுக்கு ஏமாற மாட்டான். செல்வமிருக் குமானால் அரசனுக்குப் பயப்பட மாட் டான். ஆகையால் அறிவும் செல்வமும் இல்லாமல் செய்வதற்கே கோயில் உற்சவம் பண்டிகை சடங்கு ஆகியதான செலவுக்கு ஏற்றவழிகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள். மக்கள் சம்பாதிக்கும் பணங்களில் கணக்குப் பார்த்தால் பெரும்பாகமும் இவைகளுக்கே செலவு செய்யும்படியாகவும் மற்றும் மேல் கொண்டு மீதி ஆவதெல்லாம் இவர்கள் சமுகத் திற்கே பயன்படும்படியாகவும் மற்றும் மேற்கொண்டு ஒவ்வொரு குடும்பமும் அதாவது நூற்றுக்குத் தொண்ணூறு குடும்பங்கள் இவைகளின் பயனாய் கடன்காரர்களாக இருக்கவுமே இருந்து வரப்படுகின்றது. எனவே, நமது நாடு என்றைக்காவது அறிவுள்ள நாடாகவும் செல்வ முள்ள நாடாகவும், சுயமரியாதை உள்ள நாடாகவும் இருக்க வேண்டுமானால் முதலில் உற்சவம், பண்டிகை, சடங்கு, கோயில் பூஜை ஆகியவை ஒழிந்தாக வேண்டும். இவைகளை வைத்துக் கொண்டு மலைகளை எல்லாம் தங்கமும் வைரமுமாக ஆக்கினாலும் சமுத்திரங்களை யெல்லாம் பாலும் நெய்யும் தேனுமாக ஆக்கினாலும் மேல்கண்ட உற்சவம், சடங்கு, கோவில் பூஜை, பண்டிகை ஆகியவைகளே சாப் பிட்டு விடும். ஆதலால் இனி மேலாவது இம்மாதிரியான காரியங்களுக்கு அடி மையாகி வீண் செலவு செய்யக் கூடாது என்பதே எனது ஆசை.
                                                                                                                                              - குடிஅரசு-சொற்பொழிவு-20.10.1929

தீபாவளி-கார்த்திகை தீபம்



இனி அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை என்று கஷ்டமும் நஷ்டமும் கொடுக்கத்தக்க பண்டிகையொன்று வரப்போகின்றது. அதிலும் ஏதாவது, அறிவுடைமை உண்டா? என்று கேட் கின்றேன் தீபாவளி பண்டிகையின் கதையும் மிக்க ஆபாசமானதும், இழி வானதும், காட்டுமிராண்டித்தனமானது மாகும், அதாவது விஷ்ணு என்னும் கடவுள் பன்றி உருக்கொண்டு பூமியைப் புணர்ந்ததன் மூலம் பெறப்பட்டவனான நரகாசூரன் என்பவன் வருணனுடைய குடையைப்பிடுங்கிக் கொண்டதால் விஷ்ணு கடவுள் கிருஷ்ணாவ தாரத்தில் கொன்றாராம். அந்தத் தினத்தைக் கொண்டாடுவதற்கு அறிகுறியாக தீபாவளி பண்டிகை கொண்டாடுவதாம்.
சகோதரி சகோதரர்களே! இதில் ஏதாவது புத்தியோ மனிதத் தன்மையோ இருக்கின்றதா என்று பாருங்கள்! விஷ்ணு என்னும் கடவுள் பூமியை புணருவது என்றால் என்ன என்றாவது அது எப்படி என்றாவது, நரகாசூரன் என்றால் என்ன? வருணன் என்றால் என்ன? வருணன் குடை என்றால் என்ன? என்ப தாவது, அப்படி ஒன்று இருக்க முடியுமா என்றாவது,  இவை உண்மையா என்றாவது கருதிப் பாருங்கள்! இப்படி பொய்யானதும் அர்த்தமற்றதுமான பண்டிகையினால் எவ்வளவு கஷ்டம்? எவ்வளவு ரூபா நஷ்டம்? எவ்வளவு கடன்? எவ்வளவு மனஸ்தாபம்? எவ் வளவு பிரயாணச் செலவு? என்பவை களை ஒரு சிறிது கூட நமது மக்கள் கவனிப்பதில்லையே! அப் பண்டிகையை உத்தேசித்து ஒவ்வொருவரும் தனது யோக்கியதைக்கும் தேவைக்கும் மேற்பட்ட பணம் செலவு செய்து, துணி வாங்க ஆசைப்படுகிறான்; தன்னிடம் ரூபாய் இல்லா விட்டாலும் கடன் வாங்கு கின்றான்.
கடன் என்றால் வட்டி அல்லது ஒன்றுக்கு ஒன்றரை பங்கு கிரையம் ஏற்பட்டு விடுகின்றன. இதுதவிர மாமனார் வீட்டு செலவு எவ்வளவு? தவிர சுத்த முட்டாள்தனமான பட்டாசு கொளுத்துவது எவ்வளவு? மற்றும், இதனால் பலவித நெருப்பு உபாதை ஏற்பட்டு வீடு வேகுதலும், துணியில் நெருப்பு பிடித்து உயிர் போதலும், பட்டாசு சுடுவதாலும் செய்வதாலும் மருந்து வெடித்து உடல் கருகி கண், மூக்கு, கை, கால், ஊமையாவதுமான காரியங்கள் எவ்வளவு நடக்கின்றது? இவ்வளவும் அல்லாமல் இந்த பண்டிகை கொண்டாடு வதற்கு அறிகுறியாக எவ்வளவு பேர்கள் கள்ளு, சாராயம் குடித்து மயங்கி தெருவில் விழுந்து புரண்டு, மானம் கெடுவது எவ்வளவு? மேலும் இதற்காக இனாம் இனாம் என்று எத்தனைப் பாமர மக்கள் பிச்சை எடுப்பது அல்லது தொந்தரவு கொடுத்து பணம் வசூல் செய்வது ஆகிய இந்தக் காரியங்களால் எவ்வளவு பணம், எவ்வளவு நேரம், எவ்வளவு ஊக்கம், செலவாகின்றது என்று கணக்குப்பாருங்கள். இவை களை எல்லாம் எந்த இந்திய பொரு ளாதார தேசிய நிபுணர்களாவது கவனிக்கிறார்களா? என்று கேட்கின் றேன்.
