Sunday, June 17, 2012

மதமும் - மனித சமதர்மமும்


உலகத்தில் உள்ள மக்கள் அனை வரையும் பீடித்திருக்கும் ஒரு பெரும் வியாதி கடவுள்கள், மதங்கள் என்னும் இரு தொத்து நோய்களேயாகும். இவற்றுள் கடவுள்கள் நோயைவிட மதங் கள் நோய் என்பது மிகமிகக் கொடிய தாகும்.
உண்மை கடவுள் என்கின்ற தத்துவத் தால் மக்கள் பிரிக்கப்பட்டிருக்கவில்லை; ஆனால் எப்படிப்பட்ட மதத்தாலேயும் மக்கள் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏன் இப்படிச் சொல்லுகிறோம் என்றால் கடவுளைப் பற்றிய ஒரு கருத்துள்ளவரும், மதத்தால் வேறுபட்டவராகப் பிரிக்கப்பட்ட வராக இருந்து வருகிறார்கள். ஆனால் கட வுளைப் பற்றிய வேறு வேறு கருத் துள்ளவர்களும் மதத்தால் ஒன்று பட்டிருக்கிறார்கள்.
உதாரணமாக, ஒரே கடவுள். அதுவும் உருவமற்ற கடவுள் என்கின்ற எண்ண முள்ள முஸ்லிம், கிறித்துவர், பிரம்ம சமாஜத்தார் முதலிய ஏகதெய்வக் கொள்கைக்காரர்களும் மதம் காரணமாக வேறுபட்டிருக்கிறார்கள். பலவிதமான கடவுள் தன்மை கொண்டவர்களும் கடவுளே இல்லை என்பவர்கள் மாயாவதி, சூனியவாதி, உலகாயதவாதி, இயற்கை வாதி, சார்வாகன், வேதாந்தி முதலிய பலரும் மதம் காரணமாக இந்துக்களாகவே இருந்து வருகிறார்கள். எனவே மக்களைப் பிரித்து வைத்திருப்பதற்குக் கடவுளைவிட மதமே முக்கிய காரண மாக இருந்து வருகிறது.
கடவுள் உணர்ச்சி வேறு பல காரணங் களுக்குக் கேட்டை விளைவிப்பதாக இருந்தாலும் உலக பொது நலனுக்கும் ஒற்றுமைக்கும் கேடு உண்டாக இடம் தந்து மக்களுக்கு ஒன்றுபோல் கேடு செய்து வருவது மதங்களேயாகும்.
கடவுள்கள் திருத்தத்திற்கு உட்பட்ட வையாகலாம். ஆனால் மதம் திருத்தப் பாட்டுக்கு இடம் கொடுப்பதில்லை. மதத்தின் அழிவுதான் திருத்தம் என்று சொல்ல வேண்டி இருக்கிறது.
மதம் பெரிதும் சடங்கையும், காரி யத்தையுமே அடிப்படையாகக் கொண்டி ருக்கிறது. ஆதலால் மதம் என்பது ஒரு மனிதனின் செய்கை, நடப்பு ஆக இருக்க வேண்டி இருப்பதால் வெளிப்படையாக பிரிந்திருக்க வேண்டியதாகிறது.
கடவுளைப் பற்றிய கருத்து இரகசி யமாக வேறு யாருக்கும் தெரியாததாக இருக்கலாம். ஆதலால் கடவுளைப் பற்றி ஒருவருக் கொருவர் மாற்று அபிப்பிராயம் கொண்ட வர்கள் ஒன்றாக இருக்கலாம். அதனால்தான் மனிதன் கடவுளை ஏமாற் றுகிறான். ஆனால் மதம் வெளிப்படையாய் வேஷம் போட்டு நடித்துத் தீர வேண்டி யதாகவே இருக்கிறது. ஆதலால் ஒரு மனிதன் மதத்தை ஏமாற்ற முடியாது; ஏமாற்றினால் தெரிந்துவிடும்.
