Sunday, July 28, 2013

கடவுளும் மதமும்

உலகில் மக்களிடையேயுள்ள அறியாமைகளில் எல்லாம் தலைசிறந்த அறியாமை கடவுளைப் பற்றிக் கொண்டிருக்கும் கருத்துகளேயாகும்.
உலகில் கடவுள் பெயரால் உள்ள மதங்களில் குறிப்பிடத்தக்க பெரிய மதங்கள் மூன்று என்று சொல் லலாம். அவை பெரிதும் உண்மைக்கு மாறுபட்டவை யேயாகும்.
அவை முறையே, கிறிஸ்தவமதம், இஸ்லாமிய மதம், இந்து மதம் - என சொல்லப்படுபவைகளாகும். இவைகளில் முதல் இரண்டு மதங்களும் சரித்திர சம்பந்தமான ஆதாரங் களைக் கொண்ட மதங்களாகும்.
மூன்றாவது மதமான இந்து மதம் என்பது காலப் போக்கில் கற்பனைக் கருத்துகளால் பெருக்கி சமயத்துக்கு ஏற்றபடி மக்களுக்குள் புகுத்தி, மக்களை ஏய்க்கும் ஒரு கதம்பக்கருத்து மதமாகும். இம்மதக் கோர்வைக்கு இந்துமதம் என்கின்ற பெயர் முறையே முன் இரண்டுமத காலத்திற்குப் பிற்பட்ட காலத்தில் ஏற்பட்ட பெயராகும்.
இது வேத மதமாக இருந்து ஆரிய மதம் என்றாகி, பிராமண மதம் என்று கூறப்பட்டு வந்து, கடைசியில் இந்துமதம் என்று சொல்லப்படுவதாகும்.
உலகில் கிறிஸ்தவமதம்தான் மிகப்பெரிய எண் ணிக்கை கொண்ட மக்களைத் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கும் மதம் ஆகும்.
அடுத்தது இஸ்லாம் மதம் என்பதாகும். இது கிறிஸ்தவ மத மக்கள் அளவில் சற்றேறக்குறைய மூன்றில் ஒரு பங்குக்குக் குறையாத மக்களைத் தன்னுள் அடக்கிக் கொண்டிருப்ப தாகும்.
மூன்றாவதான இந்து மதம் என்பது இஸ்லாம் மதத்தைவிட மிகச் சிறிய கூட்டத்தினரை, அதாவது இஸ்லாம் மத மக்களில் சற்றேறக்குறைய நான் கிலொரு பங்கு மக்களைக் கொண்டதாக இருக்க லாம்.
இவை தவிர `பவுத்த' மதம் என்ற ஒரு மதம் இருக்கிறது. இம்மதத்திற்குக் கடவுள் கிடையாது என்றாலும், கடவுள் நம்பிக்கை மதத்துக்கு உண்டான சடங்குகள் பெரிதும் உண்டு என்பதோடு கிறிஸ்தவ மதத்திற்கு அடுத்தபடியாக பெரிய எண்ணிக்கை கொண்ட மக்களைத் தனக்குள் அடக்கிக் கொண்டு இருக்கிறது.
சீனா, ஜப்பான், சயாம், பர்மா, சிலோன் முதலிய நாடுகளுடன் மற்றும் சில நாடுகளையும் தன்னுள் அடக்கிக் கொண்டு இருக்கும் மதமாகும்.
புத்த மதம் என்று சொல்லப்படுவதற்கு மற்றொரு பெயர் சொல்ல வேண்டுமானால், `அறிவு மதம்' என்று சொல்லுவது மிகப் பொருத்தமாகும்.
புத்தி என்ற வடமொழிப் பெயரைக் கொண்ட புத்தமதம் என்பதைத் தமிழில் கூற வேண்டுமானால், அறிவுமதம் என்றுதான் கூறலாம்.
இதற்குப் புத்தமதம், அறிவுமதம் என்று கூறுவ தற்குக் காரணம் என்னவென்றால், முதலில் கூறப்பட்ட மும்மதங்களுக்கும் கடவுள் என்பதாக ஒன்று உண்டு! ஆனால், புத்தமதம், அறிவு மதம் என்பதற்குக் கடவுள் என்பதாக ஒன்று கிடையாது. ஏனென்றால், அறிவுக்கு ஏற்ற கொள்கை என்றால் அதில் கடவுளுக்கிடமில்லை. ஆதலால் புத்தமதம், அறிவு மதம் என்று சொல்ல நேர்ந்தது. அறிவுப்படி கூறும்போது புத்தமதத்தை ஒரு மதம் என்று உண்மையான புத்தர்கள், அறிவாளிகள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.
மதம் என்றால் கடவுள் இருந்தாக வேண்டும்.
கடவுளை நம்ப வேண்டும்.
மற்றும் அறிவுக்கடங்காத சில விஷயங்களைக் கருத்துகளை நம்பியாக வேண்டும்.
ஆதலால் அறிவுக் கருத்துகளை, புத்திக் கொள்கைகளை மதம் என்று சொல்லுவதில்லை. கருத்து, கொள்கை, கோட்பாடு என்று பொதுவாக அறிஞர்கள் சொல்லுவார்கள்.
முற்கூறிய மும் மதங்களுக்கும் கடவுள் உண்டு என்றாலும் இவைகளில் ஒரு கடவுள் மதமும் உண்டு; பல கடவுள் மதமும் உண்டு. இம் மூன்று மதக் காரர்களும் கடவுளை அதாவது ஒரு கடவுளை பல கடவுளைக் கொண்டிருந்தாலும் கடவுளையா கட்டும் மற்றும் தேவர்களையாகட்டும் ஒன்று என்றும், பல என்றும் கொள்கையாகக் கொண்டிருந்தாலும், இவர்கள் எல்லோரும் கடவுளை ஒரே தன்மையாகத்தான் கருதுகின்றார்கள்.