துலாஸ்தானம் தவிரவும் இந்து மதத்திலேயே அய்ப்பசி துலாஸ்தான மென்று புதுத் தண்ணீர் காலத்தில் நதிகளில் போய் அழுக்குத் தண்ணீரில் தினம் தினம் காலையில் குளிப்பதும், புதுத்தண்ணீர் ஒத்துக் கொள்ளாமல் கஷ்டப் படுவதும் இதற்காக ஊரைவிட்டு விட்டு ஊர் பணம் செலவு செய்து கொண்டு போய் கஷ்டப்படுவதும். ஒன்று இரண்டு தண்ணீர் இழுத்து கொண்டு போகப் படுவதும், குளித்து முழுகிவிட்டு நதிக்கரையில் இருக்கும் பார்ப்பனர் களுக்கு அரிசிப் பருப்பு பணம் காசு கொடுத்து அவன் காலில் விழுவதுமான காரியங்கள் செய்வதும், ஆதிமுதல் அந்தம் வரை அத்தனையும் பொய்யும் ஆபாசமுமான காவிரிப்புராணம் படிக்க கேட்பதும் அதற்காக அந்த பொய்யையும் கேட்டுவிட்டு பார்ப்பானுக்குச் சீலை, வேஷ்டி, சாமான், பணம் கொடுத்து காலில் விழுவதுமான காரியம் செய் கின்றோம். காவேரியைப் பெண் தெய்வ மென்பதும் அதில் ஆண்கள் குளிப்பது மான காரியம் ஆபாசமல்லவா?
கார்த்திகை தீபம்
இனி அதற்கு அடுத்த மாதமாகிய கார்த்திகை மாதம் வந்தால் கார்த்திகைப் பண்டிகை என்று வீணாக ஆயிரக்கணக் கான தீபம் கொளுத்துவதின் மூலம் எண்ணெயையும், நெய்யையும் பாழாக்கி புகைப்பதும், மலைகளின் பேரில் கட்டை களையும் விறகுகளையும் போராய் குவித்து அதில் நெய்யையும் வெண் ணெயையும் டின்னு டின்னாய், குடம் குடமாய் கொட்டி கொளுத்துவதும், இந்த வேடிக்கை பார்க்க திருவண்ணாமலை, திருச்செங்கோடு முதலிய மலைக்கோயில் உள்ள ஊர்களுக்கு ஜனங்கள் லட்ச லட்சமாய் பணம் செலவுசெய்து ரயில் சார்ஜ் கொடுத்து நெருக்கடியில் சிக்கிக் கஷ்டப்பட்டு கண்ட ஆகாரத்தைப் புசித்து வயிற்றைக் கெடுத்துக் கொண்டு ஊர் வந்து சேருவதும் விளக்கு நெருப்பில் பல பெண் குழந்தைகள் துணியில் நெருப்புப் பிடித்து உடல் வெந்து சாவதும், ஆகிய காரியங்கள் இல்லாமல் அவைகளால் வேறு ஏதாவது பலன் உண்டா என்று கேட்கின்றேன். முன் போலவே இந்தப் பண்டிகை மூலமும் வருஷம் ஒன்றுக்கு இந்த நாட்டில் எவ்வளவு ரூபாய்கள் செலவாகிறது என்றும் எவ்வளவு நேரமும் அதிலும் செலவாகின்றது என்றும் எந்த இந்திய தேசிய பொருளாதார நிபுணர் களாவது கணக்கு பார்த்தார்களா? என்று கேட்கின்றேன்.
இருக்கிறார்கள். மக்கள் சம்பாதிக்கும் பணங்களில் கணக்குப் பார்த்தால் பெரும்பாகமும் இவைகளுக்கே செலவு செய்யும்படியாகவும் மற்றும் மேல் கொண்டு மீதி ஆவதெல்லாம் இவர்கள் சமுகத் திற்கே பயன்படும்படியாகவும் மற்றும் மேற்கொண்டு ஒவ்வொரு குடும்பமும் அதாவது நூற்றுக்குத் தொண்ணூறு குடும்பங்கள் இவைகளின் பயனாய் கடன்காரர்களாக இருக்கவுமே இருந்து வரப்படுகின்றது. எனவே, நமது நாடு என்றைக்காவது அறிவுள்ள நாடாகவும் செல்வ முள்ள நாடாகவும், சுயமரியாதை உள்ள நாடாகவும் இருக்கவேண்டுமானால் முதலில் உற்சவம், பண்டிகை, சடங்கு, கோயில் பூஜை ஆகியவைகள் ஒழிந்தாக வேண்டும்.
இவை களை வைத்துக் கொண்டு மலைகளை எல்லாம் தங்கமும் வைரமுமாக ஆக்கினாலும் சமுத்திரங்களை யெல்லாம் பாலும் நெய்யும் தேனுமாக ஆக்கினாலும் மேல்கண்ட உற்சவம், சடங்கு, கோவில் பூஜை, பண்டிகை ஆகியவைகளே சாப்பிட்டு விடும். ஆதலால் இனி மேலாவது இம்மாதிரியான காரியங்களுக்கு அடிமையாகி வீண் செலவு செய்யக் கூடாது என்பதே எனது ஆசை.
- குடிஅரசு - சொற்பொழிவு - 20-10-1929


Tuesday, October 9, 2012

சரஸ்வதி பூஜை-புரட்டாசி சனிக்கிழமை



சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்த மற்ற பூஜை, கல்வியையும், தொழிலையும், ஒரு பெண் தெய்வமாக்கி அதற்குச் சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜை செய்தால் கல்விவரும், வித்தை வரும் என்றும் சொல்லி நம்மை நமது பார்ப்பனர்கள் ஏமாற்றி கல்வி கற்க சொந்த முயற்சி இல்லாமல் சாமியையே நம்பிக் கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு நாம் அந்த சாமி பூஜையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே அவர்கள் படித்துப் பெரிய படிப்பாளிகளாகிக் கொண்டு நம்மை படிப்பு வரமுடியா மக்குகள் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
முதலாவது சரஸ்வதி என்னும் சாமியின் சொந்த யோக்கியதையை கவனித்தால் அது பார்ப்பனர்கள் புராணக் கதை களின்படியே மிக்க ஆபாசமானதாகும். அதாவது சரஸ்வதி என்கிற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்தில் இருந்து உண்டாக்கப்பட்ட பிறகு அவளுடைய அழகைக் கண்டு அந்த பிரம்மாவா லேயே மோகிக்கப்பட்டு அவளைப் புணர அழைக் கையில், அவள் பிரம்மாவைத் தகப்பன் என்று கருதி, அதற்கு உடன்படாமல் பெண்மான் உரு எடுத்து ஓடவும், பிரம்மன் தானும் ஒரு ஆண் மான் உருவெடுத்து அவளைப் பின் தொடர்ந்து ஓடவும், சிவன் வேட உருவெடுத்து ஆண் மானைக் கொல்லவும், பிறகு சரஸ்வதி அழுது சிவபிரானால் மறுபடியும் உயிர்ப்பிக்கச் செய்து, பிரம்மாவுக்கு மனைவியாக சம்மதித்ததாக சரஸ்வதி உற்பவக்கதை சொல்லுகிறது.