ஆகவே, மனித சமுதாயத்தை ஒன்றுபடுத்தவும், சமதர்மம் தழைத்து ஓங்கவும் மதங்களே முதலில் அழிக் கப்பட வேண்டும். ஏனெனில் கடவுள் முன்னி லையில் மக்கள் யாவரும் ஒன்று என்று சொல்லி எந்தக்காரியத்தையும் துவக்கலாம். ஆனால் மதங்களின் முன் னிலையில் எல்லா மதமக்களும் ஒன்று என்று சொல்லிவிட முடியாது. மதங்களாலேயே மக்கள் வேறு படுத்தப்பட்டு இருக்கிறார்கள். எனவே மக்கள் யாவரும் ஒன்று. சரிசமம் என்றால் மதங்கள் அழிய வேண்டி வந்து விடுமாதலால் மதங்கள் மக்களை ஒன்றுபடுத்தச் சம்மதியா.
இந்தியாவில் அநேக மதங்கள் இருக் கின்றன. அநேகமாக இந்தியாவின் பூர்வ குடிகளே இன்று எல்லா மதக் காரர்களாகவும் இருந்து வருகிறார்கள். ஆரியர்களும், மங்கோலியர்களும் சில மதங்களில் கலந்து இருக்கிறார்கள் என்றாலும், அவர்கள் மிகக் குறைந்த எண் ணிக்கையுடை யவர்களாகத்தான் இருக்கக் கூடும். ஆனாலும், இந்தியப் பூர்வகுடிகளுக்கு என்ன மதம்? என்ன கொள்கை? இருந்தது என்று காட்டும் ஆதாரம் எதுவுமே காணக் கிடைப்பதில்லை. விளக்கமாகச் சொல்ல வேண்டு மானால் ஆரியர் இந் நாட்டிற்கு வருவதற்கு முன் இங்கு என்ன மதம் இருந்தது என்பது இதுவரை யாரா லும் தெளிவாக்கப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆரியர் இந் நாட்டுக்கு வரும் முன் நிலம், நீர், இடம் காரணமாக மக்கள் பழக்க வழக்க இயற்கைத் தன்மைகளில் பேதம் இருந்ததாகக் காணப்படுவதல்லாமல் மதம், மதத்தின் பயனால் ஏற்பட்ட வேஷம், சடங்கு ஜாதி என்பவை காரணமாகப் பேதம் பிரிவு இருந்ததாகச் சொல்லுவதற்கு அறிகுறி களைக் காண முடியவில்லை.
மதங்கள் பிரிவினைக்கும், பேதத் திற்கும் காரணமாய் இருப்பது மாத்திர மல்லாமல் மடமைக்கும், மூடநம்பிக்கைக் கும் காரணமாக இருக்கின்றன. பயத்தின் அதிவாரத்தின் மீது கடவுள் இருக்கிறார் என்றாலும் மூடநம்பிக்கை, மடமை என்கின்ற அதி வாரத்தின் மீதே மதங்கள் இருக்கின்றன. இம்மாதிரி மதங்களே தான் கடவுளையும் சிறுமைப்படுத்திவிட்டன என்பது மாத்திரம் அல்லாமல், எதற்கு ஆகக் கடவுள் தேவை என்றும் சொல்லப்படுகின்றதோ, எதற்கு ஆகக் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று எண்ண மக்கள் செய்யப்படுகின்றார்களோ அதற்கு மாறாகப் பலன் உண்டாகும்படி மதங்கள் செய்துவிடுகின்றன.
மற்றும், எந்த மதமும் மக்களுடைய இயற்கைக் குறைபாடுகளைப் பரிகாரம் செய்யவில்லை என்பது மாத்திரமல்லாமல் மதங்களால் மக்களுக்குப் பல செயற்கைக் குறைபாடுகளும் உண்டு பண்ணப் படுகின்றன. எனவே, மனித தர்மவாதி, மனித சமதர்மவாதி, (மனித) ஜீவ காருண்யவாதி, மதங்களால் பாதிக்கப்படாதவனாகி மதங் களில் இருந்து வெளிவந்து அல்லது மதங்களுக்கெல்லாம் மேம்பட்டவனாக இருந்து கொண்டு தொண்டாற்ற வேண்டியவனாகிறான்.
                                                                                                                                                                       குடிஅரசு 27.07.1946

No comments:

Post a Comment