Thursday, November 25, 2010

சாஸ்திரங்கள் கூறும் ஜாதிகளின் கதை


ஒரே நாட்டு மக்கள் பிறவியில் பல ஜாதிகளாகப் பிரிக்கப்பட்டிருப்பது இந்தியாவில் தான் இருக்கின்றதே தவிர வேறு எங்கும் இல்லை.

பொதுவாக ‘ஜாதிஎன்பது, இந்துக்கள் என்பவர் களுக்குள் - ஆரியக் கொள்கைகளுக்கு அடிமைப்படுபவர்களுக்குள் மாத்திரம் தான் - கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டதுஎன்கின்ற கொள்கையின் மீது நாலு ஜாதிகளாக, அதுவும் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. இவை முறையே ஒன்றுக்கொன்று தாழ்ந்ததாகவும் - கடைசி ஜாதி மிக்க இழிவானதாகவும் கருதப்படுவதாகக் குறிக்கப்பட்டிருக்கின்ற விவரம் யாவரும் அறிந்ததேயாகும். இப்படி இருந்தாலும், இப்போது அனேக ஜாதிகள் இருப்பதற்கு என்ன காரணம்? அதாவது, “ஆதியில் கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட நான்கு வருணத்தாரும் தங்களில் ஜாதி முறை தவறிக் கலப்பு’, ‘விபச்சாரம்செய்து கொண்டதால் ஏற்பட்ட பிரிவுகளென்றும் அப்படிப்பட்ட பிரிவுகளுக்குப் பஞ்சம ஜாதி யார்கள் என்று பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறதென்றும் ஆதாரங்களில் இருக்கின்றன.

அப்படிச் சொல்லப்படுவதிலும் இப் பஞ்சம ஜாதிகள்என்பது, இப்போது நமது நாட்டில் பெரும்பான்மையாய் இருக்கும் பல முக்கியமான ஜாதிக்காரர்கள் என்பவர்களே பெரிதும் இந்த விபச்சாரப் பெருக்கால் ஏற்பட்ட பஞ்சம ஜாதிகள் என்றே காட்டப்பட்டிருக்கின்றது. ஆகவே, அதில் உதாரணமாக இன்று தமிழ்நாட்டில் பிரபல ஜாதியும் பிரமுக ஜாதியும் என்று சொல்லிக் கொள்ளப்படுவதான வேளாள ஜாதியார் எனப்படுபவர்களே பஞ்சம ஜாதியில் சேர்ந்தவர்கள் என்றும், பஞ்சம ஜாதியிலும் பிராமணன், க்ஷத்திரியப் பெண்ணைச் சோரத்தால் கலந்ததால் பிறந்தவர்கள் என்று குறிக்கப்பட்டிருக்கின்றது.

இவர்களில் - இந்தப்படியான வேளாளர் என்பவர்களில், விவசாயம் செய்பவர்களாக இருந்தால் அவர்களுக்குக் காணியாளர்என்றும் பதவிகளில் இருந்தால் வேளாண் சாமந்தர்என்றும் குறிக்கப்பட்டிருப்பதுடன், இவற்றிற்கு ஆதாரம் சுப்ரபோதகம், பிரம்ம புராணம், வைகாநசம், மாத வியம், ஜாதி விளக்கம் என்கின்ற நூல்கள் என்றும் உள்ளது.

பிராமணன் - வைசியப் பெண்ணுடன் கலியாணத்தால் பிறந்த பிள்ளை அம்பட்டன் என்றும், சோரத்தால் பிறந்த பிள்ளைகள் குயவர், நாவிதர் என்றும் உள்ளது.

அதுபோலவே, பிராமணன் - சூத்திரப் பெண்ணுடன் கலியாணத்தால் பிறந்த பிள்ளை பரதவர்அல்லது செம்படவர்என்றும் சோரத்தால் பிறந்த பிள்ளை வேட்டைக்காரன்அல்லது வேடுவர்என்றும் உள்ளது.
அதுபோலவே, பிராமணன் க்ஷத்திரிய ஜாதிப் பெண்ணை விவாகம் செய்து கொண்டதால் பிறந்த பிள்ளைகளே சவர்ணர்எனவும், ‘தெலுங்கர்எனவும் உள்ளது.

பிராமணப் பெண்ணுடன் சூத்திரன் விபச்சாரம் செய்ததால் பிறந்தவர்கள் சண்டாளர்கள்என்றும் உள்ளது.
பிராமணகுலப் பெண்ணுடன் சண்டாளர் கூடிப் பிறந்த பிள்ளைகள் சருமக்காரர்அதாவது சக்கிலியர்என்றும், க்ஷத்திரிய குலப் பெண்ணுடன் சண்டாளர்கள் சேர்வதால் பிறந்த மக்கள் வேணுகர்’ (வேணுகானம் செய்பவர்கள்), ‘கனகர்’ (தங்கவேலை செய்பவர்), ‘சாலியர்’ (நெசவு வேலை செய்பவர்) ஆவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாதிரி கீழ் மேல் ஜாதிகள் கலந்து வந்ததால் ஏற்பட்ட ஜாதிகளில் ஒன்றாகிய அயோவக ஜாதிப் பெண்ணிடம், நிடாதனுக்குப் பிறந்த பிள்ளைகள் பார்க்கவர்கள்என்றும் உள்ளது. இந்தப்படியே, இப்போது அமுலில் உள்ள ஜாதிகளெல்லாம் குறிக்கும்படியாகவே இன்னும் அனேக விஷயங்கள் காணப்படுகின்றன. அபிதான கோசம், அபிதான சிந்தாமணி முதலிய எல்லா இந்துப் பண்டிதர்களாலும் ஆதாரமாய்க் கொண்டாடப்படும் புத்தகங்களிலும் மற்றும் பல ஜாதிகளை இதைவிடக் கேவலமாகவும் குறிக்கப்பட்டிருக்கின்றதோடு நான்கு ஜாதிகள் தவிர, மற்ற ஜாதிகள் எல்லாம் மேற்கண்ட நான்கு ஜாதிக்குள் மேல் கீழாகவும், கீழ் மேலாகவும் கலியாணம் செய்தும், விபச்சாரம் செய்தும் பிறந்த பிள்ளைகளாக ஏற்பட்டவர்கள். செட்டியார், ஆச்சாரியார் இவர்களைப் பற்றியும் மிக மிக இழிவாகக் கூறப்படுகின்றது.

ஆகவே, ஜாதியைக் கட்டிக் கொண்டு அழுவது இவ் விழிவுகளை மறைமுகமாய் ஏற்றுக் கொள்வதையே ஒக்கும்.
(‘குடிஅரசு’- தலையங்கம் 16.11.1930)

No comments:

Post a Comment