அதாவது தன்னைப் பெற்றெடுத்த தன் தகப்பனையே மணந்து கொண்டவள் என்று ஆகிறது- மற்றொரு விதத்தில் பிரம்மாவுக்குப் பேத்தி என்று சொல்லப் படுகின்றது அதாவது, பிரம்மா ஒரு காலத்தில் ஊர்வசியின் மீது ஆசைபட்டபோது, வெளியான இந்திரி யத்தை ஒரு குடத்தில் விட்டுவைக்க அக்குடத் திலிருந்து அகத்தியன் வெளியாக அவ்வகத்தியன் சரஸ்வதியைப் பெற்றான் என்று சொல்லப்படுகின்றது. இதனால் பிரம்மாவுக்குச் சரஸ்வதி மகன் வயிற்று பேத்தி ஆகிறாள், எனவே சரஸ் வதியின் பிறப்பும் வளர்ப்பும் நடவடிக் கையும் கூடி பார்ப்பனப் புராணப்படி மொத்த ஆபாசமும் ஒழுக்க ஈனமுமான தாகும்.
நிற்க, இந்த யோக்கியதையுடைய அம்மாளை எதற்காக மக்கள் பூஜை செய்கிறார்கள் என்பது இதைவிட மிகவும் வேடிக்கையான விஷயமாகும். அதாவது சரஸ்வதி வித்தைக்கு அதிபதியான தெய்வமாதலால் வித்தையின் பயன் தொழிலென்றும், தொழிலுக்கு ஆதார மானது ஆயுதங்கள் என்றும் கருதிக் கொண்டு, சரஸ்வதி பூஜை என்றும், ஆயுத பூஜை என்றும் ஒரு நாளைக் குறித்துக் கொண்டு அந்த நாளை விடு முறையாக்கி புஸ்தகங்களையும் ஆயுதங் களையும் வைத்து பூஜை செய்கிறார்கள்.
இந்தப் பூஜையில் அரசன் தனது ஆயுதங்களையும், வியாபாரி தனது கணக்குப் புத்தகங்கள், தராசு,படிக்கல், அளவு மரக்கால்படி, உழக்கு, பெட்டி முதலியவைகளையும் தொழிலாளிகள் தங்கள் தொழில் ஆயுதங்களையும் இயந் திரச் சாலைக்காரர்கள் இயந்திரங்களை யும், மாணாக்கர்கள் புத்தகங்களையும், குழந்தைகள் பொம்மைகளையும், தாசிகள் தங்கள் ரவிக்கைகளையும், சீலைகளையும், நகைகளையும், வாத்தியக்காரர்கள் வாத் தியக்கருவிகளையும் மற்றும் இதுபோலவே ஒவ்வொருவரும் அவரவர்கள் லட்சியத்திற்கு ஆதாரமாக வைத்திருக்கும் சாமான்களை வைத்து பூஜை செய்கின்றார்கள்.
இதனால் அந்த தினத்தில் தொழில் நின்று அதனால் வரும் வரும் படிகளும் போய் பூஜை ஓய்வு முதலிய ஆடம்பரங்களுக்காக தங்கள் கையில் இருக்கும் பணத்திலும் ஒரு பாகத்தைச் செலவு செய்தும் போதாவிட்டால் கடன் வாங்கியும் செலவு செய்வதைவிட யாதொரு நன்மையும் ஏற்படுவதாக சொல் லுவதற்கே இல்லாமல் இருக்கின்றது. ஆயுதத்தை வைத்து பூஜை செய்து வந்த, வருகின்ற அரசர்கள் எல்லாம் இன்றைய தினம் நமது நாட்டில் ஆயுதத்தை வைத்து பூஜை செய்யாத வெள்ளைக்கார அரச னுடைய துப்பாக்கி முனையில் மண்டி போட்டு சலாம் செய்து கொண்டு இஸ்பேட் ராஜாக்களாக இருந்து வருகின்றார்களே ஒழிய ஒரு அரசனாவது சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை ஆகிய பூஜைகள் பலத்தால் தன் காலால் தான் தைரியமாய் நிற்பவர் களைக் காணோம்.
சரஸ்வதி பூஜை செய்யும் வியாபாரி களில் ஒரு வியாபாரியாவது சரஸ்வதிக் குப் பயந்து பொய்க்கணக்கு எழுதா மலோ, தப்பு நிறை நிறுக்காமலோ குறை அளவு அளக்காமலோ இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அதுபோலவே கைத்தொழிலாளிகளும் தங்கள் ஆயுதங் களிடத்தில் வெகு பக்தியாய் அவை களைக் கழுவி விபூதி, சந்தனம், குங்குமப் பொட்டு முதலியவை போட்டு விழுந்து கும்பிடுவார்களே தவிர ஒருவராவது நாணயமாய் நடந்து கொள்கின்றார்கள் என்றாவது அல்லது அவர்களுக்குத் தாராளமாய் தொழில் கிடைக்கின்றது என்றாவது சொல்லுவதற்கு இல்லாமலே இருக் கிறார்கள்.
அதுபோலவே புஸ்தகங் களையும் பென் சிலையும் கிழிந்த காகிதக் குப்பைகளையும் சந்தனப் பொட்டுப் போட்டு பூஜை செய்கின்றார்களே அல் லாமல் காலோ கையோ பட்டுவிட்டால் தொட்டுக் கண்ணில் ஒத்திக் கும்பிடு கின்றார்களே அல்லாமல் நமது நாட்டில் படித்த மக்கள் 100-க்கு 5 பேர்களுக்குள் ளாகவே இருந்து வருகின்றார்கள். இவ்வளவு ஆயுத பூஜை செய்தும், சரஸ்வதி பூஜை செய்தும் இவ்வளவு விரதங்கள் இருந்தும், நமது அரசர்கள் அடிமைகளாக இருக்கின்றார்கள். நமது வியாபாரிகள் நஷ்டமடைந்து கொண்டு வருகிறார்கள். நமது தொழிலாளர்கள் தொழிலில்லாமல் பிழைப்பைக் கருதி வேறு நாட்டிற்கு குடிபோகின்றார்கள். நமது மக்கள் நூற்றுக்கு அய்ந்து பேரே படித் திருக்கின்றார்கள். சரஸ்வதியின் ஜாதியைச் சேர்ந்த பெண்கள் ஆயிரத் திற்கு ஒன்பது பேரே படித்திருக்கிறார்கள்.