எப்படி என்றால் கடவுள் நம்பிக்கைக்காரர்கள் எல் லோரும் கடவுளை மனிதனைப் போலவேதான் கருது கிறார்கள். அதாவது இலக்கணத்தில் அஃறிணை, உயர்திணை எனப்படுகின்ற இரண்டு திணைகளில் ஒன்றான உயர்திணைப் பொருளாக, அதுவும் மனி தனைப் போல் மனிதனுக்குண்டான எல்லாக் குணங் களையும் பொருத்தி, மனிதனாகவே மனிதத் தன்மையுடைய வனாகவே மனிதனைவிட எண்ணத்தில் மனித எண்ணமுடையவனாகவே இருந்தாலும் செய்கையில் சிறிது சக்தி அதிகம் உடையவனாகக் கற்பித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
எப்படி என்றால் மனிதன் தனது எண்ணத்தை நிறைவேற்ற செய்கையில் செய்தாக வேண்டும். ஆனால், மனிதன் கற்பித்துக் கொண்ட கடவுள் மனிதனைப் போன்ற எண்ணங்களை உடையவனாகவே இருந் தாலும் அந்த எண்ணங்களை நிறைவேற்ற கரியத்தில் செய்யாது `நினைத்த மாத்திரத்தில் ஈடேறக் கூடிய' மாதிரி நினைப் பிலேயே செய்து விடுகிறான்.
இதுதான் மனிதனுக்கும், மனிதன் கற்பித்துக் கொண்ட கடவுளுக்கும் உள்ள பேதமே தவிர, மற்றபடி தத்துவத்தில் ஒரு பேதமும் இல்லை.
இரண்டு பேரும் மனிதர்களேதான்; இரண்டு பேரும் மனித சுபாவம் உடையவர்களேதான். ஒன்றுக்கொன்று உயர்வுகூற வேண்டுமானால், செய்கையில் சக்தி அதிகம் என்பதைத் தவிர எண்ணத்தில் உயர்வான எண்ணம் என்பதாக என்றோ அல்லது தன்மையில் உயர்வான தன்மை என்பதாக என்றோ இருப்பதாக எதுவும் இல்லை. எதையும் நாம் காண - அனுபவிக்க தக்கதாகக் கற்பிக்கவில்லை.
கிறிஸ்து கற்பித்துக் கொண்ட கடவுளுக்கு ஒரு குமாரன் உண்டு.
முகமது நபி கற்பித்துக் கொண்ட கடவுளுக்கு ஒரு தூதன் உண்டு.
அதுபோலவே மனிதனுக்கும் குமாரன் உண்டு; தூதன் உண்டு.
கடவுள் ``இவைகளை எண்ணத்தில் உண்டாக்கிக் கொண்டான்'' அதுவும் ஒரே ஒரு தடவைதான். மனிதன் இவைகளைச் செய்கையில் தினமும் உண்டாக்கிக் கொள்கிறான்.
இப்படியே தான் ஒவ்வொரு காரியத்தையும்.
உதாரணமாக, கடவுள் நன்மை செய்தவனுக்கு நன்மை செய்கிறான்; தீமை செய்தவனுக்குத் தீமை செய்கிறான்.
மனிதனும் அப்படியே! தனக்கு நன்மை செய்தவர் களுக்கு நலம் செய்கிறான்; தீமை செய்தவனுக்குத் தீமை செய்கிறான்.
அவன் - கடவுள் - நினைத்த உடன் காரியம் ஆகும்படி செய்கிறான். மனிதன் அதற்காகச்  செயல் செய்தவுடன் காரியம் ஆகும்படி செய்கிறான்.
கடவுள் எவ்வளவு தவறு செய்த மனிதனையும் தன்னைப் பிரார்த்தித்து, தோத்தரித்து மன்னிப்பு கேட்டுக் கொண்டவனை மன்னிக்கிறான்.
கடவுளும் சிலரை மன்னிக்காமல் தண்டிக்கிறான்.
மனிதனும் அதுபோலவே மன்னிக்காமல் சிலரைத் தண்டிக்கிறான்.
கடவுளும் பழிவாங்குகிறான். மனிதனும் பழிவாங்குகிறான்.
இப்படியே மனிதனிடத்தில் உள்ள எல்லாக் குணங்களும் கடவுளிடத்திலும் உண்டு; கடவுளிடத்தில் உள்ள எல்லாக் காரியமும் மனிதனிடத்தில் உண்டு!
மனிதனுக்கும் கிரிமினல் ஆக்ட் உண்டு; கடவுளுக்கும் கிரிமினல் ஆக்ட் உண்டு!
மனிதனுக்கும் பிற மனிதனைத் தண்டிக்க ஜெயில் உண்டு; கடவுளுக்கும் தண்டிக்க நரகம் உண்டு!
மனிதனும் தண்டனை கொடுக்கிறான்; கடவுளும் தண்டனை கொடுக்கிறான்!
மனிதனும் மனிதனை - ஜீவனை ஏராளமாகக் கொல்லுகிறான். கடவுளும் ஏராளமான மனிதர்களை - ஜீவன்களைக் கொல்லுகிறான்! அதாவது சாகடிக் கிறான்!
மனிதனும் மக்கள் பட்டினிகிடப்பதைப் பார்த்துக் கொண்டு இருக்கிறான்; கடவுளும் ஏராளமான மக்கள் ஜீவன்கள் பட்டினி கிடப்பதைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான்.