இதன் காரணம் என்ன?
நாம் செய்யும் பூஜைகளைச் சரஸ்வதி தெய்வம் அங்கீகரிக்க வில்லையா? அல்லது சரஸ்வதி தெய்வத்திற்கும் இந்த விஷயங்களுக்கும் ஒன்றும் சம்பந்த மில்லையா? அல்லது சரஸ்வதி என்கின்ற ஒரு தெய்வமே பொய்க்கற்பனையா? என்பவையாகிய இம்மூன்றில் ஒரு காரணமாகத்தான் இருக்கவேண்டும்.
என்னைப் பொறுத்தவரையில் இவைகள் சுத்த முட்டாள்தனமான கொள்கை என்பதே எனது அபிப்பிராயம்.
வெள்ளைக்கார தேசத்தில் சரஸ்வதி என்கின்ற பேச்சோ கல்வி தெய்வம் என் கின்ற எண்ணமோ சுத்தமாய்க் கிடையாது.
அன்றியும் நாம் காகிதத்தையும், ஒழுக்கத்தையும் சரஸ்வதியாய்க் கருதித் தொட்டு கண்ணில் ஒத்திக் கொண்டும், நமக்குக் கல்வி இல்லை. ஆனால் வெள்ளைக்காரன் மல உபாதைக்குப் போனால் சரஸ்வதியைக் கொண்டே மலம் துடைத்தும், அவர்களில் நூற்றுக்கு நூறு ஆண்களும் நூற்றுக்கு அறுபது பெண்களும் படித்திருக்கிறார்கள். உண்மை யிலேயே சரஸ்வதி என்ற ஒரு தெய்வ மிருக்குமானால் பூஜை செய்பவர்களை தற்குறிகளாகவும் தன்னைக் கொண்டு மலம் துடைப்பவர்களை அபார சக்தி வாய்ந்த அறிவாளிகளாகவும். கல்வி வான்களாகவும் செய்யுமா? என்பதை தயவு செய்து யோசித்துப் பாருங்கள்.
உண்மையிலேயே யுத்த ஆயுதம், கைத் தொழில் ஆயுதம், வியாபார ஆயுதம் ஆகி யவை உண்மையிலேயே சரஸ்வதி என்னும் தெய்வ அம்சமாயிருக்குமானால் அதை பூஜை செய்யும் இந்த நாடு அடிமைப்பட்டும் தொழிலற்றும் வியாபார மற்றும், கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கவும், சரஸ்வதியை கனவிலும் கருதாததும் சரஸ்வதி பூஜை செய்கின்றவர்களைப் பார்த்து முட்டாள்கள், அறிவிலிகள், காட்டுமிராண்டிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நாடு சுதந்திரத்துடனும், வியாபாரிகள், அரசாட்சியுடனும் தொழி லாளர் ஆதிக்கத்துடனும் இருக்க முடியுமா என்பதையும் யோசித்துப் பாருங்கள்! இந்த பூஜையின் மூலம் நமது முட்டாள்தனம் எவ்வளவு வெளியாகின் றது பாருங்கள்!
ராஜாக்கள் கொலுவிருப்பது, பொம்மைகள் கொலுவிருப்பது, சாமிகள் கொலுவிருப்பது. இதற்காக ஜனங்கள் பணம் செலவு செய்வது, நேரம் செலவு செய்வது, அறிவு செலவு செய்வது, பத்து லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு பொம்மைகள் சந்தனம், குங்குமம், கற்பூரம், சாம்பிராணி, கடலை பொரி, சுண்டல்வடை, மேளவாத்தியம், வாழைக் கம்பம், பார்ப்பனர்களுக்குத் தட்சணை, சமாராதனை, ஊர்விட்டு ஊர்போக ரயில் சார்ஜு ஆகிய இவை எவ்வளவு செலவாகின்றது என்பதை எண்ணிப்பாருங்கள். இவை எல்லாம் யார் வீட்டுப் பணம்? தேசத்தின் செல்வமல்லவா என்று தான் கேட்கின்றோம். ஒரு வருஷத்தில் இந்த ஒரு பூஜையில் இந்த நாட்டில் செலவாகும் பணமும் நேரமும் எத்தனை கோடி ரூபாய் பெறுமானது என்று கணக்குப் பார்த்தால் மற்ற பண்டிகை, உற்சவம், புண்ணிய தினம், அர்த்தமற்ற சடங்கு என்பவை களின் மூலம் செல வாகும் தொகை சுலபத்தில் விளங்கி விடும். இதை எந்த பொருளாதார, இந்திய தேசிய நிபுணர் களும் கணக்குப் பார்ப்பதே இல்லை.
புரட்டாசி சனிக்கிழமை
இனி அடுத்தாற்போல் வரும் புரட்டாசி சனிக்கிழமை உற்சவங்களும், திருப்பதி முதலிய நூற்றுக்கணக்கான சனிக் கிழமைப் பெருமாள்கள் உள்ள ஊர்களின் உற்சவங்களும், சனிக்கிழமை பிடிப்பதன் மூலம் அவரவர்கள் வீட்டில் ஏராளமாய் சமைத்துக்கொண்டு சோம்பேறிகளையும் அயோக்கியர்களையும் மெனக்கட்டுத் தேடிப் பிடித்து வந்து அவர்களுக்கு வயிறு நிறையவும் போட்டு மற்றும் மூட்டை கட்டிக் கொண்டும் போகக்கூடிய அளவு மேல்கொண்டும் போட்டு கஞ்சாவுக்கோ கள்ளுக்கோ சூதாடவோ கையில் பணமும் கொடுத்து, இவ்வளவும் போறாமல் அந்த நாளெல்லாம் பட்டினி கிடந்து அந்தச் சோம்பேறிகளின் காலிலும் விழுந்து மாலை 3 மணி 4 மணி சுமாருக்கு சாப்பிடும் பண்டிகையிலோ விரதத்திலோ கடுகளவு அறிவு இருக்கின்றதா என்று கேட்கின்றேன். புரட்டாசி சனிக்கிழமை வந்தால் எத்தனை பேர் தங்களுக்கும் பட்டை நாமம் போட்டுக் கொண்டு செம்புக்கும் நாமத்தை குழைத்து போட்டுக் கொண்டு, துளசியை அரளிப்பூவையும் அந்த செம்புக்கு சுத்திக் கொண்டு வெங் கிடாசலபதி கோவிந்தா என்றும் நாராயணா கோவிந்தா என்றும் கூப் பாடு போட்டு அரிசியோ காசோ வாங்கிக் கொண்டு போவதில் ஏதாவது பல னுண்டா? என்றுதான் கேட்கின்றேன்.