மற்றும் பல கடவுள்களையும் பல உருவக் கடவுள்களையும் கற்பித்துக் கொண்டவனும் மனிதனே. மனிதத் தன்மையையே தான் கடவுளாக ஆக்கிக் கொண்டான் என்றாலும், இவன் (பல கடவுள்காரன்) அயோக்கியத்தனத்தையும் இழிகுணத் தன்மையும் கொண்ட மனிதனைத்தான் கடவுளாகக் கற்பித்துக் கொண்டான். ஏனென்றால், பல கடவுள்களை, பல உருவக் கடவுள்களைக் கற்பித்துக் கொண்ட மனிதன் காட்டு மிராண்டியாய், மூர்க்கனாய், மடையனாய், ஒழுக்கம், வரைமுறை என்பவை ஏற்படாதவனாய் இருந்த காலத்தில் கற்பித்துக் கொண்டதால், அன்றைய நிலைக்கு ஏற்ற, பொருந்திய, விளங்கிய தன்மைகளையும் கொண்டே கற்பித்துக் கொள்ள வேண்டியவனானான்.
உதாரணமாக பார்ப்பான் துவக்கத்தில் கடவுள், கடவுள் தன்மை என்பதாக எதையும் கற்பித்துக் கொள்ளவில்லை. ஏன் என்றால் அந்தக் காலத்தில் அவன் மலைவாசியாக இருந்தான். ஆனதால் அவன் `ஆகாயத்தில் மறைவாக சஞ்சரித்துக் கொண்டு இருக்கிற'தாக பல தேவர்களைக் கற்பித்துக் கொண்டான்! இவர்களையும் மிக்க கீழ்த் தரமான மனிதத் தன்மைகொண்டவர்களாகவே கற்பித்துக் கொண்டான்.
இந்தக் கற்பனைத் தேவர்களும்கூட அய்ரோப்பிய காட்டுமிராண்டி மக்களால் பல காரியங்களுக்கு, பல குண முடையவர்களாகக் கற்பித்து, பாவித்துக் கொண்ட தேவர் களையே அவர்களது பெயர்களை மாற்றி அமைத்துக் கொண்டார்கள். சைவர்களால் ருத்திரன் என்றும், துர்க்கை என்றும் போற்றப்படும் தேவர்கள் அய்ரோப்பிய காட்டுமிராண்டிகளால் ``தகப்பன் கடவுள்'' என்ற பெயரால் ஏற்பாடு செய்து கொண்ட தேவர்களாவார்கள். அதையேதான் சைவனும் இன்று `அம்மை கடவுள்' `அப்பன் கடவுள்' என்று சொல்கிறார்கள்.
அந்தக் கடவுளுக்குக் காட்டாளர்கள் போலவே ஆயுதங்கள், மழு, சூலாயுதம், மாட்டு வாகனமும், பெண் கடவுளுக்கு அரிவாள் சூலாயுதம், சிங்க வாகனமும், கோரமான உருவமும் கொண்ட பெண்களாகக் கற்பித்து வணங்கி வந்திருக்கிறார்கள். மற்ற தேவர்களும் அப்படியே கற்பிக்கப்பட்டு பரப்பிவிடப் பட்டார்கள்.
அக்காலத்தில் அவர்கள் ஏற்படுத்திக் கொண்ட தேவர்கள் பஞ்ச பூதங்களுக்கு அய்ந்து தேவர்கள் என, நிலம் - பார்வதி; நீர் - வருணபகவான், காற்று - வாயு பகவான்; நெருப்பு - அக்னி பகவான்; ஆகாயம் - ஆகாச வாணி; சூரியன் - சூரிய பகவான்; சந்திரன் - சந்திர பகவான்; சாவு - எம தர்மன்; உற்பத்தி - பிரம்ம தேவன்; வாழ்வு - விஷ்ணுதேவன்; அழிவு - ருத்திர (சிவ) தேவன்; காலை நேரம் - உஷாதேவி! இன்னும் இப்படியே பல தேவர்கள்! இவர்களுக்கு அரசன் இந்திரன்! இவனைத் தேவேந்திரன் என்றே சொல்லுவார்கள்.
இவ்வளவு பேர்களுக்கும் கணவன், மனைவிகள்! சிலருக்கு மக்களும் உண்டு! இதில் முக்கியமாய்க் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இத்தனை பேர்களையும் ஒழுக்கம், நாணயம், யோக்கியம் இல்லாத அயோக்கியத் தன்மையுடைய மனிதர்களாகவே கற்பித் துக் கொண்டார்கள். இவர்களுக்கு வரைமுறையே இல்லாமல் இருக்கிறது. கூடாதது, இழிவானது. மகாபாதகமானது என்று நாம் இன்று கூறும் முறைகளை ஆண் பெண் சம்பந்தத்திற்குக் கற்பித்துக் கொண் டார்கள். பிற்காலத்தில் நாளா வட்டத்தில் இவர்களைக் கடவுளாகவே ஆக்கி விட்டார்கள்! நாமும் இன்று இவற்றை இவர்களைத்தான் பெண்டு பிள்ளை இழி தன்மை சகிதமாகக் கடவுளாகவும், கடவுள் தன்மை யாகவும் கருதி இவர்களை வணங்கினால் நமக்கு சகல பாக்கியமும் கிட்டும் என்று நம்பித் தொழுது வணங்கி வருகிறோம்.
கடவுள் என்றால், கடவுள் தன்மை என்றால் அது என்ன? எப்படிப்பட்டது? என்பதே தெரியாதவர்களாய் இருக் கிறோம்.
மனித  உருவத்தை - மனிதத் தன்மையை - ``மனிதத் தன்மையிலும் இழி குணமுள்ள மனிதத் தன்மையை'' கடவுளாகக் கருதி வணங்கி வருகிறோம் என்பதோடு, வாய்ப்பேச்சளவில் மனிதத் தன்மைக்கு மேற்பட்ட சர்வ சக்தி கொண்ட ``எல்லாம் வல்லவர் கடவுள்'' என்று பேசி மனப்பால் குடித்து வருகிறோம்! ஆனால், ஒன்றையும் காரியத்தில் அறிய முடியவில்லை.