மற்றும் திருப்பதிக்குப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டு தலை மயிரும் தாடி மயிரும் வளர்த்து வெறும் மஞ்சள் நனைத்த துணிக்கட்டிக் கொள்ளுவதும் மேளம் வைத்துக் கொள்வதும் பெண்டு பிள்ளைகள் சுற்றத்தார்களை அழைத்துக் கொள்வதும் வருஷமெல்லாம் பணம் போட்டு மொத்தமாய் பணம் சேர்ப்பதும் அல்லது வேண்டுதலையின் மேல் இவ் வளவு பணம் என்று கடன் வாங்கியாவது எடுத்துக் கொள்வதும் அல்லது வியா பாரத்திலோ வேறு வரும் படியிலோ லாபத்தில் இத்தனை பங்கு என்று கணக்கு வைத்து சேர்த்து எடுத்துக் கொள்வதும் ஆன பணமூட்டை கை கட்டிக்கொண்டு கடைவாயிலும் நாக் கிலும் வெள்ளிக் கம்பியைக் குத்திக் கொண்டு போதாக்குறைக்குத் தெருவில் கூட்டமாய் கோவிந்தா கோவிந்தா- கோவிந்தா! என்று கூப்பாடு போட்டு வீட்டுக்கு வீடு, கடைகடைக்கு காசு பணம் வாங்கி ஒருபகுதியை ரயிலுக்குக் கொடுத்து திருப்பதி போவதும், அங்கு முழங்கால் முறிய மலையேறுவதும் ஆண்களும் பெண்களும் தலைமொட்டை அடித்துக் கொள்வதும் அந்தமலைச் சுனைத் தண்ணீரில் குளிப்பதும் அந்த பட்டை நாமம் போட்டுக் கொள்வதும் கொண்டுபோன பணத்தைக் கடாரத்தில் காணிக்கையாக கொட்டுவதும் ஆண் களும் பெண்களும் நெருக்கடியில் இடிபடு வதும் பிடிபடுவதும் வெந்ததும் வேகாதது மான சோற்றை தின்பதும் மற்றும் பல சோம்பேறிகளுக்கும் மேகவியாதிக்காரர் களுக்கும் வேக வைத்தோ விலைக்கு வாங்கியோ போடுவதும் விறகு கட்டை யிலும் வேர்களிலும் செய்த மரமணி மாலைகளை வாங்கி கழுத்தில் போட்டுக் கொள்வதும். மலைக் காய்ச்சலோடு மலையைவிட்டு இறங்கி வருவதும் வீட்டுக்கு வந்து மகேஸ்வரபூஜை பிராமண சமார்த்தனை செய்வதும் தவிர மற்றபடி இவைகளால் ஏதாவது செய்தவனுக்கோ, கூடப்போன மக் களுக்கோ நாட்டுக்கோ ஒழுக்கத்திற்கோ மதத் திற்கோ கடுகளவு நன்மை உண்டாகுகின்றதா என்று கேட்கின்றேன்.
திருப்பதிக்குப் போய் வந்த பிறகாவது யாராவது தங்கள் துர்க் குணங்களையோ கெட்ட செய்கை களையோ விட்டுவிட்டதாகவாவது அல்லது திருப்பதி யாத்திரையானது இம்மாதிரி குணங்களை விடும்படி செய்ததாகவாவது நம்மில் யாராவது பார்த்திருக்கின்றோமா? என்று கேட்பதுடன் இம்மாதிரி அறிவீனமான காரியத்திற்கு நமது நாட்டில் வருஷத் திற்கு எத்தனை கோடி ரூபாய் செலவா கின்றது என்பதை எந்தப் பொருளாதார இந்திய தேசிய நிபுணராவது கணக்கு போட்டார்களா என்று கேட்கின்றேன்.

- குடிஅரசு - சொற்பொழிவு - 20.10.1929

Sunday, October 7, 2012

மதமும் பண்டிகைகளும்


தலைவரவர்களே! சகோதரர்களே! இன்று மூன்று விஷயங்களைப் பற்றி பேச நான் தலைவரால் கட்டளை இடப்பட்டிருக் கின்றேன். 1. சீலையம்பட்டியில் 69 பேர்கள் மகம்மதியரானது. 2. சரஸ்வதி பூஜை. 3. நெல்லூர் மகாநாடு.
முதலாவது விஷயமாகிய ஆதிதிராவிடர்கள் மதம் மாறி மகம்மதியரான விஷ யத்தைப் பற்றி சில வார்த்தைகள் சொல்ல விரும்புகின்றேன்.
முதலில் மத சம்பந்தமான என்னுடைய அபிப்பிராயம் என்னவென்றால், எந்த மதமானாலும் அதன் கொள்கைகள் எவ் வளவு மாறுபட்ட அபிப்பிராயமுடையவை யானாலும் அந்த மதமும் கொள்கைகளும் மனிதனுடைய இவ்வுலக வாழ்க்கைக்கு அவனுடைய பிரத்தியட்ச அனுபவத் திற்காக வகுக்கப்பட்ட கொள்கைகளு டையன என்றால் அதைப் பற்றியோசிக்க நான் எப்போதும் தயாராயிருக்கின்றேன்.
அப்படிக்கின்றி மதமும் அதன் கொள்கைகளும் மேல் லோகத்திலோ அல்லது கீழ் லோகத்திலோ அல்லது செத்த பிறகு சூட்சும சரீரத்துடனேயோ அனுப விக்கும் அனுபவத்திற்காகவே ஏற்படுத்தப் பட்டது என்றால் அது எப்படிப்பட்ட மதமானாலும் யார் செய்ததானாலும் அதற்கு என்ன ஆதாரம் சொல்லுவதா னாலும் நான் அதைக் கண நேரம் கூடத் திரும்பிப் பார்க்கமாட்டேன்.
இது விஷயத் தில் என்னைப் பற்றி யார் எப்படி நினைத்துக் கொண்டாலும் எனக்கு அதைப் பற்றி கவலையில்லை- ஏனெனில் இந்தப்படி நினைப்பதற்கு எனக்குப் பூரண சுதந்திரம் இருக்கின்றது என்று நினைக்கின்றேன். அதோடு எந்த லோகத்திலானாலும் இந்த உலக வாழ்க்கை அனுபவத்திற்கு விபரீத மான பலன் இருக்க முடியுமாவென்றுங் கருதுகின்றேன்.