பொதுவாக மனிதன் பெரிதும் எதில் முட்டாள் - மடையன் என்றால், இந்தக் கடவுள் எண்ணத்திலே தான், முதலாவது முட்டாளாக, மடையனாக விளங்கு கிறான்! என்ன காரணமோ இந்த மடைமையை விளக்க, எடுத்துக்கூற அறிவு படைத்த மக்களாகிய நம்மில் எவரும் முன்வருவதில்லை.
உலகிலேயே முதன்முதலாகத் தோன்றிய தத்துவ ஞானி என்பதாக ஒருவரைக் கூற வேண்டு மானால், சரித்திர அகராதிப்படி புத்தரைத்தான் சொல்ல முடி கிறது. அடுத்தாற்போல் மேல் நாடுகளில் தோன்றியவர் சாக்கரட்டீஸ் என்ற விஞ்ஞானியாவார். இவர் புத்தருக்குப் பின் தோன்றியவரே.
இவர்களுடைய விஞ்ஞான போதம் சிந்திப்பாரற்று - சீந்துவாரற்று மறைந்து கிடக்கின்றன. பொய்க் கற்பனையையும் மடமையையும் போதித்தவர்களையே உலகம் போற்றுகிறது, பின்பற்றுகிறது.
அரசன் - ஆட்சி பார்ப்பனர்க்கு அடிமைபட்டவனாகி விட்டான். பார்ப்பான் தன் (இன) சுயநலத்திற்கே அடிமைப்பட்டவனாகி விட்டான். அவன் (பார்ப்பான்) தன்னை மேலான பிறவி என்று ஆக்கிக் கொள்வதில் தான் கவலைகொண்டு, அதற்காகவே கடவுளை வைத்து வருகிறானே ஒழிய, மேலான பிறவி என்பதற்கு தன்னிடம் ஏதாவது மேலான குணமிருக்க வேண்டுமே என்பது பற்றிச் சிறிதுகூடக் கவலைப்படவில்லை.
அதுபோலத்தான் கடவுளைக் கற்பித்தவர்களும் உலகில் `உள்ள' எல்லா வஸ்துக்களிலும் கடவுள் பெரியவர் என்று சொல்லி கற்பித்தார்களே ஒழிய மனிதத் தன்மைக்கு மேல் கடவுளிடம் என்ன பெருந்தன்மை இருக்கிறது? என்று எதையும் எவரும் நிரூபித்து மெய்ப்பித்துக் காட்டவே இல்லை.
                                    28.4.1968 அன்று விடுதலை ஞாயிறுமலரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை

Sunday, July 21, 2013

நமது கடவுளும் மதமும்

பேரன்புமிக்க தலைவர் அவர் களே! தாய்மார்களே! பெரியோர் களே! இந்த சீரங்க மாநகரில் எனது 87- ஆம் ஆண்டுபிறந்த நாள் விழாவை ஒருவார காலமாக சிறப் பாகக் கொண்டாடி வருகின் றீர்கள்.
இன்றைக்குக் கடைசி நாளில் என்னையும் வரவழைத்துப் பொன் னாடை போர்த்தியும், கை நிறைய அன்பளிப்பும், மனம் குளிர வாழ்த் துரைகளும் வழங்கியமைக்கு எனது மனம் நிறைந்த நன்றியைத் தெரி வித்துக் கொள்கின்றேன்.
சீரங்கம் என்பது மூடநம்பிக் கைக்கு சிகரம் வைத்தது போன்று காட்டுமிராண்டி ஊர் ஆகும். அப்படிப்பட்ட நகரில் சிந்தனை விழா என்ற தலைப்பில் ஒரு வார காலமாக விழாக்கொண்டாடி, சிந் தனையைக் கிளறும் கருத்துகளை, பல அறிஞர்களைக் கொண்டு வழங்கச் செய்தது ஆச்சரியமாகும்.
எனது பிறந்த நாள் விழாவை, நமது கொள்கையினைப் பிரச்சாரம் செய்ய ஒரு சாதனமாகவே கருதி, நானும் அனு மதித்து கலந்து கொள்ளுகின்றேன்.
தோழர்களே! பத்து ஆண்டு களுக்கு முன்பு கூட, நமது நாட்டு மக்களின் சராசரி வயது 32 தான். காமராசர் ஆட்சி காரணமாக இன்று 50 ஆண்டு சராசரி வயது என்று நமது நாட்டு சுகாதார நிலை அபிவிருத்தி அடைந்து உள்ளது: அந்த வளர்ச்சியின் பயனாகத்தான் என்போன்றவர்கள் 87 வயது வாழமுடிகின்றது.
இனி நமது மக்கள் 87 என்ன,  90-வயது, 100 வயது கூட வாழ் வார்கள்; எளிதில் சாகமாட்டார்கள்.
முன்பு தாய்மார்கள் கர்ப்பவதி யானால் 100-க்கு 25 பெண்கள் பிரசவத்தில் இறந்து விடுவார்கள். 100-க்கு 25 பிள்ளைகள் பிறக்கும்போதே செத்துப் போகும். பிறந்த 10 நாள், ஒருமாதத்தில், 25 போய் விடும். இன்று 100-க்கு நூறும் பிழைத்துக் கொள்கிறது. தலையில் கல்லைப் போட்டால் கூட சாகிறது இல்லை; இதற்காக நாம் காமராசருக்குத் தான் பாராட்டும், நன்றியும் தெரிவித்துக் கொள்ள வேண்டும்.
நல்ல சுகாதாரம், வைத்திய வசதி காரணமாக மக்கள் எண் ணிக்கை பெருக்கெடுத்து விட்ட தனால், அரசாங்கமும் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை மேற் கொண்டு உள்ளது.