இதை அனுசரித்தே தான் இவ்வாரத்தில் சீலையம்பட்டியில் 69 பேர்கள் மகமதியரான விஷயத்தைப் பற்றி எனது மகிழ்ச்சியைத் தெரிவிக்க சில வார்த்தைகள் பேசப்போகின்றேன், சகோ தரர்களே! 69 ஆதிதிராவிடர்கள் மகம் மதியர்களாகிவிட்டதால் அவர்களுடைய பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டு விட்டதென்றோ அவர்களுக்கு மோட்ச லோகம் கூப்பிடும் தூரத்திற்கு வந்து விட்டதென்றோ கடவுளோடு கலந்து விட்டார்கள் என்றோ கருதி நான் மகிழ்ச்சி அடையவில்லை.
இவைகளை நான் ஏற்றுக் கொள்ளுவதும் இல்லை. மற்றவர்கள் நம்பும்படி சொல்வதும் இல்லை. அன்றியும் ஒரு மனிதன் மதம் மாறுவதால் அவனுடைய செய்கைக்கும் எண்ணத் திற்கும் தகுந்த பலன் அடைவதில் வித்தியாசமுண்டென்பதை நான் ஒப்புக் கொள்வதில்லை. எந்த மதக்காரனாயிருந் தாலும் தனது செய்கைக்குத் தகுந்த பலன் ஒன்றாகவேதான் இருக்கும்.
இந்துவா யிருந்து பசுவைக் கொன்றால் பாவம் என்றும் மகம்மதியனாயிருந்து பசுவைக் கொன்று தின்றால் பாவமில்லை என்றும் மதத்தின் காரணமாகக் கருதுவது மூடநம்பிக்கையே ஒழிய இரண்டுவித அபிப்பிராயத் திலும் அர்த்தமே இல்லை.
உலகத்தில் உள்ள சகல மதங்களும் மூடநம்பிக்கையின் மீதே கட்டப்பட்டி ருகின்றது. ஆகையால் பாவபுண்ணியத் தையும் மோட்ச நரகத்தையும் ஆதாரமாய் வைத்தும் நான் மகிழ்ச்சி யடையவில்லை மற்றென்னவென்று கேட்பீர்களேயானால் இந்து மதம் என்பதிலிருந்து மதம் மாறின தாக சொல்லப்படும் 69 - ஆதிதிராவி டர்களும் பிறவியின் காரணமாக அவர் களுக்குள்ள இழிவிலிருந்து விடுதலை அடைந்ததோடு பாமரத் தன்மையும் காட்டுமிராண்டித்தனமுமான மிருகக் பிராயத்திலிருந்தும் அறியாமையிலிருந் தும் சிறிது விடுதலை அடைந்தவர் களானார்கள் என்பதற்காகவே மகிழ்ச்சியடைகின்றேன்.
அதாவது, மேற்கண்ட 69 பேர்களுக் கும் தீண்டாமை என்பது போய்விட்டது. இனி ஒருவன் அவர்களைப் பறையன், சக்கிலி, சண்டாளன் என்று இழிவாய்க் கூறமுடியாது. அவர்களும் மற்றவர்களை சாமி சாமி புத்தி என்று கூப்பிட்டுக் கொண்டு தூர எட்டி நிற்க வேண்டியதில்லை. மற்ற மனிதர்களின் காலில் விழுந்து கும்பிட வேண்டியதில்லை. ஊரை விட்டு வெளியில் குடி இருக்க வேண்டியதில்லை. குளிக்கத் தண்ணீரில்லாமல் குடிக்க தண்ணீரில்லாமல் திண்டாட வேண்டியதில்லை. வண்ணான், நாவிதன் இல்லாமல் அழுக்குத் துணியுடனும் கரடி போல் மயிர் வளர்த்துக் கொண்டும் பார்ப்பவர்களுக்கு அசிங்கமாகத் தோன்றும்படி வாழ வேண்டியதில்லை.
இனி எந்த பொதுத் தெருவிலும் நடக்கலாம்; எந்த வேலைக்கும் போகலாம்; யாருடனும் போட்டி போடலாம்; அரசியலில் சமபங்கு பெறலாம்; மதசம்பந்தமாகவும் இனி அவர்கள் தங்கள் கோயிலுக்குள் போகத் தாராள உரிமை உண்டு. வேதம் படிக்க உரிமையுண்டு. இவ்வளவையும் விட, இனி அவர்கள் கல்லையும், செம்பையும், கூடையையும், முறத்தையும், விளக்கு மாற்றையும் கடவுள் என்று வணங்க வேண்டியதில்லை.
மற்றும், அவர்கள் பாடுபட்டுச் சம்பாதித்த சிறிது பணத்தையும் கடவுளுக்கென்றும், கல்லுக் கென்றும் கருமாதிக் கென்றும் செலவு செய்யவேண்டியதில்லை. எனவே, இவர்கள் பொருளா தாரக் கஷ்டத்திலும் அறிவு வளர்ச்சித் தடையிலும் சமுக இழிவிலும் சுயமரியாதைக் குறை விலும், அரசியல் பங்கு குறைவி லிருந்து ஒருவாறு விடுதலை அடைந்துவிட்டார்கள் என்பது போன்றவைகளை நினைக்கும் போது மகிழ்ச்சியடையாமலி ருக்க முடியவில்லை.
ஏனெனில், தீண்டாமை நெருங்காமை, பார்க்காமை, பேசாமை முதலா கிய சகிக்க முடியாத கொடுமை கள் முதலாவதாக மதத்தின் பேரால், வேத சாஸ்திரங்களின் பேரால், கடவுள்களின் பேரால் உள்ளவை எல்லாம் அடியோடு நீங்க வேண்டும் என்கின்ற தீவிர ஆசையே இம்மாதிரி நினைக்கச் செய்கின்றது. இம்மாதிரி சுமார் ஆயிரம் வருஷங்களாக நினைத்துக் காரியத்தில் நடந்த பெரிய வர்கள் தான் இன்றைய தினம் இந்தி யாவில் 8 கோடி மகமதியர்களாகவும் ஒரு கோடி கிறிஸ்தவர் களாகவும் இருக்கின் றார்கள்.
இல்லாவிட்டால் இந்தியாவில் இவ்வளவு மகம்மதியர்களும் கிறிஸ்தவர் களும் எங்கிருந்து வந்தார்கள்? இந்த எண்ணிக்கையை பார்த்து பயந்தே நானும் திருவாளர்கள், தங்கபெருமாள், ஈஸ்வரன், மாரியப்பன் முதலியவர்களும் கோயம் புத்தூர் ஜெயிலிலிருக்கும் போதே ஜெயி லில் இருந்து விடுதலையானதும் தீண் டாமையை அடியோடு ஒழித்து விடுவ துடன் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்குப் போனவர்களை எல்லாம் திரும்பவும் இந்துக்களாக்கும் முயற்சியில் வேலை செய்வது என்று முடிவுகட்டிக் கொண்டு வந்தோம்.
நாங்கள் வெளிவந்ததும் திரு.காந்தி கைது செய்யப்பட்டு சிறைசென்று விட்ட தால் இந்த சமயத்தில் ஒத்துழையாமை விட்டுப் போகக் கூடாது என்று சில பார்ப்பனத் தலைவர்கள் கேட்டுக் கொண்டதால் மறுபடியும் காங்கிரஸ் வேலையை செய்தோம். பிறகு குருகுல நடவடிக் கையும் அது சம்பந்தமாக பார்ப்பனத் தலைவர்கள் மனப்பான்மையும் அவர்களது உள் எண்ணத்தையும் தெரிந்த பிறகு இந்து மதமே அடியோடு அழிக்கப்பட வேண்டும் என்கின்ற முடிவுக்கு வந்துவிட நேர்ந்தது.
அதன் பேரில் இந்து மதத்தை விட்டாலும் பிறகு தங்களுக்கு ஏதாவது ஒரு மதம் இருந்துதான் தீர வேண்டு மென்று கருதும் மக்களுக்குக் கிறிஸ்துவ மதத்தை சிபாரிசு செய்யலாமா? மகம்மதிய மதத்தைச் சிபாரிசு செய்யலாமா? என்று கருதியோசித்து பார்த்தேன்.
கடைசியாக கிறிஸ்தவ மதமும் நமது நாட்டில் நான் பார்த்தவரை அதுவும் மற்றொரு பார்ப்பனிய மதமாகவே காணப்பட்டது கிறிஸ்துவ மதப் பிரச்சாரத்தின் கருத்தெல்லாம் அரசியல் விஷயத்தை அடிப்படையாகவும், அந்தரங்க லட்சியமாகவும் கொண்டு செய்யப்படுகின்றதே ஒழிய மக்கள் சமத்துவத்தையோ ஒற்றுமையையோ கொண்டதாகத் தெரியவில்லை என்கின்ற முடிவிற்கு வரவேண்டியதாயிற்று.
எப்படியென்றால் இன்றைய தினமும் கிறிஸ்துவ மதத்தில், பறக் கிறிஸ்தவன், சக்கிலிக் கிறிஸ்தவன், வேளாளக் கிறிஸ்தவன், உடையார் கிறிஸ்தவன், நாயுடு கிறிஸ்தவன், நாடார் கிறிஸ்தவன், பார்ப்பனக் கிறிஸ்தவன் என்கின்ற பாகுபாடுகளும் குடியிருப்பு வசதி வித்தியாசங்களும் சர்ச்சு முதலிய பிரார்த்தனை இடங்கள் வித்தி யாசம் காணப்படுவதைப் பார்ப்பதால் நன்றாய் தெரியவரும். ஆகையால் மகம்மதிய மதத்தைத் தழுவுவதினால்தான் தீண்டாதவர்களுக்கு இதுசமயம் சீக்கிரத்தில் உடனேயே சமுக சமத் துவத்தை அளிக்க முடியும் என்று கருது கிறேன். இந்த நிலை நமக்கு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக நான் எவ்வளவோ பாடுபட்டு பார்த்தேன்.
ஈரோடு தேவஸ்தானத்தில் சகல இந்துக்களுக்கும் கோயில் நுழைவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதின் பேரில் சில மேல்ஜாதிக்காரர்கள் என்பவர்களும், வெள்ளைக்கார அதிகாரிகளும் பார்ப்பன அதிகாரிகளும், நடந்து கொண்ட மாதிரியானது எனக்குத் தீண்டப்படாத மக்களுக்குச் சமத்துவம் கொடுப்பதற்கு அவசரமாய் இதைவிட வேறு வழியில்லை என்கின்ற முடிவு ஏற்படுத்தச் செய்து விட்டது. நமது நாட்டில் ஜாதி வித்தியாசம் ஒழியவும் சமத்துவம் ஏற்படவும் வெள்ளைக் காரர்களும் சிறப்பாக பாதிரிமார்களும் சுலபத்தில் சம்மதிக்கமாட்டார்கள்.
ஆகையால் தீண்டாமை முதலிய கொடுமை ஒழிய வேண்டும் என்கின்ற கருத்து உள்ளவர்களுக்கும் ஒற்றுமையை எதிர்பார்க்கும் கருத்து உள்ளவர்களுக்கும் மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சியை ஊட்ட வேண்டும் என்னும் கருத்து உள்ளவர்களுக்கும் நமது நாட்டில் இப்போது உள்ள முக்கிய வேலை முதலில் தீண்டப்படாதவர்கள் மகமதியாராவதை ஆட்சேபியாதிருப்பதேயாகும் என்பது எனது தாழ்மையானதும் கண்ணியமானதுமான அபிப்பிராயம். நிற்க, சிலர் மகமதிய மதம் முரட்டுச் சுபாவத்தை உண்டாக் குகின்றது என்று எனக்கு எழுதியிருக் கிறார்கள். அது வாஸ்தவமானால் தீண்டப்படாதவர்களுக்கு அவர்களது தீண்டாமை ஒழிய மகமதிய மதத்தைச் சிபாரிசு செய்வதற்கு அதுவே ஒரு நல்ல காரணம் என்று கருதுகிறேன்.
இப்பொழுது நமது தீண்டப்படாதார்கள் தங்கள் தீண்டாமை நிலை நிற்கும்படி தாங்களாகவே அளவுக்கு மீறி ஒடுங் குகிறார்கள். காலில் விழுந்து கும்பிடு கிறார்கள். அடிக்க அடிக்க ஓடுகிறார்கள். கீழ்ப் படியவே  தங்களைக் கடவுள் பிறப் பித்திருப்பதாய் கருதுகிறார்கள்; எவ்வளவு திட்டினாலும் ரோஷப் படுவதே இல்லை; கோபிப்பதேயில்லை; முரட்டு சுபாவம் இல்லாத இந்துமதம் இவர்களை இப்படிச் செய்துவிட்டதால் தங்களைப் பிறர் இழிவு படுத்துவது தங்களுக்குத் தெரிவதில்லை.