இந்த விழாவிற்குச் சிந்தனை விழா என்று பெயர் வைத்து, பேச் சுக்கும் சிந்தனை என்று தலைப்புக் கொடுத்தது கண்டு நான் பெரிதும் மகிழ்கின்றேன்.
இந்தியாவிலேயே சிந்தனை யைப் பற்றிப்பேச வேண்டும் என் றால், பிரச்சாரம் செய்யவேண்டும் என்றால், நாங்கள்தான், எங்கள் கழகம் தான்.
சிந்தனை என்றால் பகுத்தறிவு என்பதுதான் பொருள். பகுத்தறிவு கொண்டு சிந்திப்பதை இந்த நாட் டில் நாத்திகம் என்று ஆக்கி விட்டார்கள். புராணங்களை, கடவுள் கதை களை, முன்னோர் கூற்றுகளை - சிந்திக்காமல் அப்படியே ஒத்துக் கொள்வது ஆத்திகம் என்று கூறுவார்கள்.
அறிவு கொண்டு அலசிப் பார்த்து, அறிவுக்குச்சரி என்று பட்டதை ஏற்றுக் கொண்டு, மற் றதைத் தள்ளி விடுபவர்கள் நாத்திகர்கள் என்று கூறி, வெறுப்பு உணர்ச்சியினை வளர்த்து விட்டு உள்ளார்கள்.
சிந்தனையை அடிப்படையாகக் கொண்டது ஜைன மதமும், புத்த மதமும் ஆகும். அவர்கள் முடிவு சரியோ, தப்பாகவோ இருந்தாலும், அவர்களுடைய மார்க்கத்தின் முடிவுக்கு அவர்கள் பயன்படுத்திக் கொண்டது பகுத்தறிவு ஆகும்.
சமண மதத்துக்கு பெயர் அருக மதம்; அருகமதம் அறிவை ஆதார மாகக் கொண்டு வகுக்கப்பட்டது. புத்த மதமும் புத்தியை ஆதாரமாகக் கொண்டு கொள்கை வகுக்கப் பட்டது ஆகும்.
ஜைன, பவுத்தர்களை சிந்தனை யாளர்கள் என்று கூறப்படக் கார ணம் என்னவென்றால், இவர்கள் பகுத்தறிவினை ஆதாரமாகக் கொண்டவர்களானதனால்தான்.
இதன் காரணமாக வைதிக மதக்காரர்கள் இந்த ஜைன, பவுத்தமதத்தினரை `நிரீசுவர வாதிகள்'' என்றே கூறி உள் ளார்கள்.
தேவாரத்தை எடுத்துக் கொண் டால் பல இடங்களில் ஜைன. பவுத்தர்களைக் கண்டித்துப் பாடியுள்ளார்கள்.
சம்பந்தன் 10 பாட்டுக்கு, ஒரு பாட்டாவது கண்டித்தே இருப் பதைக் காணலாம். ஜைன பவுத்த மதக்காரர்களின் மனைவிமார் களைக் கற்பழிக்க தனக்கு அரு ளும்படி கடவுளை நோக்கிப்பாடியும் இருக்கின்றார்கள்.
சமண, பவுத்த மதக்காரர்களை - சைவ, வைணவ மதக்காரர்கள் கழுவேற்றியுள்ளார்கள். சொத்துக் களைச் சூறையாடி, கொலையும் செய்து இருக்கின்றார்கள்.
இந்த ஜைன பவுத்தர்கள் செய்த அக்கிரமம்தான் என்ன? பகுத் தறிவு கொண்டு எதனையும் பார்க்க வேண்டும் என்று கூறியதுதான் ஆகும்.
கடவுள் கண்ணுக்கும் எட்டாத வன், அறிவுக்கும் எட்டாதவன், மனதுக்கும் எட்டாதவன் என்று ஆத்திகன் கூறுகின்றான். இந்த மூன்றுக்கும் எட்டாதவன், பிறகு எதற்குத் தான் எட்டுவான்? இது பற்றி ஆராயக் கூடாது; அப்படியே நம்பவேண்டும்; அதற்குப் பெயர் தான் ஆத்திகம். இப்படி எட்டாதது எப்படிக் கடவுளாகும்? என்று கேட்டால் - நாத்திகமா?
ஜீவராசிகளில் மனிதனைத் தனியாகப் பிரித்து உயர் திணை யாக ஆக்கி, மற்ற ஜீவராசிகளை அஃறிணையாக்கிப் பிரித்து வைக்கக் காரணம் என்ன? மனிதனுக்கு மற்ற ஜீவராசிகளிடம் காணப்படாத பிரத்தியேகமான அறிவு - பகுத்தறிவு இருப்பதனால் தான்! மற்ற ஜீவராசிகளுக்கு இந்தப் பகுத்தறியும் சக்தி கிடையாது.
கழுதைக்கும், எருமைக்கும் 1000  வருஷங்களுக்கு முன்பு என்ன புத்தி இருந்ததோ, அதே புத்திதான் இன்றும் உள்ளது.
ஆனால், ஓட்டுகின்றவன் மாற்றி ஓட்டுவதுமூலம் ஏதோ சில மாறுதல் இருக்குமே ஒழிய வேறு விதத்தில் மாற்றமே கிடையாது.
மனிதனோ பகுத்தறிவைப் பயன்படுத்தி சிந்தனை மூலம் வளர வேண்டியவன். அப்படி வளர்ச்சி அடையாமல் மிருகங்களைப்போல பகுத்தறிவு அற்றவனாக இருக்கக் காரணம் என்ன? அவனுக்கு அறிவு வளர்ச்சியினைத் தடைப் படுத்த கடவுளையும், மதத்தையும், சாஸ்திரங்களையும் முன்னோர்கள் நடப்பையும் கொண்டுவந்து புகுத்தி விட்டார்கள்.
அறிவுக்குச் சுதந்திரமில்லாமல், பெரியோர்கள் -   சாஸ்திரங்கள் - மதம் சொன்னபடி நடக்கணும் என்று தடைவிதித்ததன் காரண மாக வளர்ச்சி அடையவில்லை.
மற்ற நாட்டு மக்கள் கடவுள் உண்டு என்று நம்பினாலும், காலத் துக்கு ஏற்ப அறிவுக்கு ஏற்ப, ``கடவுள் ஒன்று உண்டு என்று நம்பு'' என்று அந்த அளவுக்கே சொல்ல வேண்டிய வர்களாக ஆகிவிட்டார்கள்!
ஆராய்ந்த மூட நம்பிக்கைகளை எல்லாம் ஒழித்து, எல்லா அமைப் புக்கும் காரணம் இயற்கை யான மாற்றம்தான் என்று சொல்ல வெட்கப் பட்டுக் கொண்டு - ஒரு கடவுள்தான் என்று கூறினார்கள்.
ஆனால் ஒரு கூட்டத்தார், இன்று உலக அமைப்புக்குக் கடவுள் தேவை இல்லை என்று பச்சை யாகக் கூறிக் கொண்டு வாழ்கின் றார்கள். அவர்கள்தான் இரஷ்யாக் காரர்கள். அவர்கள் சுமார் 30 கோடியாவர். அங்கு ஏழையும் இல்லை, பணக் காரனும் இல்லை; வாழ்க்கைத் தரத்திலும்பேதம் இல்லை.
காரணம், அவர்கள் அறிவை முன்வைத்து, சிந்தனையை முன் வைத்து, பார்த்துச் செய்கின்றார் கள். ``ஏன் வாழ்வில் பேதம்?'' என கேட்டு ஒழிக்கின்றார்கள் பிரத்யட் சத்துக்கு, அனுபவத்துக்கு ஒத்து வருகின்றதா? என்று பார்த்து காரியம் ஆற்றுகின்றார்கள்.
இவர்கள் மட்டும் அல்ல - சீனர் கள், ஜப்பானியர்கள், பர்மியர்கள், இலங்கைக்காரர்கள், சயாம்காரர் கள் இப்படியாக புத்தமதக்காரர் கள் இருக்கின்றார்கள். இவர் களுக்குக் கடவுளும் இல்லை, ஆத்மாவும் இல்லை, முன்ஜென்மும் இல்லை, பின்ஜென்மும் இல்லை.
இவர்களை எல்லாம் தள்ளி விட்டுப் பார்த்தால், கடவுள் நம்பிக்கைக்காரர்கள் சுமார் 150 கோடி மக்கள்தான் உலகில் வாழ் கின்றார்கள். முஸ்லிம்கள் சுமார் 70, 80 கோடிமக்கள் இருக்கலாம். கிறிஸ்தவர்கள் 100, 120 கோடி இருக்கலாம். இந்த இரு மதங் களையும் முகமதுநபியும், கிறிஸ்து வும் தோன்றி, ஒரே கடவுள்; அதற்கு உருவம் இல்லை; அதற்கு ஒன்றும் தேவை இல்லை என்று கூறி ஜாக் கிரதையாக அமைத்து விட் டார்கள்.
நமது இந்தியாவில்தான் 25 கோடி மக்களாகிய இந்து என்று கூறப்படுகின்ற நமக்குத்தான் கடவுளைப் பற்றிய தெளிவான கொள்கையே இல்லை. ஆயிரக் கணக்கான கடவுள்கள் அதுகளுக் குப் பல உருவங்கள்! மனைவி மக்கள். சோறு, சாறு என்று ஆக்கிவைத்து உள்ளார்கள்.
நமது கடவுள்கள் காட்டு மிராண்டிக் காலத்தில் ஏற்பட்டவை தான் இன்றும் உள்ளன.
முஸ்லிமும், கிறிஸ்தவனும் திருத்தப் பாடு செய்து கொண்டது போல இவனும் செய்துகொள்ள வில்லை. அதன் காரணமாகத் தானே நாம் இன்றும் காட்டு மிராண்டியாக உள்ளோம்?
கிறிஸ்தவனும், முஸ்லிமும் கடவுள் ஒருவர்தான்; உருவம் இல்லை. ஒழுக்க மானவர், கருணையானவர், பெண்டுபிள்ளை சோறு, சாறு வேண்டாதவர் என் கின்றான்!
நமது மதக்காரன் அப்படி யாரடா சொன்னது? எங்களுடைய கடவுளுக்குப் பல உருவம், பெண்டு பிள்ளை, வைப்பாட்டி, சோறு, சேலை, நகை எல்லாம் வேண்டும் என்று கூறுவதுபோல கடவுளை அமைத்து உள்ளாள்.
இந்த ஊர் ரெங்கநாதன், சீரங் கத்திலே இருந்து உறையூருக்கு வைப்பாட்டி வீட்டுக்குத் தூக்கிப் போகும் விழாவானது 1965-லும் நடக்கின்றதே, சிந்திக்க வேண் டாமா? மக்கள் அய்ஸ்கட்டியைத் தொட்டால் ஜில் என்கின்றது. நெருப்பைத் தொட்டால் சுடுகின் றது. இதைப் பிரத்தியட் சத்தில் நாம் உணர்ந்து கொள்ளுகின்றோம். கடவுளைப்பற்றிய உணர்வு எதன் மூலமாவது நாம் காண முடி கின்றதா? இல்லையே!
கடவுளை உண்டு பண்ணி யவன், மனிதனைப் போலவே அதற்கு உருவம், ஆசாபாசங்கள் நடப்புகள் எல்லாம் கற்பித்து உள்ளான். நாம் நல்லது பண்ணி னால், கடவுள் நமக்கு நல்லது பண்ணுவார்; தீமை பண்ணினால், நமக்குத் தீமை பண்ணுவார் என்று கூறப்படுகின்றது.