ஆதலால், மகம்மதிய மதம் முரட்டு சுபா வத்தை உண்டாக்குவது உண்மையானால் அதில் சேர்ந்த இவர்கள் இனிமேலாவது இவ்வளவு தாழ்மையாக நடந்துகொள்ள மாட்டார்கள் அல்லவா? மற்றவர்களும் அவர்களது முரட்டு சுபாவத்தைக் கண்டு பயந்து மரியாதையாய் நடந்து கொள்ள இடமேற்படும் அல்லவா? அன்றியும், மகமதியர்களைப் பற்றி இந்து மதத்தின் சார்பாய் இந்துக்கள் நினைத்துக் கொண்டிருந்ததென்னவென்றால், துருக்கியர் மிலேச்சரென்று மிக்க தாழ்ந்தவர்கள் என்றும் கருதிக் கொண்டிருந் தார்கள்.
அதற்கு ஆதாரமாய் இப்போதும் இந்து சாஸ்திரமும் நிகண்டும் இருக்கிறது. ஆனால், தீண்டப்படாதவர்களைப் போலவே மகம்மதியர்களும் ஒடுங்கி இருந்திருப்பார்களானால் இந்தியாவில் இந்து தீண் டப்படாதார் 6 கோடியும், மகம் மதியர் தீண்டப்படாதார் 8 கோடி யும், என்று சொல்ல வேண்டிய தாய் இருந்திருக்கும். இப்போது அந்த நிலை மாறியிருப்பதற்கு மகிம்மதியர்களின் முரட்டு சுபாவம் என்று சொல்லக் கூடாதா னாலும், ஒடுங்க முடியாத தாழ்மையையும் இழிவையும் ஒப்புக் கொள்ள இஷ்டமில்லாத தைரிய சுபாவம் என்றாவது சொல்லியாக வேண்டும்.
அந்த சுபாவம் இப்போதுள்ள தீண்டப்படாதவர்கள் என்பவர்களுக்கு வந்துவிட்டால் கூடப் போது மானது என்றும், மதம் மாற வேண்டிய அவசிய மில்லை என் றும் சொல்லலாம். ஆனால் அவர்கள் இந்துக்களாக இருக் கும் வரை சுலபத்தில் அவர் களுக்கு அந்தச் சுபாவம் வராது என்பதோடு மேல் வகுப்பார்கள் என்பவர்கள் சுலபத்தில் வர விடமாட்டார்கள் என்றே சொல்லுவேன்.
ஆகையால் இந்து சமுகத்தில் உண்மையான சமத்துவமும் ஒற்று மையும் ஏற்படும் வரை தீண்டப் படாதவர்கள் கும்பல் கும்பலாய் மகம்மதியர் ஆவதை தவிர வேறு மார்க்கமில்லையாதலால் நாம் அதை ஆட்சேபிக்க முடியாதவர் களாய் இருக்கிறோம் தவிரவும், மதத்தினிடத் திலோ, இந்து சமுகத்தினிடத்திலோ கவலையுள்ளவர்களுக்கு இதனால் ஏதாவது சங்கடம் இருப்பதாயிருந்தால் அவர்கள் தாராளமாய் வெளிக்கிளம்பி வந்து தீண்டப்படாத மக்களுக்கிருக்கும் கொடு மையையும் இழிவையும் நீக்க முன் வரட்டும்: அவர்களோடும் எப்போதும் ஒத்துழைக்கத் தயாராயிருக்கின்றேன். மற்றபடி வீண் சோம்பேறி ஞானம் பேசிக் கொண்டிருப்பதனால், இனி யாதொரு நன்மையும் அடைய முடியாது.
அந்த காலம் மலையேறிவிட்டது. ஆதலால் உண்மை நாடுவோர் சங்கத்தின் இன்றைய கூட்ட மானது சீலையம்பட்டியில் இந்துக்களில் உயர்ந்த வகுப்பார் என்பவர்களின் கொடுமையைச் சகிக்க மாட்டாமல், மகம்மதிய மதத்தை தழுவினதின் மூலம் தங்கள் இழிவிலிருந்து விலகிய 69 ஆதி திராவிடர்களை மனமாரப் பாராட்டுகின்றது என்கின்ற தீர்மா னத்தை நான் பிரேரேபிக்கின்றேன்
மத்தியில் ஒருவர் மகம்மதிய மதத்தில் உள்ள கோஷா முறையைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன என்று ஒருசீட்டு எழுதி அனுப்பினார்கள். அதற்கு திரு.ஈ.வெ.ராமசாமி தான் பதில் அளிப்பதாக முன் வந்து பேசியதாவது:- கோஷா முறையை தான் ஒப்புக் கொள்ளுவதில்லை. சில படித்த மகம்மதிய கனவான்கள் கோஷா முறை குரானில் இல்லை என்று சொன்னார்கள் என்றும், தான் இங்கு குரானைப் பற்றி ஒரு வார்த்தையும் பேசவரவில்லை என்றும் இந்த நாட்டில் கோஷா இல்லாத மகம்மதிய பெண்கள் அநேகர் இருக்கிறார்கள் என்றும், மலையாளத்தில் 100-க்கு 75 மகம்மதிய பெண்களுக்குக் கோஷா இல்லை என்றும், தஞ்சை, திருச்சி, திருநெல்வேலி,
ராமநாதபுரம் இந்த பக்கங்களில் காடுகளில் வேலை செய்வதைப் பார்த்ததாகவும் எனக்குத் தெரிந்தவரை கோஷா ஒரு அந்தஸ்தாக கருதப்படுகின்றதே தவிர முழுவதும் மதக் கட்டளையாகக் கருதுவதாகச் சொல்ல முடியாது என்றும், இப்பொழுது அந்த மதத்தில் சேர்ந்த பெண்கள் கோஷாவாயில்லாவிட்டால் தள்ளிவிட மாட்டார்கள் என்றும், விதவா விவாகம், கல்யாணரத்து, பெண்கள் படிப்பு, சொத் துரிமை ஆகியவை பெண்களுக்கு அந்த மதத்தில் இருப்பதால் கோஷா ஒரு சமயம் இருந்தாலும் அந்த கஷ்டத்தைவிட பல பங்கு மேல்பட்ட அதிக லாபமிருக் கின்றது. அன்றியும், துருக்கியைப் போலும் ஆப்கானிஸ் தானத்தைப் போலும் இங்கும் சமீபத்தில் சீர்திருத்தம் ஏற்படலாம் என்கின்ற நம்பிக்கை இருக்கின்றது என்று சொன்னார்.
- குடிஅரசு - சொற்பொழிவு - 20.10.1929