நல்லது  பண்ணவும்,  தீமை பண்ண
வும்  நமக்கு அதிகாரம் உள் ளது. நமக்கு நன்மையும், தீமையும் அளிக்கக்கூடிய அதிகாரம் கடவு ளுக்கு மட்டும் ஏன் இருக்க வேண்டும்?
கடவுள்தானே நம்மை நல்லதும், தீமையும் பண்ணச் செய்தவன்; அவன் அன்றி ஒன்றும் அசையாது என்கிறாயே, அப்படி இருக்க - அவன் ஏன் நன்மையும், தீமையும் நம் காரியங்களுக்காக செய்ய வேண் டும்? மக்கள் சிந்திக்க வேண்டும்.
இன்றைக்கு அறிவு வளர்ச்சி யின் காரணமாக மற்ற நாட்டுக் காரன்கள் சிந்தனை செய்து, எவ்வளவு விஞ்ஞான அதிசய அற்புதங்களை எல்லாம் கண்டு முன்னேறுகின்றான்? நமக்கு மட்டும் ஏன் இல்லை? நமக்குச் சிந்தனைச் சக்தி உரிமை இல்லை.
சிந்திப்பது பாவம் என்று, மதத்தின் பேரால், முன்னோர்கள் நடப்பின் பேரால்தடை விதிக்கப்பப் பட்டு உள்ளது.
இதன் காரணமாகத்தான் ஒரு நெருப்புக் குச்சியைக் கூட நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. மற்ற நாட்டுக்காரர்களிடையே தோன் றுவதுபோல, நம்நாட்டில் அதிசய அற்புதங்களைக்கண்டு பிடித்தவர் களையே காணமுடிய வில்லையே.
காரணம் என்ன? நாம் சிந்த னையின் சக்தியை உணர வில்லை; மற்ற நாட்டுக்காரர்கள் உணர்ந்து பயன்படுத்து கின்றார்கள்.
நமக்கு அரசாங்கமும் 10,000-கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகின்றது. இதனுடைய வேலை மனிதனை மடையனாக வைத்து இருக்கவேண்டியது என்று தான் நடந்து வந்து இருக்கின்றது.
மதத்தினுடைய வேலையும் மனிதனை மடையனாக வைத்து இருக்கச் செய்வதுதான் ஆகும்.
நமது சாஸ்திரங்களும் இப்படியே யாகும்.
நமது நாட்டை விட்டு வெளியே போனால், நம்மைப்பற்றி மற்ற நாட்டுக்காரர்கள் என்ன கருத்துக் கொண்டு உள்ளார்கள் தெரியுமா இந்தியா ஒரு மூடநம்பிக்கை நிறைந்த நாடு; முட்டாள்கள் நிறைந்த நாடு என்பதுதானே?
தோழர்களே! எதற்காக நெற் றியில் நாமம் போட்டுக் கொள்வது? எதற்காக விபூதி பூசிக் கொள்வது? முட்டாள் என்று காட்டிக் கொள் வதைத் தவிர, வேறு என்ன? எதையும் சிந்தித்துப் பார்ப்பதே, நடப்பதே மனிதன் முன்னேற வழி என்று விரித்துரைத்தார்கள்.
மேலும் பேசுகையில், இன் றைக்கு ஏற்பட்டு உள்ள பாகிஸ் தான், சீனா ஆக்கிரமிப்பு பற்றியும், போர் நிறுத்தம் ஏற்பட்டு உள்ள போதிலும் அபாயமும், நெருக்கடியும் நீங்கி விட்டதாகக் கூறமுடியாது. பொது மக்கள் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பும் உதவியும் செய்ய வேண்டியதோடு ஒற்றுமையாகவும் இருக்கவேண்டும்.
துரோகச்  செயல்கள் நடை பெற்றால், அரசாங்கத்துக்குத் தெரிவித்து அம்பலப்படுத்த வேண்டும்.
                                                  சீரங்கத்தில் 17.9.1965 இல் தந்தை பெரியார்  ஆற்றிய உரை (`விடுதலை, 26.9.1965)

Sunday, July 7, 2013

கீதையையும்... கிருஷ்ணனையும்...

கீதையையும், கிருஷ்ணனையும் செருப்பால் அடிக்காவிட்டால் நாம் சூத்திரர்தானே!

தந்தை பெரியார் 1926 முதல் கடவுள்களையெல்லாம் இழிவு படுத்தி வருகின்றேன். கடவுள் உருவங்ளை உடைத்திருக் கின்றேன். படங்களைக் கொளுத்தி இருக்கின்றேன். அப்படிச் செய்த நான் இன்னும் 93 வயதாகியும் வாழ்ந்து கொண்டிருக்கின்றேனே! அட முட்டாள்களா! இதைப் பார்த்தாவது கடவுள் இல்லை என்பதை உணர வேண்டாமா?
மனிதனை மடையனாக்கும் சாதனங்கள்தான் இந்தக் கோயில்கள், கடவுள்கள், உற்சவங்கள் யாவும், மனிதனை அறிவாளிகளாக்க இவைகளையெல்லாம் ஒழிக்க வேண்டுமென்கின்றோம்.
இது மதப்பிரச்சாரமல்ல; கடவுள் பிரச்சார மல்ல. கதாகாலட்சேபமல்ல; இவைகளுக்கு மாறான பிரச்சாரமாகும். இது உங்களுக்கு வெறுப்பாக இருக் கும். இதற்காக நீங்கள் எங்களை அடிக்கக்கூடத் தோன்றும். காரணம், வெகுகாலமாக அறிவற்று, மானமற்று இழிவினை ஏற்றுக் கொண்டிருக்கிற மக்களிடையே அவர்களின் மானமற்ற தன்மையையும், இழிவையும் எடுத்துச் சொல்லி அவர்களை அறிவு பெறும்படியாகச் செய்யும் மனித சமுதாயத் தொண்டினைச் செய்து வருகின்றோம்.
நாங்கள் கடவுள் அவதாரம், கடவுள் புத்திரர், கடவுளின் தூதர்; நாங்கள் சொல்வதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று சொல்லவில்லை. நாங்கள் சொல்கிறோம்; உங்கள் அறிவைக் கொண்டு சிந்தித்து ஏற்கக் கூடியதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
கடவுளையும், மதத்தையும் குறை சொன்னால் மனம் புண்படுகிறது என்கின்றான். இந்தக் கடவுளும், மதமும்தானே எங்களைச் சூத்திரர்களாக, பார்ப் பானுக்கு வைப்பாட்டி மக்களாக ஆக்கி வைத்திருக் கிறது. இது எங்கள் மனத்தைப் புண்படுத்துமா? இல்லையா? இந்த இழிவை நீக்கிக் கொள்ள முயற்சிப்பது எப்படிக் குற்றமாகும்? நாம் கடவுளைக் குறை சொன்னால் பார்ப்பான் மட்டுமல்ல, அவனு டைய வைப்பாட்டி மகன் என்று நினைத்துக் கொண்டு நெற்றியிலே சாம்பலையும், மண்ணையும் பூசிக் கொண்டி ருக்கின்றானே, அவன்தான் நம்முடன் சண்டைக்கு வருகின்றான்!
நான் ஒரு இந்து என்பதை ஒப்புக் கொண்டால் சூத்திரன் என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும். கடவுளை ஒப்புக் கொண்டால் (கிருஷ்ணன் கீதையில் நான்தான் 4 ஜாதியாக பிரித்தேன்) சூத்திரன் 4-ஆவது ஜாதி என்பதை நான் ஒப்புக் கொண்டுதானே ஆகவேண்டும்? இந்தக் கீதையையும், கிருஷ்ணனையும் செருப்பாலடிக்காவிட்டால் நான் சூத்திரன் தானே? இந்தக் கடவுளையும், மதத்தையும் நம் இழிவிற்கு ஆதாரமான மற்றவைகளையும் ஒழிக்காத வரை சூத்திரன்தானே!
இந்துவும், முஸ்லிமும், கிறிஸ்தவர் களும் தங்கள் மதத்தைக் காப்பாற்றிக் கொள்ளப் பலாத்காரத்தில்தான் ஈடுபட்டார்கள். அறிவுப் பிரச்சாரம் செய்த புத்தர் களையும் சமணர்களையும் கொலை செய்தார்கள், கழுவேற்றி னார்கள் வீடுகளுக்குத் தீயிட்டார்கள். இன்னும் எத் தனையோ கொடுமைகளைச் செய்து அவர்களை யெல்லாம் அழித்தார்கள். இப்போது மக்களிடம் கொஞ்சம் அறிவு வளர்ந்திருக்கிறது. ஆதலால் நாம் மிஞ்சி இருக்கிறோம். இல்லாவிட்டால் நம்மையும் ஒழித்திருப்பார்கள்.
பொய் இல்லாமல் மனிதத் தன்மைக்கு மேம்பட்ட சக்தியில்லாத மதம் எதுவுமே கிடையாது. மதம் என்றால் அதற்கொரு கடவுள் இருந்தாக வேண்டும். மனிதத் தன்மைக்கு மேம்பட்ட சக்தியுடையவன் இருந்தாக வேண்டும்.
இதுவரை இந்த அரசாங்கங்கள் யாவும் பார்ப்பான் சார்புடைய அரசாங்கமாக கடவுள், மத, சாஸ்திரங் களைக் காப்பாற்றக் கூடிய அரசாங்கமாக இருந்த தால் நமது கருத்துகள் பரவ முடியாமல் போய்விட்டது. இன்றைய ஆட்சி பகுத்தறிவுக் கொள்கை கொண்ட வர்களாட்சி யானதால் நமது கருத்துகள் தீவிரமாகப் பரவுகின்றன. தற்போது உலகம் வேகமாக மாறிக் கொண்டு போகிறது. எங்குப் போகுமென்று சொல்ல முடியாது. அதற்கேற்ப மனிதன் மாறியாக வேண்டும்.
கடவுள் வந்த பின்தான் மனிதன் மடையனானான். கடவுள் கதைகளைப் படித்ததினால், நம்பியதினால் முட்டாள் ஆனான், சூத்திரன் ஆனான், 4-ஆம் சாதி 5-ஆம் சாதி ஆனான். ஆனதனால் மனிதனை மனித னாக்க வேண்டுமானால், அவனை எந்தச் சாதனம் இழிவுபடுத்திற்றோ, அதனை ஒழிக்கணும். மனித னுக்கு அறிவிருக்கிறது. என்றாலும் அவன் மனதில் கடவுள் எண்ணத்தைப் புகுத்தி விட்டதால் மடைய னாகி விட்டான். மதம் மனிதனை அறிவைக் கொண்டு சிந்திக்க விடாமல் தடுத்து விட்டது. நம் சூத்திரத் தன்மைக்கு, இழிவிற்குக் காரணம் என்ன வென்றால், கடவுள், மதம், சாஸ்திரம் என்கின்றான். இவைகளை ஒழிக்காமல் நம் இழிவை ஒழிக்க முடியாது என்பதால் தான் இவற்றை ஒழிக்கப் பாடு படுகின்றோமே தவிர வேறு எதனாலும் அல்ல என எடுத்துரைத்தார்.
19, 20, 22, 24 25.6.1971 ஆகிய நாள்களில் எஸ்.ஆடுதுறை, விருத்தாசலம், மேட்டுப்பாளையம், அவினாசி, திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய ஊர்களில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை (விடுதலை, 3.7.1971).